கவிதை நிகழ்ச்சி. ஒவ்வொரு மூன்றாவது ஞாயிறுக்கிழமை தோறும் கவிதைப் போட்டி நடக்கும் அரங்கம். பரிசு பெரிய தொகையில்லை தான். வெற்றி பெருபவருக்கு முதல் பரிசு ஐம்பது ரூபாய் தான். ஆனால், இதில் பணம் முக்கியமில்லை. அங்கிகாரம் தான் முக்கியம்.
அறுபது, எழுபது பேர் கூடியிருக்கும் இடத்தில் நமது கவிதைக்கு பரிசு கிடைப்பதே பெருமை. வெற்றி தொகைக்காக எந்த எழுத்தாளரும் கவலைப்பட மாட்டார்.
அது வரை பத்து பேர் கவிதை படித்து விட்டனர். தலைப்பு : 'காத்திருப்போம்'. பதினொன்றாவதாக சரண் கவிதை படிக்க சென்றான். அவனது புனைப்பெயர் தமிழ் பிரியன். புனைப்பெயரில் அவனை அழைப்பார்கள்.
தன் கவிதை காகிதத்தை எடுத்துக் கொண்டு கவிதை படிக்க மேடையில் எறினான் தமிழ் பிரியன்.
" எத்தனையோ மதங்களை
இங்கு இறக்குமதி செய்துவிட்டு
இங்கு பிறந்த புத்தனை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பிறகு
மீண்டும் ஒரு புத்தன்
பிறக்க மாட்டாரா என்று காத்திருக்கிறோம் ! " - என்றான்.
எடுத்த எடுப்பிலே பல கைதட்டல்கள்...
அதன் பின்...
" ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வைத்து விட்டு
ஜாதி ஒழிய வேண்டும் என்று காத்திருக்கிறோம்.. ! "
- மீண்டும் கைதட்டல்கள் அரங்கம் நிரைந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிதை படித்து மேடையில் இருந்து இறங்கினான் தமிழ் பிரியன்.
அவன் கவிதை படித்த பிறகு பல பேர் கவிதை படித்தனர். எல்லோரும் கவிதை படித்த பிறகு பரிசு கவிதை அறிவிக்கப் பட்டது. இந்த முறை தனது கவிதை பரிசு கவிதையாக தேர்வாகும் என்று எதிர்பார்த்தான். ஆனால், வேறு ஒருவரின் கவிதையை பரிசு கவிதையாக அறிவிக்கப்பட்டது. ஐம்பது பேர் கவிதை படிக்கும் பரிசு என்பது மிக பெரிய விஷயம். அவர்களின் கைதட்டல்கள் மிக பெரிய பரிசு என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான் தமிழ் பிரியன்.
அரங்கத்தை விட்டு தமிழ் பிரியன் வேளியெறும் போது ஒருவர் அவனிடம் பேச வந்தார்.
"தம்பி... என் பெரு எழிலவன் " என்றார்.
வயது ஐம்பது மேல் இருக்கும். தமிழ் பிரியன் இதற்கு முன் இந்த கவிதை நிகழ்ச்சியில் அவரை பார்த்ததில்லை. ஆனால், கவிதை நிகழ்ச்சியில் இது போன்ற அறிமுகங்கள் தமிழ் பிரியனுக்கு புதிதில்லை. அவனும் எழிலவனிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.
" என்ன பண்றீங்க...?" என்றார்.
" நான் சாப்ட்வேர் கம்பேனியில வேலை செய்றேன்..." - என்றான்.
" நல்லது... கவிதையில ரொம்ப ஈடுபாடு அதிகமா..." - எழிலவன்.
" ஆமா சார்... நம்மலுடைய எண்ணத்தையும், நினைவையும் கவிதை மாதிரி வேறு எதுலையும் பதிவு செய்ய முடியாது... கவிதை படிக்கிறது, எழுதுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் " - என்றான் தமிழ் பிரியன்.
" சந்தோஷம்... உங்க கவிதை முதல் கருத்து ரொம்ப பிரமாதம்.. ஆனா... இரண்டாவது கருத்து எனக்கு உடன்பாடுயில்ல..." - எழிலவன்.
" ஏன் சார்...?"
" தம்பி... ஜாதி அடிப்படையில இட ஒதுக்கீடு ஜாதி ஒழிக்க மருந்து... அது ஜாதிய வளர்க்குறதுயில்ல... எங்க வீட்டுல நான் தான் படிச்ச முதல் தலைமுறை... இன்னும், OBC, SC, ST இருக்குறவங்க படிக்காத தலைமுறைங்க கிராமத்துல இருங்காங்க... அவங்கல முன்னுக்கு கொண்டு வரதுக்கு தான் இந்த இட ஒதுக்கீடு புரிஞ்சுக்கோங்க..." - எழிலவன்.
" இதுனால எத்தனையோ திறமையான மாணவர்கள் பாதிக்க படுவாங்களே ! இத பத்தி யோசிச்சு பார்த்திங்களா...?" - தமிழ் பிரியன்
" வாய்ப்பு கொடுத்தா தான் திறமை வெளியவே தெரியும் !" - எழிலவன்
"இட ஒதுக்கீட்டால தாழ்த்தபட்டவங்க எல்லோரும் முன்னுக்கு கொண்டு வர முடியும் நினைக்கிறீங்களா...?" - தமிழ் பிரியன்
" இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவங்கள முன்னுக்கு கொண்டு வர ஒரு வழி தான்... அதுவே முழு வழினு சொல்ல முடியாது... இன்னும் பல வழிகள் அரசாங்கள் முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கு..." - எழிலவன்
" நீங்க என்ன தான் சொன்னாலும்.... அதிகம் மார்க் எடுக்குற மாணவன் பாதிக்க படுறானே..." - தமிழ் பிரியன்
" தம்பி... OC மாணவனுக்கு எவ்வளவு மார்க் எடுக்கனும்...சொல்லுங்க.." - எழிலவன்
" 95 இல்ல 96 இருக்கும்..." - தமிழ் பிரியன்
" சரி BC மாணவனுக்கு ?" - எழிலவன்
" 92 இருக்கும்..." - தமிழ் பிரியன்
" OBCக்கு...?" - எழிலவன்
" 88 இருக்கலாம்..." - தமிழ் பிரியன்
" நாலு தலைமுறையா படிச்ச OC மாணவன் 95 மார்க் எடுக்கனும், முதல் தலைமுறையில படிக்கிற OBC மாணவன் 88 மார்க் எடுக்கனும்னு நீயே சொல்லுற...! இந்த கேள்விக்கு பதில் சொல்லு... இந்த இரண்டு மாணவனுக்கும் 7 மார்க் தான் வித்தியாசம். OC மாணவன வழிகாட்ட நிறைய பேர் அவன் குடும்பத்துல இருப்பாங்க... சொல்லி கொடுக்க ஆளுங்க இருப்பாங்க. ஆனா OBC மாணவனுக்கு அப்படி குடும்பத்துல யாரும் இருக்க மாட்டாங்க..."
எழிலவன் கொடுக்கும் விளக்கத்தை திகைப்புடன் கேட்டான் தமிழ் பிரியன். அவர் விளத்தை மேலும் கேட்க வேண்டும் என்று தான் தமிழ் பிரியன் மனதில் இருந்தது.
" இப்படி OBC, SC, ST னு இட ஒதுக்கீடு மூலமா படிச்சா, நாலு தலைமுறை கழிச்சு அவங்களும் முன்னுக்கு வந்திருப்பாங்க... அவங்க தலைமுறை முன்னுக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த இட ஒதுக்கீடு தேவையில்ல... இவங்க எல்லாம் முன்னுக்கு வர நாம இன்னும் நிறைய தலைமுறை காத்துக்கிட்டு இருக்கனும்..."
“இட ஒதுக்கீட்டால திறமை பாதிக்கப்படுது சொல்லுறவங்க... போட்டியில்லாத வரலாறு, அறிவியல் ஏன் படிக்க மாட்டிங்குறாங்க...? திறமை இருக்குறவங்க எது படிச்சாலும் முன்னுக்கு வர முடியும். அந்த காலத்துல ஏமாந்து இழந்த உரிமைய இட ஒடுக்கீட்டு பெருல மறு பங்கீடு பண்றோம்... அவ்வளவு தான். ” என்றான் எழிலவன்
"நீங்க சொல்லுறது உண்மை இருக்கு சார்... எனக்கு நல்ல புரிய வச்சிங்க.." - தமிழ் பிரியன்
" தம்பி உங்களுக்கு சின்ன வயசு... படிக்க நேரம் நிறைய இருக்கும்... நிறையா படிங்க... அப்போ தான் உங்களுக்கு உண்மை புரியும்... தப்பா பிரச்சாரம் கேட்டு குழம்பாதிங்க…. நான் உங்களுக்கு சொன்னது பத்து சதவீதம் கூட இல்லை..." -எழிலவன்.
" ரொம்ப நன்றி சார்..." - தமிழ் பிரியன்.
"சரி தம்பி... அடுத்த கவிதை நிகழ்ச்சியில பார்ப்போம் " என்றார்.
"பார்ப்போம் சார்..." என்று சொல்லி அந்த இடத்தை விட்டு தமிழ் பிரியன் நகர்ந்தான்.
"யப்பா..சரியான மொக்கை. பேசி...பேசி... என் டைம் வேஸ்ட் பண்ணிட்டான்..." என்று தமிழ் பிரியன் தன் மனதில் சொல்லிக் கொண்டு வண்டியை எடுத்தான். ஒரு இளைஞனுக்கு இட ஒதுக்கீடு பற்றி விளக்கி புரிய வைத்த சந்தோஷத்தில் அந்த இடத்தை விட்டு எழிலவன் நகர்ந்தான்.
---
சோலை பதிப்பகத்தின் 'கதைசோலை' என்ற சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற சிறுகதை.
வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Friday, March 6, 2009
Thursday, March 5, 2009
ஒபாமா பராக் !
ஆர்.முத்துகுமார்
‘வெற்றி’ மூன்றெழுத்து ; ‘காதல்’ மூன்றெழுத்து ; ‘வீரம்’ மூன்றெழுத்து ; ‘கவிதை’ மூன்றெழுத்து ; ‘கடமை’ மூன்றெழுத்து ; இன்று உலகம் உச்சரித்து கொண்டு இருக்கும் அமெரிக்க அதிபர் 'ஒபாமா' பெயரும் மூன்றெழுத்து !
எதோ ‘கலைஞர்’ பாணியில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிவிட்டேன். மன்னித்து விடுங்கள். ஒபாமாவுக்கு வருவோம். இப்போது தான் அதிபராக வெள்ளை மாளிகைக்கு நுழைந்து இருக்கிறார். அவர் முன்னே இருப்பது சவாலாக பிரச்சனைகள் மட்டுமே. எப்படி எதிர் கொள்ள போகிறார் ? என்ன செய்ய போகிறார் ? என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதற்குள் பலர் (வை.கோ உட்பட) அவரை பற்றி பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டனர். இப்படி ஒபாமாவை பற்றி பலரும் பேசுவதற்கு ஒரே காரணம்.
எந்த வருடமும் இல்லாமல் எல்லா ஊடங்களும் 2008ல் அமெரிக்க அதிபர் தேர்தல் அதிக கவனம் செழுத்தியது. உலக மக்கள் அனைவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் மிக ஆர்வமாக கவனித்து வந்தனர். பலர் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஒரு வருடம் மேல் நடக்கும் என்பது இந்த முறை நடந்த தேர்தலில் தான் தெரிந்துக் கொண்டனர். இதற்கும் ஒரே காரணம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தான் வெற்றி பெற வேண்டும் பலர் இறைவனிடம் பிரத்தானை நடத்தினர். இதற்கும் ஒரே காரணம் தான்.
ஒபாமா கறுப்பு இனத்தை சேர்ந்தவர். கறுப்பு இனத்தில் வந்து முதல் அமெரிக்க அதிபர் வர வேண்டும் என்பது தான். கடைசியில் அது தான் வெற்றிக்கரமாக நடந்தது. ஒபாமாவின் வெற்றி கறுப்பு இனத்தின் வெற்றி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வெற்றி. மறைந்த அம்பிரகாம் லிங்கன் கண்ட கனவின் வெற்றி. இப்படி ஒபாமாவின் வெற்றியை பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சமிபத்தில் சுமாராக நடந்த ‘32வது சென்னை புத்தக கண்காட்சியி’ல் ஒபாமா பற்றின புத்தகங்கள் நன்றாக விற்பனையானது என்று 'ஹிந்து' நாளேடு தெரிவித்து இருந்தது. நிச்சயமாக கிழக்கு பதிப்பகத்தின் 'ஒபாமா' நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒபாமா பராக் புத்தகத்திற்கு வருவோம்.
ஒபாமாவின் தாத்தா ஆன்யாங்கோ ஆரம்பத்தில் கிறிஸ்துவராக இருந்தாலும், தான்ஸானியாவுக்கு சென்றிருந்த போது அங்கே இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அன்றிலிருந்து, இஸ்லாமியச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகள் மீது ஆன்யாங்கோவுக்கு ஆதீத ஈர்ப்பு ஏற்பட்டது. தன்னுடைய பெயரில் ஹூசைன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டார். இரண்டாவது மனைவியான அகுமு ஹபிபாவுக்கு பிறந்த முதல் ஆண் குழந்தை தான் பாரக் ஹூசைன் ஒபாமா (சீனியர்). ஒபாமாவின் தந்தை.
பராக் சீனியர் ஸ்டேன்லி ஆன் டந்காம் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பரிசாக ஆகஸ்டு 4, 1961 அன்று ஹவாயின் தலை நகர் ஹானலூலுவில் ஜூனியர் ஒபாமா பிறந்தார். ஒபாமாவின் முழு பெயர் பராக் ஹூசைன் ஒபாமா ! ஒபாமா இஸ்லாம் இனத்தை சேர்ந்தவர் என்று கூறுபவர்களுக்கு இது தான் பதில்.
தான் ஒரு கறுப்பன் என்பதால் ஒபாமா பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கை செய்தி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு முறை ஒபாமா பத்திரிக்கை படிக்கும் போது அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞன் ஒருவனுக்கு, தான் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. தன் தோலின் நிறத்தை மாற்றிக் கொள்ள ஒரு வேதிப் பொருளை தன் தோளின் மீது தடவிக் கொள்கிறான். அவன் தோல் வெந்து போய் மீக கொடூரமாகி விடுகிறது. இந்த செய்தியை படித்த நடுங்கி போய் விடுகிறார். இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.
ஆரம்ப வயதில் இருந்து இந்தோனேஷியாவில் படித்ததால் கறுப்பினத்துக்கு நடந்த கொடுமைகள் அவருக்கு தெரியாது. அதன் பிறகு ஹாவாயில் இருக்கும் புனாஹூ என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். இது வரை வெள்ளை, கறுப்பு நிற ஏற்ற தாழ்வு பார்க்காத ஒபாமா இங்கு தான் முதல் முதலில் பார்க்கிறார். ஆசிரியர்கள் கறுப்பு மாணவர்களை இரண்டாம் அல்லது மூன்றாம் தர மனிதர்களாக பள்ளியில் நடத்துவது ஒபாமாவுக்கு வருத்தம் அளித்தது. அந்த சமயத்தில் அவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றிருந்ததால் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுயிருந்தார். இதனால் போதை பழக்கமும் ஏற்பட்டது.

போதை பழக்கத்தில் தன்னை அடிமையாக்கி கொள்ளாமல் சற்று சுதாரித்துக் கொண்டு கூடைப்பந்தில் கவனத்தை செலுத்தினார். ஒபாமா வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களை திரைப்பட காட்சி போல் அழகாக ஆர்.முத்துகுமார் அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகத்தில் ஒபாமாவை பற்றி சொன்ன தகவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.
இந்தோனேஷியாவில் இராமாயணம் மிகவும் பிரபலம். ஒபாமா இந்தோனேஷியாவில் படிக்கும் போது அவருக்கு அனுமானை மிகவும் பிடிக்கும்.
சட்டம் படித்த ஒபாமா தற்காலிகமாக சிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அவருக்கு பயிற்சியளிப்பதற்காக மிஷல் ராபின்சன் என்று கறுப்பின பெண் நியமிக்கப் படுகிறார். ஆசிரியை - மாணவர் என்று தொடங்கிய பழக்கம், மெல்ல மெல்ல நடபாக வளர்ந்து காதல் உருமாறுகிறது. அவரையே திருமணம் செய்துக் கொள்கிறார்.
'Dream from My father’ என்ற புத்தகத்தை 1995 ஒபாமா எழுதி வெளியிட்டார். ஒபாமாவுக்கு எழுத்தாளர் என்ற இன்னொரு முகமும் உண்டு...!!
தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா தான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்றோ, கறுப்பின பிரதிநிதியாகவோ முன் நிறுத்திக் கொள்ளவில்லை. பொருளாதரத்தில் வீழ்ந்து இருக்கும் அமெரிக்காவை மீட்பதை பற்றி தான் பிரச்சாரம் செய்கிறார். அமெரிக்காவின் தேர்தல் முறைகளையும் மிக எளிமையாக புரியவைத்திருக்கிஆர். முத்துகுமார். ( சாதி பெயரை வைத்து ஓட்டு கேட்டும் இந்திய அரசியல்வாதிகள் இதை ஒபாமாவிடம் இருந்து கற்க வேண்டிய விஷயம் )
இன்று ஒபாமாவை அதிபராக பார்க்கும் நாம், கிளிண்டன் தேர்தல் போட்டியிடும் போது ஒரு தொண்டனாக ஈடுப்பட்டை அழகாக காட்டியுள்ளார். கறுப்பின பெண்ணான கரோல் மோஸ்லி பிரான் என்பவர் சிகாகோவிலிருந்து அமெரிக்க மேலலையான செனட் தேர்தல் களத்தில் இருந்தார். கறுப்பர்கள் வாக்குகள் எல்லாம் இந்த வேட்பாளருக்கு தான் கிடைக்கும் என்று ஒபாமாவுக்கு நன்றாக தெரியும். ஆனால், பல கறுப்பர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமல் இருந்தனர். ஒபாமாவின் திவிரமான பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் பதினைந்தாயிரம் வாக்காளர்களை பதிவு செய்ய வைத்தார். அவர் பதிவு செய்து வைத்த வாக்களார்கள் தான் கரோல் மோஸ்லி பிரா தானை தேர்தலில் வெற்றி பெற வைத்தது.
ஒபாமாவை பற்றி சுவையாக தகவல்களில் மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவல்களையும் எழுதியிருக்கிறார். டேனியல் கோலர்ட், பால் ஷ்லெசல்மன் என்ற இரண்டு வெள்ளை இனத்தவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறனர். இன்னும், அமெரிக்காவில் வெள்ளை இன வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி..! விஞ்ஞானம் வளர்ந்து விட்ட போதுலும் இன்னும் சிலரது மனது பிற்போக்காக சிந்தித்துக் கொண்டு இருக்கிறது.
விருவிருப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் ஒபாமா புத்தகத்தில் வேகத்தடையாக மூன்றாவது, எட்டாவது அத்தியாயம் இருக்கிறது. கறுப்பர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்குவதில் கொஞ்சம் நீளத்தை தவிர்த்திருக்கலாம். 'ஒரு நாடகம் நடக்கிறது' அத்தியாயத்தில் ஆபிரஹாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று சொல்லும் இடை சொருகல் போல் உள்ளது. ஒபாமா வாழ்க்கை வரலாற்றில் ஒட்டவில்லை. மற்றப்படி இந்த புத்தகத்தில் குறை என்று சொல்லுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அதே சமயம், புத்தகம் முடிந்து விட்டது என்று ஆர்.முத்துகுமார் அமைதியாக இருந்து விட முடியாது. இனி வரும் காலத்தில் (குறிப்பாக இந்த ஆண்டில்) ஒபாமா எடுக்க போகும் முக்கியமான முடிவுகள், திட்டங்கள், அறிவிப்புகள் பின் சேர்க்கை செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
எது எப்படியோ ! ஒடுப்பட்ட கறுப்பினத்தில் இருந்து ஒபாமா என்ற கறுப்பர் அதிபராகியிருக்கிறார். இது ஒபாமாவின் வெற்றி மட்டுமல்ல. கறுப்பினத்தின் வெற்றி ! அவர்களால் இனி எதையும் சாதிக்க முடியும்.
'Yes, they can !'
நூலை வாங்க...
முகவரி
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
‘வெற்றி’ மூன்றெழுத்து ; ‘காதல்’ மூன்றெழுத்து ; ‘வீரம்’ மூன்றெழுத்து ; ‘கவிதை’ மூன்றெழுத்து ; ‘கடமை’ மூன்றெழுத்து ; இன்று உலகம் உச்சரித்து கொண்டு இருக்கும் அமெரிக்க அதிபர் 'ஒபாமா' பெயரும் மூன்றெழுத்து !
எதோ ‘கலைஞர்’ பாணியில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிவிட்டேன். மன்னித்து விடுங்கள். ஒபாமாவுக்கு வருவோம். இப்போது தான் அதிபராக வெள்ளை மாளிகைக்கு நுழைந்து இருக்கிறார். அவர் முன்னே இருப்பது சவாலாக பிரச்சனைகள் மட்டுமே. எப்படி எதிர் கொள்ள போகிறார் ? என்ன செய்ய போகிறார் ? என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதற்குள் பலர் (வை.கோ உட்பட) அவரை பற்றி பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டனர். இப்படி ஒபாமாவை பற்றி பலரும் பேசுவதற்கு ஒரே காரணம்.
எந்த வருடமும் இல்லாமல் எல்லா ஊடங்களும் 2008ல் அமெரிக்க அதிபர் தேர்தல் அதிக கவனம் செழுத்தியது. உலக மக்கள் அனைவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் மிக ஆர்வமாக கவனித்து வந்தனர். பலர் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஒரு வருடம் மேல் நடக்கும் என்பது இந்த முறை நடந்த தேர்தலில் தான் தெரிந்துக் கொண்டனர். இதற்கும் ஒரே காரணம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தான் வெற்றி பெற வேண்டும் பலர் இறைவனிடம் பிரத்தானை நடத்தினர். இதற்கும் ஒரே காரணம் தான்.
ஒபாமா கறுப்பு இனத்தை சேர்ந்தவர். கறுப்பு இனத்தில் வந்து முதல் அமெரிக்க அதிபர் வர வேண்டும் என்பது தான். கடைசியில் அது தான் வெற்றிக்கரமாக நடந்தது. ஒபாமாவின் வெற்றி கறுப்பு இனத்தின் வெற்றி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வெற்றி. மறைந்த அம்பிரகாம் லிங்கன் கண்ட கனவின் வெற்றி. இப்படி ஒபாமாவின் வெற்றியை பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சமிபத்தில் சுமாராக நடந்த ‘32வது சென்னை புத்தக கண்காட்சியி’ல் ஒபாமா பற்றின புத்தகங்கள் நன்றாக விற்பனையானது என்று 'ஹிந்து' நாளேடு தெரிவித்து இருந்தது. நிச்சயமாக கிழக்கு பதிப்பகத்தின் 'ஒபாமா' நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒபாமா பராக் புத்தகத்திற்கு வருவோம்.
ஒபாமாவின் தாத்தா ஆன்யாங்கோ ஆரம்பத்தில் கிறிஸ்துவராக இருந்தாலும், தான்ஸானியாவுக்கு சென்றிருந்த போது அங்கே இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அன்றிலிருந்து, இஸ்லாமியச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகள் மீது ஆன்யாங்கோவுக்கு ஆதீத ஈர்ப்பு ஏற்பட்டது. தன்னுடைய பெயரில் ஹூசைன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டார். இரண்டாவது மனைவியான அகுமு ஹபிபாவுக்கு பிறந்த முதல் ஆண் குழந்தை தான் பாரக் ஹூசைன் ஒபாமா (சீனியர்). ஒபாமாவின் தந்தை.
பராக் சீனியர் ஸ்டேன்லி ஆன் டந்காம் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பரிசாக ஆகஸ்டு 4, 1961 அன்று ஹவாயின் தலை நகர் ஹானலூலுவில் ஜூனியர் ஒபாமா பிறந்தார். ஒபாமாவின் முழு பெயர் பராக் ஹூசைன் ஒபாமா ! ஒபாமா இஸ்லாம் இனத்தை சேர்ந்தவர் என்று கூறுபவர்களுக்கு இது தான் பதில்.
தான் ஒரு கறுப்பன் என்பதால் ஒபாமா பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கை செய்தி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு முறை ஒபாமா பத்திரிக்கை படிக்கும் போது அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞன் ஒருவனுக்கு, தான் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. தன் தோலின் நிறத்தை மாற்றிக் கொள்ள ஒரு வேதிப் பொருளை தன் தோளின் மீது தடவிக் கொள்கிறான். அவன் தோல் வெந்து போய் மீக கொடூரமாகி விடுகிறது. இந்த செய்தியை படித்த நடுங்கி போய் விடுகிறார். இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.
ஆரம்ப வயதில் இருந்து இந்தோனேஷியாவில் படித்ததால் கறுப்பினத்துக்கு நடந்த கொடுமைகள் அவருக்கு தெரியாது. அதன் பிறகு ஹாவாயில் இருக்கும் புனாஹூ என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். இது வரை வெள்ளை, கறுப்பு நிற ஏற்ற தாழ்வு பார்க்காத ஒபாமா இங்கு தான் முதல் முதலில் பார்க்கிறார். ஆசிரியர்கள் கறுப்பு மாணவர்களை இரண்டாம் அல்லது மூன்றாம் தர மனிதர்களாக பள்ளியில் நடத்துவது ஒபாமாவுக்கு வருத்தம் அளித்தது. அந்த சமயத்தில் அவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றிருந்ததால் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுயிருந்தார். இதனால் போதை பழக்கமும் ஏற்பட்டது.

போதை பழக்கத்தில் தன்னை அடிமையாக்கி கொள்ளாமல் சற்று சுதாரித்துக் கொண்டு கூடைப்பந்தில் கவனத்தை செலுத்தினார். ஒபாமா வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களை திரைப்பட காட்சி போல் அழகாக ஆர்.முத்துகுமார் அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகத்தில் ஒபாமாவை பற்றி சொன்ன தகவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.
இந்தோனேஷியாவில் இராமாயணம் மிகவும் பிரபலம். ஒபாமா இந்தோனேஷியாவில் படிக்கும் போது அவருக்கு அனுமானை மிகவும் பிடிக்கும்.
சட்டம் படித்த ஒபாமா தற்காலிகமாக சிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அவருக்கு பயிற்சியளிப்பதற்காக மிஷல் ராபின்சன் என்று கறுப்பின பெண் நியமிக்கப் படுகிறார். ஆசிரியை - மாணவர் என்று தொடங்கிய பழக்கம், மெல்ல மெல்ல நடபாக வளர்ந்து காதல் உருமாறுகிறது. அவரையே திருமணம் செய்துக் கொள்கிறார்.
'Dream from My father’ என்ற புத்தகத்தை 1995 ஒபாமா எழுதி வெளியிட்டார். ஒபாமாவுக்கு எழுத்தாளர் என்ற இன்னொரு முகமும் உண்டு...!!
தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா தான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்றோ, கறுப்பின பிரதிநிதியாகவோ முன் நிறுத்திக் கொள்ளவில்லை. பொருளாதரத்தில் வீழ்ந்து இருக்கும் அமெரிக்காவை மீட்பதை பற்றி தான் பிரச்சாரம் செய்கிறார். அமெரிக்காவின் தேர்தல் முறைகளையும் மிக எளிமையாக புரியவைத்திருக்கிஆர். முத்துகுமார். ( சாதி பெயரை வைத்து ஓட்டு கேட்டும் இந்திய அரசியல்வாதிகள் இதை ஒபாமாவிடம் இருந்து கற்க வேண்டிய விஷயம் )
இன்று ஒபாமாவை அதிபராக பார்க்கும் நாம், கிளிண்டன் தேர்தல் போட்டியிடும் போது ஒரு தொண்டனாக ஈடுப்பட்டை அழகாக காட்டியுள்ளார். கறுப்பின பெண்ணான கரோல் மோஸ்லி பிரான் என்பவர் சிகாகோவிலிருந்து அமெரிக்க மேலலையான செனட் தேர்தல் களத்தில் இருந்தார். கறுப்பர்கள் வாக்குகள் எல்லாம் இந்த வேட்பாளருக்கு தான் கிடைக்கும் என்று ஒபாமாவுக்கு நன்றாக தெரியும். ஆனால், பல கறுப்பர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமல் இருந்தனர். ஒபாமாவின் திவிரமான பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் பதினைந்தாயிரம் வாக்காளர்களை பதிவு செய்ய வைத்தார். அவர் பதிவு செய்து வைத்த வாக்களார்கள் தான் கரோல் மோஸ்லி பிரா தானை தேர்தலில் வெற்றி பெற வைத்தது.
ஒபாமாவை பற்றி சுவையாக தகவல்களில் மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவல்களையும் எழுதியிருக்கிறார். டேனியல் கோலர்ட், பால் ஷ்லெசல்மன் என்ற இரண்டு வெள்ளை இனத்தவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறனர். இன்னும், அமெரிக்காவில் வெள்ளை இன வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி..! விஞ்ஞானம் வளர்ந்து விட்ட போதுலும் இன்னும் சிலரது மனது பிற்போக்காக சிந்தித்துக் கொண்டு இருக்கிறது.
விருவிருப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் ஒபாமா புத்தகத்தில் வேகத்தடையாக மூன்றாவது, எட்டாவது அத்தியாயம் இருக்கிறது. கறுப்பர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்குவதில் கொஞ்சம் நீளத்தை தவிர்த்திருக்கலாம். 'ஒரு நாடகம் நடக்கிறது' அத்தியாயத்தில் ஆபிரஹாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று சொல்லும் இடை சொருகல் போல் உள்ளது. ஒபாமா வாழ்க்கை வரலாற்றில் ஒட்டவில்லை. மற்றப்படி இந்த புத்தகத்தில் குறை என்று சொல்லுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அதே சமயம், புத்தகம் முடிந்து விட்டது என்று ஆர்.முத்துகுமார் அமைதியாக இருந்து விட முடியாது. இனி வரும் காலத்தில் (குறிப்பாக இந்த ஆண்டில்) ஒபாமா எடுக்க போகும் முக்கியமான முடிவுகள், திட்டங்கள், அறிவிப்புகள் பின் சேர்க்கை செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
எது எப்படியோ ! ஒடுப்பட்ட கறுப்பினத்தில் இருந்து ஒபாமா என்ற கறுப்பர் அதிபராகியிருக்கிறார். இது ஒபாமாவின் வெற்றி மட்டுமல்ல. கறுப்பினத்தின் வெற்றி ! அவர்களால் இனி எதையும் சாதிக்க முடியும்.
'Yes, they can !'
நூலை வாங்க...
முகவரி
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
அறிவியல் புனைகதை : கனவே கலைந்து விடாதே
என் தேகத்தை அசைக்க முடியாமல் படுத்து கிடந்தேன். எழுபது, எண்பது கிலோ எடையுள்ள் உருவம் ஒன்று என் உடல் மீது ஊடுருவது போல் இருந்தது. அந்த உருவம் மெல்ல மெல்ல என் பெண் உருப்புக்களை சுவைத்துக் கொண்டு இருந்தது. அந்த உருவத்தை தள்ளி விட நினைத்து என்னால் முடியவில்லை. அந்த உருவத்தின் கரங்கள் என் கரங்களோடு பின்னி பினைந்து அசைக்க முடியாமல் இருந்தேன். இது வரை என் உடலை எந்த ஆணும் தீண்டியதில்லை. அந்த உருவம் தீண்டியதில் ஆண் என்று உணரமுடிந்தது. என் பெண்மையை காப்பாற்றி கொள்ள கத்தினேன். எதுவும் பலனில்லை. என் தேகத்தை அந்த உருவம் அனுபவித்துக் கொண்டு இருந்தது. தன் வேட்கையின் உச்சக்கட்டத்தை தீர்த்துக் கொள்ள அந்த உருவம் முயற்சி செய்தது. இந்த முறை மேலும் பலமாக கத்தினேன். மூடப்பட்டிருந்த அறை கதவுகள் வேகமாக திறந்து. இரண்டு உருவங்கள் உள்ளே நுழைந்தன. இதற்கு முன் அந்த இருவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது. என் பெண்மையை காப்பாற்ற, அந்த இருவர் உருவத்தை அடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அந்த இருவர் என்னை தட்டி எழுப்ப தொடங்கியது.
" அனிதா.... அனிதா... என்னம்மா ஆச்சு உனக்கு.... எதுக்கு கத்துன...?? " என்று பதட்டத்துடன் ஒரு பெண் குரல் கேட்டது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தேன். என் அறையில் பாதுக்காப்பாய் தூங்கி கொண்டு இருந்திருக்கிறேன். என் வலது பக்கத்தில் பதட்டத்துடம் அம்மா இருந்தார். இடது பக்கம் சாந்தமாய் என் அப்பா சீதாராமன் நின்றுக் கொண்டு இருந்தார். என் பெண்மை யாரோ சுரையாடுவது போல் கனவு கண்டுயிருக்கிறேன் என்பதை உணர எனக்கு கொஞ்சம் நேரமானது.
" என்னடி.... கெட்ட கனவா ? வீடே இரண்டாகுற மாதிரி கத்துன... " பயந்தப்படி அம்மா கேட்டார்.
" கெட்ட கனவும்மா... யாரோ என்ன கெடுக்குற மாதிரி கனவு. எனக்கு பயமா இருக்கு..." என்று கனவில் நடந்ததை என் பெற்றோர்களிடம் மறைக்காமல் கூறினேன்.
" போடி... அடுத்த வாரம் கல்யாணம். அந்த பயம் இந்த மாதிரி கனவா வருது. மனசுல பகவான வேண்டிட்டு தூங்கு..." என்று ஆறுதலாக அம்மா கூறினாள்.
ஆனால், இது போன்ற கனவு பயம் எனக்கு புதிதில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு கெட்ட கெட்ட கனவுகள் தான் வரும். பள்ளியில் படிக்கும் போது டீச்சர் அடிப்பது போல் வரும், பல்லி, கரப்பான் எல்லாம் என் மேல் ஏறி கடிப்பது போல் வரும், பருவம் அடைந்த பிறகு வகுப்பில் இரத்தம் கசிவது போல் வரும். நான் கனவு பயத்தில் கத்தி எழும் போது அம்மா பதட்டம் அடைவாள். எனக்கு பேய் பிடித்திருக்குமோ என்று பல கோயிலுக்கு அழைத்து சென்று மந்திரித்து காயத்து எல்லாம் கட்டிவிட்டார். அடுத்த நாள் இரவில் அந்த கோயில் புசாரி என்னை கொலை செய்வது போல் கனவு வரும். இந்நாள் வரை கனவு பயம் என்னை விடவே இல்லை.
சில சமயம் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறா என்ற சந்தேகம் எழும். நான் பைத்தியமில்லை என்பதை என் அப்பா உறுதி செய்வார். அவர் ஒரு மனதத்துவ டாக்டர். நோயை குணப்படுத்த மருந்தை விட மனதை தான் அதிகம் நம்புவார். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் நான் தான் என் பெற்றோர்களுக்கு இளவரசி. என் கனவு பயம் தான் அவர்களுக்கு கவலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.
அம்மா கடவுளை வேண்டிவிட்டு என் நெற்றியில் விபூதி பூசினாள்.
" எதபத்தியும் யோசிக்காம அமைதியா தூங்கு...." என்றாள் அம்மா.
அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக என்னை பார்த்தார். அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
" அப்பா..! எனக்கு பயமா இருக்கு... என் கூடவே இருங்கப்பா..."
தன் மகள் அனிதா இன்னும் குழந்தையாக தான் இருக்கிறாள் என்பதை சீதாராமன் உணர்ந்தான். தன் மனைவியை அனுப்பி விட்டு மகளுக்கு ஆறுதலாக அவள் அருகில் அமர்ந்தான்.
" என்னடா... உனக்கு ஒண்ணும் ஆகாது... நாங்க இருக்கோம்ல்ல...." என்றான் சீதாராமன்.
" எனக்கு பைத்தியமா அப்பா... ஏன் எனக்கு மட்டும் அடிக்கடி இப்படி நடக்குது.... " என்று கேட்டேன். ஒவ்வொரு முறை நான் பைத்தியம் என்று சந்தேகம் வந்தால் என் தந்தையிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். என் தந்தையும் எனக்கு பதில் அளித்து அளித்து அசந்து போவார். ஏதாவது ஒரு காரணம் கூறி என்னை தேற்றுவார். ஆனால், இந்த முறை எனக்கு என்ன வியாதி என்று வெளிப்படையாக கூறினார். இன்று தான் எனக்கு என்ன வியாதி என்று தெரிந்துக் கொண்டேன்.
" உனக்கு பைத்தியம் இல்லம்மா... இத டிரீமிங் டிஸார்டர் சொல்லுவாங்க... அதனால தான் உனக்கு கெட்ட கனவு வருது. வேற ஒண்ணுமில்ல..." என்று சீதாராமன் கூறினான்.
" எதனால வருதுனா??.... இதுக்கு டிரிட்மென்ட் இல்லையா... ஏன் இவ்வளவு நாள் எந்த மருந்து எனக்கு கொடுக்கல்ல...." கண்ணீர் கலந்த குரலில் நான் கேட்டேன்.
" இது வியாதி கிடையாதுமா... ராபிட் ஐய் மூவ்மென்டால வருது... நிறைய பேருக்கு 'டிரீமிங் டிஸார்டர்' பிரச்சனை இருக்கு. ஆனா, யாரும் பெருசா எடுத்திக்கிறது இல்ல. இந்த கனவு இரண்டு, மூனு நாளைக்கு ஞாபகம் இருக்கும் அவ்வளவு தான். அப்புறம் நாமே மறந்திருவோம்..." என்று மருத்துவ ரீதியாக இருக்கும் 'டிரீமிங் டிஸார்டர்' பற்றி விளக்கினார்.
" அப்போ இத குணப்படுத்த முடியாதா....?" என்று என் மனதில் ஆழமாய் பதிந்த கேள்வியை கேட்டேன்.
" டிரீமிங் டிஸார்டர் வியாதியே இல்லாத போது... மருந்து எப்படிம்மா...?? தியானமும், மனச சந்தோஷமா வெச்சிக்கிறதும் தான் இதுக்கு மருந்து. கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."
தந்தை சீதாராமனின் விளக்கத்தை கேட்டவுடன் நான் புன்முருவலோடு பார்த்தேன். என் மனதில் இருந்த பயம் மெல்ல மெல்ல விலகியது. அப்பா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எப்படி மனிதனின் கற்பனை மருத்துவத்தால் தடுத்து நிருத்த முடியும். இயல்பு வாழ்க்கை நடக்காததை பலர் கனவில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனக்கு இப்படி ஒரு கனவு வருகிறது என்றால், என் மனதில் வன் புணர்ச்சிக்கு ஆசைப்படுகிறேனா...?? அடுத்த வாரம் திருமணம் என்பதால் எனக்கு இப்படி ஒரு கனவு வந்திருக்கலாம். எனக்குள்ளே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக் கொண்டேன்.
" அப்பா! தியானம், மனச சந்தோஷமா வச்சிக்கிறது தவிர கெட்ட கனவு வராம பார்த்துக்க இன்னொரு வைத்தியம் இருக்கு..." என்றேன்.
" என்ன வைத்தியம்...." ஆரவமாக அப்பா கேட்டார்.
" தூங்காம்மா இருக்கனும்..." என்று கூறி குறும்பா சிரித்தேன்.
" அடி உன்ன.... இராத்தி நேரத்துல கடி ஜோக் சொல்லிட்டு... எத பத்தி கவலப்படாம தூங்கும்மா...." என்று கூறி விட்டு, போர்வை என்னை போர்த்திவிட்டு அப்பா தன் அறைக்கு சென்றார். வெடிக்கையாக பேசினாலும் மனதுக்குள் பயம் இருக்க தான் செய்கிறது. எதற்கும் என் அறையில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்து விடுகிறேன்.
நல்ல வேளை. யாருமில்லை. தைரியமாக தூங்கலாம். கனவு மட்டும் வரகூடாது என்று சொல்லி கொண்டே தூங்கினேன்.
ஒரு வாரம் உருண்டோடியது. நாட்கள் எப்படி போகிறது என்று சொல்ல முடியவில்லை. என் திருமணம் சிறப்பாக நடந்தது. அப்பா, அம்மா கண்களில் ஆனந்த கண்ணீரை பார்த்தேன். உறவினர்கள், நன்பர்கள் வாழ்த்திவிட்டு சென்ற பிறகு முதல் இரவுக்கு தேவையான அழங்காரம் என் அறையில் நடந்துக் கொண்டு இருந்தது.
என் கணவர் பெயர் சேகர். ஒரு கணிணி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். பல இடங்கள் வரன் பார்த்து செய்து வைத்த திருமணம். இத்தனை நாள் சேர்த்து வைத்த என் இளமையை சேகருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். இல்லை..இல்லை... சேகருக்கு கொடுக்க போகிறேன். என் இன்பமும், துன்பமும் ‘அவன்’ தான். மன்னிக்கவும் ‘அவர்’ தான். திருமணம் ஆன பிறகு எப்படி தான் 'அவன்' 'அவராக' மாறுகிறது என்பதை அப்பாவிடம் மன தத்துவ ரீதியான விளக்கத்தை கேட்க வேண்டும்.
மனதில் பல கனவுகளுடன் என் அறைக்கு சென்றேன். அங்கு சேகர் எனக்காக காத்திருந்தார். என்னுடைய அறையாக இருந்தாலும், உள்ளே நுழைவதற்கு பயமாக இருந்தது. சந்தோஷம் கலந்த பயத்துன் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தேன். சேகர் என் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி கட்டில் அருகில் வைத்தார். சேகர் கைகளால் என் கையை பிடித்து கட்டிலில் உக்கார வைத்தார். அவரது கண்கள் என் தேகத்தை மேய்ந்து கொண்டு இருந்தன.
" என்னங்க அப்படியே பார்க்குறீங்க...." என்று கேட்டேன்.
"இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்க.... உன்ன அப்படி கடிச்சு சாப்பிடலாமா இருக்கு..." என்று கூறியப்படி என் அருகில் வந்தார்.
"நீங்க தொடும் போது ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்சம் நேரன் ஏதாவது பேசுவோமே !" பயத்தில் கூறினேன். அவரது தீண்டல் பிடித்திருந்தாலும், முதல் முறை என்பதால் எனக்கு பயமும் இருந்தது.
" கல்யாணத்து முன்னாடியே எல்லா பேசியாச்சு... இங்க வந்து பேசியும் நம்ப டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பல்ல..." என்று சொல்லிவிட்டு கட்டில் படுக்க வைத்தார். வார்த்தைகளுக்கும், ஆடைக்கும் அவசியம் அற்று போயின. வியர்வை ஆறாக ஓடின. அறையின் நிசப்தத்தை என் இதய துடிப்பு கலைத்தன. எங்கள் மூச்சு காத்து புயல் போல் அறையில் பரவியது.
எனக்கு போன வாரம் வந்த கனவு ஞாபகம் வந்தது. இதே போல் தான் ஒரு உருவம் என்னை அனுபவிப்பது போல் கண்டேன். இப்போது என் கணவர் என்னை அனுபவிப்பத்து கொண்டு இருக்கிறார். ஒரு வேளை நான் காணும் கனவு நிஜமாக நடக்கிறதா... என்று யோசித்தேன். என் கனவு எல்லாம் நிஜமாக நடக்கிறதா என்று எனக்குள்ளே கேட்டு பார்த்தேன்.
" ஆ...ஆ........ஆ..." என்று விரிட்டு கத்தினேன். வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுந்தேன். படுக்கையில் சேகர் இல்லை. என்னை சுற்றி மருத்துவ முகாமே அமைத்தது போல் இருந்தது. என் கண் எதிரே இரண்டு கம்ப்யூட்டர் மானிடர் ஓடிக் கொண்டு இருந்தது. மனித இயந்திரங்கள் அங்கும், இங்கும் அசைந்துக் கொண்டு இருந்தன. சேகர் இங்கு இருப்பதாக தெரியவில்லை. என் கைகள் அசைக்க முடியாமல் இரண்டு பக்கமும் பாடிலில் க்லுகோஸ் ஏறிக் கொண்டு இருந்தது. அது மட்டுமில்லாமல், என் கைகள் தோள் சுருங்கி காணப்பட்டன. இரண்டு விரலுக்கு நகமே இல்லை. தலை முடியில் இருந்து உதிர்ந்த முடி வெள்ளையாக இருந்தது. என்ன நடந்தது...? என் கணவர் சேகர் எங்கே... ? அப்பா, அம்மா எங்கே....? நினைத்து கொண்டு இருக்கையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.
" என்ன பாட்டிம்மா... தூக்கம் தெழுஞ்சிருச்சா..." என்றான்.
" நீ யாரு..." என்றேன். நான் பேசும் உதடுகள் அசைக்க மிகவும் சிரம்ம பட்டேன்.
" என் பேரு மதன். இங்க வேளை செய்யுற டாக்டர். நீங்க என்னோட பெஷன்ட் பாட்டிம்மா..." என்றான்.
" நான் பாட்டியில்ல. எனக்கு இருபது வயசு தான் ஆகுது...." கோபமாக கூறினேன்.
" ஓ.... இன்னும் கனவு உலகத்துல இருந்து வெளியே வரலைய்யா... இது 2108 ஆம் வருஷம். உங்களுக்கு நூற்றி இருபது வயசு ஆகுது. உங்க பேரங்க மெடிக்கல் ரிசர்ச்காக உங்கள இருபது வருஷம் முன்னாடி டோனேட் பண்ணியிருக்காங்க..."
" எனது..?? என்ன டோனேட் பண்ணிட்டாங்களா...!!! " அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டு இருந்தான் மதன். எனக்கு என்னவோ மாய உலகத்தில் இருப்பது போல் இருந்தது. எனக்கு ‘நூற்றி இருபது வயது’ என்று அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. இப்போது தான் என் கணவர் சேகர் என்னை கட்டிலில் தள்ளி இன்ப சுகத்தை கொடுத்தார். நான் அந்த இன்ப சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் இத்தனை வருடங்கள் எப்படி கடந்து வர முடியும் ? எனக்கு எத்தினை குழந்தைகள் பிறந்தார்கள் ? அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ? என் பேரன், பேத்திகள் என்னை எதுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கு தத்துக்கொடுக்க வேண்டும் ? எனக்கு எதுவுமே நினைவில் இல்லை.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கேள்வியாக தான் இருந்தது. குழப்பங்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. என் தந்தை அருகில் இருந்தால் குழப்பத்தை தீர்த்து வைப்பார். அப்பா இங்கு இருப்பதாக தெரியவில்லை. சேகர் எங்கே...?? இவ்வளவு நேரம் இங்கு தானே இருந்தாய்.. சேகர்... சேகர்... மனம் என் கணவரை தேடியது.
" இவ்வளவு நேரம் உங்க கணவர் சேகரோடவா இருந்தீங்களா....? " என்றான்.
" ஆமாம். அவரு இப்போ எங்க...?" என்று ஆவலுடன் கேட்டேன்.
" அவரு செத்து அம்பது வருஷம் ஆகுது. இவ்வளவு நேரம் நீங்க இருந்தது கனவு...." என்றான் மதன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.” என் கணவர் இறந்து விட்டாரா ?” , "நான் கனவோடு வாழ்ந்தேனா.... எப்படி முடியும் ? நான் நிஜம். என் அப்பா சீதாராமன் நிஜம் . என் கணவர் சேகர் நிஜம். எல்லாம் கனவு என்று சொல்கிறான் இந்த முட்டாள் மதன்." என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன்.
" நான் முட்டாள் இல்ல பாட்டிம்மா.." சிரித்துக் கொண்டே கூறினான் மதன்.
நான் மனதுக்குள் நினைப்பது இவனுக்கு எப்படி தெரியும். இதற்கு முன்பு நான் சேகருடன் இருந்ததை நினைத்தையும் கண்டு பிடித்தான். நான் நினைப்பது எப்படி அவனுக்கு தெரிந்தது…?
" ரொம்ப குழப்பிக்காதிங்க பாட்டிம்மா. நீங்க, உங்க அப்பா சீதாராமன், சேகர் எல்லாரும் நிஜம் தான். உங்களுக்கு கனவு கொடுக்கும் இயந்திரம் பொருத்தியிருக்கோம். இருபத்திரண்டாம் நூற்றாண்டு கொடுமையா வியாதிகளுல 'டிரீமிங் டிஸார்டர்' ஒண்ணு. கனவு வராம எப்படி தடுக்கனும் ஆராய்ச்சி பண்ணி மிஷின் கண்ணு பிடிக்க போறோம். அதுக்கு உங்கள எங்களுக்கு டோனேட் பண்ணியிருக்காங்க. "
‘டிரீமிங் டிஸார்டர்’ இருபத்திரண்டாம் நூற்றாண்டின் கொடுமையான வியாதியா....!!!! எனக்கு தலையே சுற்றியது.
" உங்க உடம்புல சிலிகோன் சிம் ஒண்ணு பொருத்தி இருக்கோம். உங்க கனவுகள், உள் மனது பேசும் வார்த்தைகள், எண்ணங்கள் எல்லாம் எனக்கு கேட்கும்..." என்றான்.
அடப்பாவி இது வேறையா... இவனுக்கு தெரியாமா நான் எதுவும் நினைக்க கூட முடியாதா... எல்லாம் என் தலையெழுத்து என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்.
" எப்படி இவ்வளவு வருஷம் நான் சாகமா இருக்கேன்....?"
" உங்க உடம்புக்கு நல்லா இருக்க நாங்க மருந்து கொடுக்குறோம். கனவு உங்கள ரொம்ப இளமையா வச்சிட்டு இருக்கு. மனுஷன் தன்னோட முதுமை நினைக்கும் போது தான் மரணமே வருது. உங்க கனவு உங்கள இருபது வயசுல வாழ வைக்கிறதாளா நீங்கள இவ்வளவு வருஷம் இருக்கீங்க.."
கனவு காண்பதை வியாதி என்கிறான். அதே சமயம் அந்த கனவு தான் என் மனதை இளமையாக வைத்துக் கொண்டு நீண்ட நாள் வாழ வைத்ததாக கூறுகிறான். ஜிலேப்பி போல் அவன் சொல்லுவது ஒன்று புரியாமல் இருந்தது.
"ஜிலேப்பி.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?" என்று ஒரு இயந்திரமிடம் கேட்டான் மதன்.
" இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இனிப்பு வகை உணவு. அதை எப்படி செய்வது என்ற குறிப்புகள் என் டேடா பேஸ்ஸில் இல்லை. " என்றது இயந்திரம்.
" பரவாயில்லை” என்று இயந்திரமிடம் கூறிவிட்டு “என்ன பாட்டிம்மா.. இனிப்பு வேணும்மா..." என்று கூறி இரண்டு மாத்திரை நீட்டினான் மதன்.
"என்னது இது...?" வினாவினேன்.
"இனிப்பு மாத்திரை" என்றான்.
"ஐயோ.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கே....." என்று தலையில் கை வைத்துக் கொண்டேன்.
முதுமையில் மறதி சகஜம் தான். ஆனால், என் கணவரின் மரணம், எனக்கு பிறந்த குழந்தைகள், பேரன், பேத்திகள் என்று எல்லோரையுமே மறந்து விட்டேன்.
‘நூற்றி இருபது’ வயதில் நான் வாழ்வதே அதிசயம் என்ற போது, இவர்கள் மறந்தது பெரிதாக தெரியவில்லை. என்னை ஆராய்ச்சிக்கு தத்து கொடுத்தவர்களை நினைவில் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன். என் கணவர் சேகரின் மரணத்தை மறந்ததை தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்பா சொன்ன சில வார்த்தைகள் காதோரம் ஒலித்துக் கொண்டு இருந்தது " கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."
இங்கு ‘முட்டாள்’ மதன் கனவை மிஷின் மூலம் தடுக்க பார்க்கிறேன் என்று நினைத்தேன். இருப்பத்தி ஓறாம் நூற்றாண்டில் படித்த சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதை விட மிகையாகவே நேரில் பார்க்கிறேன். தூக்கம் கண்களில் குடிப்புக தொடங்கியது. கனவு மெல்ல மெல்ல என் தூக்கத்திற்குள் நுழைந்தது.
சேகர் என்னை நோக்கி வருகிறார். அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தார். நான் சேகரை ஆசையோடு அனைத்துக் கொண்டேன். இருவரும் இன்ப உலகத்திற்கு சென்றோம்.
என் கனவில் சல்லாபம் செய்வதை ‘முட்டாள்’ மதன் கேட்டுக் கொண்டு இருந்தான்.
----
அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிக்காக எழுதியது. போட்டி முடிவு வழக்கம் போல் உத்திக்கிச்சு...
" அனிதா.... அனிதா... என்னம்மா ஆச்சு உனக்கு.... எதுக்கு கத்துன...?? " என்று பதட்டத்துடன் ஒரு பெண் குரல் கேட்டது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தேன். என் அறையில் பாதுக்காப்பாய் தூங்கி கொண்டு இருந்திருக்கிறேன். என் வலது பக்கத்தில் பதட்டத்துடம் அம்மா இருந்தார். இடது பக்கம் சாந்தமாய் என் அப்பா சீதாராமன் நின்றுக் கொண்டு இருந்தார். என் பெண்மை யாரோ சுரையாடுவது போல் கனவு கண்டுயிருக்கிறேன் என்பதை உணர எனக்கு கொஞ்சம் நேரமானது.
" என்னடி.... கெட்ட கனவா ? வீடே இரண்டாகுற மாதிரி கத்துன... " பயந்தப்படி அம்மா கேட்டார்.
" கெட்ட கனவும்மா... யாரோ என்ன கெடுக்குற மாதிரி கனவு. எனக்கு பயமா இருக்கு..." என்று கனவில் நடந்ததை என் பெற்றோர்களிடம் மறைக்காமல் கூறினேன்.
" போடி... அடுத்த வாரம் கல்யாணம். அந்த பயம் இந்த மாதிரி கனவா வருது. மனசுல பகவான வேண்டிட்டு தூங்கு..." என்று ஆறுதலாக அம்மா கூறினாள்.
ஆனால், இது போன்ற கனவு பயம் எனக்கு புதிதில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு கெட்ட கெட்ட கனவுகள் தான் வரும். பள்ளியில் படிக்கும் போது டீச்சர் அடிப்பது போல் வரும், பல்லி, கரப்பான் எல்லாம் என் மேல் ஏறி கடிப்பது போல் வரும், பருவம் அடைந்த பிறகு வகுப்பில் இரத்தம் கசிவது போல் வரும். நான் கனவு பயத்தில் கத்தி எழும் போது அம்மா பதட்டம் அடைவாள். எனக்கு பேய் பிடித்திருக்குமோ என்று பல கோயிலுக்கு அழைத்து சென்று மந்திரித்து காயத்து எல்லாம் கட்டிவிட்டார். அடுத்த நாள் இரவில் அந்த கோயில் புசாரி என்னை கொலை செய்வது போல் கனவு வரும். இந்நாள் வரை கனவு பயம் என்னை விடவே இல்லை.
சில சமயம் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறா என்ற சந்தேகம் எழும். நான் பைத்தியமில்லை என்பதை என் அப்பா உறுதி செய்வார். அவர் ஒரு மனதத்துவ டாக்டர். நோயை குணப்படுத்த மருந்தை விட மனதை தான் அதிகம் நம்புவார். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் நான் தான் என் பெற்றோர்களுக்கு இளவரசி. என் கனவு பயம் தான் அவர்களுக்கு கவலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.
அம்மா கடவுளை வேண்டிவிட்டு என் நெற்றியில் விபூதி பூசினாள்.
" எதபத்தியும் யோசிக்காம அமைதியா தூங்கு...." என்றாள் அம்மா.
அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக என்னை பார்த்தார். அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
" அப்பா..! எனக்கு பயமா இருக்கு... என் கூடவே இருங்கப்பா..."
தன் மகள் அனிதா இன்னும் குழந்தையாக தான் இருக்கிறாள் என்பதை சீதாராமன் உணர்ந்தான். தன் மனைவியை அனுப்பி விட்டு மகளுக்கு ஆறுதலாக அவள் அருகில் அமர்ந்தான்.
" என்னடா... உனக்கு ஒண்ணும் ஆகாது... நாங்க இருக்கோம்ல்ல...." என்றான் சீதாராமன்.
" எனக்கு பைத்தியமா அப்பா... ஏன் எனக்கு மட்டும் அடிக்கடி இப்படி நடக்குது.... " என்று கேட்டேன். ஒவ்வொரு முறை நான் பைத்தியம் என்று சந்தேகம் வந்தால் என் தந்தையிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். என் தந்தையும் எனக்கு பதில் அளித்து அளித்து அசந்து போவார். ஏதாவது ஒரு காரணம் கூறி என்னை தேற்றுவார். ஆனால், இந்த முறை எனக்கு என்ன வியாதி என்று வெளிப்படையாக கூறினார். இன்று தான் எனக்கு என்ன வியாதி என்று தெரிந்துக் கொண்டேன்.
" உனக்கு பைத்தியம் இல்லம்மா... இத டிரீமிங் டிஸார்டர் சொல்லுவாங்க... அதனால தான் உனக்கு கெட்ட கனவு வருது. வேற ஒண்ணுமில்ல..." என்று சீதாராமன் கூறினான்.
" எதனால வருதுனா??.... இதுக்கு டிரிட்மென்ட் இல்லையா... ஏன் இவ்வளவு நாள் எந்த மருந்து எனக்கு கொடுக்கல்ல...." கண்ணீர் கலந்த குரலில் நான் கேட்டேன்.
" இது வியாதி கிடையாதுமா... ராபிட் ஐய் மூவ்மென்டால வருது... நிறைய பேருக்கு 'டிரீமிங் டிஸார்டர்' பிரச்சனை இருக்கு. ஆனா, யாரும் பெருசா எடுத்திக்கிறது இல்ல. இந்த கனவு இரண்டு, மூனு நாளைக்கு ஞாபகம் இருக்கும் அவ்வளவு தான். அப்புறம் நாமே மறந்திருவோம்..." என்று மருத்துவ ரீதியாக இருக்கும் 'டிரீமிங் டிஸார்டர்' பற்றி விளக்கினார்.
" அப்போ இத குணப்படுத்த முடியாதா....?" என்று என் மனதில் ஆழமாய் பதிந்த கேள்வியை கேட்டேன்.
" டிரீமிங் டிஸார்டர் வியாதியே இல்லாத போது... மருந்து எப்படிம்மா...?? தியானமும், மனச சந்தோஷமா வெச்சிக்கிறதும் தான் இதுக்கு மருந்து. கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."
தந்தை சீதாராமனின் விளக்கத்தை கேட்டவுடன் நான் புன்முருவலோடு பார்த்தேன். என் மனதில் இருந்த பயம் மெல்ல மெல்ல விலகியது. அப்பா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எப்படி மனிதனின் கற்பனை மருத்துவத்தால் தடுத்து நிருத்த முடியும். இயல்பு வாழ்க்கை நடக்காததை பலர் கனவில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனக்கு இப்படி ஒரு கனவு வருகிறது என்றால், என் மனதில் வன் புணர்ச்சிக்கு ஆசைப்படுகிறேனா...?? அடுத்த வாரம் திருமணம் என்பதால் எனக்கு இப்படி ஒரு கனவு வந்திருக்கலாம். எனக்குள்ளே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக் கொண்டேன்.
" அப்பா! தியானம், மனச சந்தோஷமா வச்சிக்கிறது தவிர கெட்ட கனவு வராம பார்த்துக்க இன்னொரு வைத்தியம் இருக்கு..." என்றேன்.
" என்ன வைத்தியம்...." ஆரவமாக அப்பா கேட்டார்.
" தூங்காம்மா இருக்கனும்..." என்று கூறி குறும்பா சிரித்தேன்.
" அடி உன்ன.... இராத்தி நேரத்துல கடி ஜோக் சொல்லிட்டு... எத பத்தி கவலப்படாம தூங்கும்மா...." என்று கூறி விட்டு, போர்வை என்னை போர்த்திவிட்டு அப்பா தன் அறைக்கு சென்றார். வெடிக்கையாக பேசினாலும் மனதுக்குள் பயம் இருக்க தான் செய்கிறது. எதற்கும் என் அறையில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்து விடுகிறேன்.
நல்ல வேளை. யாருமில்லை. தைரியமாக தூங்கலாம். கனவு மட்டும் வரகூடாது என்று சொல்லி கொண்டே தூங்கினேன்.
ஒரு வாரம் உருண்டோடியது. நாட்கள் எப்படி போகிறது என்று சொல்ல முடியவில்லை. என் திருமணம் சிறப்பாக நடந்தது. அப்பா, அம்மா கண்களில் ஆனந்த கண்ணீரை பார்த்தேன். உறவினர்கள், நன்பர்கள் வாழ்த்திவிட்டு சென்ற பிறகு முதல் இரவுக்கு தேவையான அழங்காரம் என் அறையில் நடந்துக் கொண்டு இருந்தது.
என் கணவர் பெயர் சேகர். ஒரு கணிணி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். பல இடங்கள் வரன் பார்த்து செய்து வைத்த திருமணம். இத்தனை நாள் சேர்த்து வைத்த என் இளமையை சேகருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். இல்லை..இல்லை... சேகருக்கு கொடுக்க போகிறேன். என் இன்பமும், துன்பமும் ‘அவன்’ தான். மன்னிக்கவும் ‘அவர்’ தான். திருமணம் ஆன பிறகு எப்படி தான் 'அவன்' 'அவராக' மாறுகிறது என்பதை அப்பாவிடம் மன தத்துவ ரீதியான விளக்கத்தை கேட்க வேண்டும்.
மனதில் பல கனவுகளுடன் என் அறைக்கு சென்றேன். அங்கு சேகர் எனக்காக காத்திருந்தார். என்னுடைய அறையாக இருந்தாலும், உள்ளே நுழைவதற்கு பயமாக இருந்தது. சந்தோஷம் கலந்த பயத்துன் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தேன். சேகர் என் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி கட்டில் அருகில் வைத்தார். சேகர் கைகளால் என் கையை பிடித்து கட்டிலில் உக்கார வைத்தார். அவரது கண்கள் என் தேகத்தை மேய்ந்து கொண்டு இருந்தன.
" என்னங்க அப்படியே பார்க்குறீங்க...." என்று கேட்டேன்.
"இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்க.... உன்ன அப்படி கடிச்சு சாப்பிடலாமா இருக்கு..." என்று கூறியப்படி என் அருகில் வந்தார்.
"நீங்க தொடும் போது ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்சம் நேரன் ஏதாவது பேசுவோமே !" பயத்தில் கூறினேன். அவரது தீண்டல் பிடித்திருந்தாலும், முதல் முறை என்பதால் எனக்கு பயமும் இருந்தது.
" கல்யாணத்து முன்னாடியே எல்லா பேசியாச்சு... இங்க வந்து பேசியும் நம்ப டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பல்ல..." என்று சொல்லிவிட்டு கட்டில் படுக்க வைத்தார். வார்த்தைகளுக்கும், ஆடைக்கும் அவசியம் அற்று போயின. வியர்வை ஆறாக ஓடின. அறையின் நிசப்தத்தை என் இதய துடிப்பு கலைத்தன. எங்கள் மூச்சு காத்து புயல் போல் அறையில் பரவியது.
எனக்கு போன வாரம் வந்த கனவு ஞாபகம் வந்தது. இதே போல் தான் ஒரு உருவம் என்னை அனுபவிப்பது போல் கண்டேன். இப்போது என் கணவர் என்னை அனுபவிப்பத்து கொண்டு இருக்கிறார். ஒரு வேளை நான் காணும் கனவு நிஜமாக நடக்கிறதா... என்று யோசித்தேன். என் கனவு எல்லாம் நிஜமாக நடக்கிறதா என்று எனக்குள்ளே கேட்டு பார்த்தேன்.
" ஆ...ஆ........ஆ..." என்று விரிட்டு கத்தினேன். வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுந்தேன். படுக்கையில் சேகர் இல்லை. என்னை சுற்றி மருத்துவ முகாமே அமைத்தது போல் இருந்தது. என் கண் எதிரே இரண்டு கம்ப்யூட்டர் மானிடர் ஓடிக் கொண்டு இருந்தது. மனித இயந்திரங்கள் அங்கும், இங்கும் அசைந்துக் கொண்டு இருந்தன. சேகர் இங்கு இருப்பதாக தெரியவில்லை. என் கைகள் அசைக்க முடியாமல் இரண்டு பக்கமும் பாடிலில் க்லுகோஸ் ஏறிக் கொண்டு இருந்தது. அது மட்டுமில்லாமல், என் கைகள் தோள் சுருங்கி காணப்பட்டன. இரண்டு விரலுக்கு நகமே இல்லை. தலை முடியில் இருந்து உதிர்ந்த முடி வெள்ளையாக இருந்தது. என்ன நடந்தது...? என் கணவர் சேகர் எங்கே... ? அப்பா, அம்மா எங்கே....? நினைத்து கொண்டு இருக்கையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.
" என்ன பாட்டிம்மா... தூக்கம் தெழுஞ்சிருச்சா..." என்றான்.
" நீ யாரு..." என்றேன். நான் பேசும் உதடுகள் அசைக்க மிகவும் சிரம்ம பட்டேன்.
" என் பேரு மதன். இங்க வேளை செய்யுற டாக்டர். நீங்க என்னோட பெஷன்ட் பாட்டிம்மா..." என்றான்.
" நான் பாட்டியில்ல. எனக்கு இருபது வயசு தான் ஆகுது...." கோபமாக கூறினேன்.
" ஓ.... இன்னும் கனவு உலகத்துல இருந்து வெளியே வரலைய்யா... இது 2108 ஆம் வருஷம். உங்களுக்கு நூற்றி இருபது வயசு ஆகுது. உங்க பேரங்க மெடிக்கல் ரிசர்ச்காக உங்கள இருபது வருஷம் முன்னாடி டோனேட் பண்ணியிருக்காங்க..."
" எனது..?? என்ன டோனேட் பண்ணிட்டாங்களா...!!! " அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டு இருந்தான் மதன். எனக்கு என்னவோ மாய உலகத்தில் இருப்பது போல் இருந்தது. எனக்கு ‘நூற்றி இருபது வயது’ என்று அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. இப்போது தான் என் கணவர் சேகர் என்னை கட்டிலில் தள்ளி இன்ப சுகத்தை கொடுத்தார். நான் அந்த இன்ப சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் இத்தனை வருடங்கள் எப்படி கடந்து வர முடியும் ? எனக்கு எத்தினை குழந்தைகள் பிறந்தார்கள் ? அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ? என் பேரன், பேத்திகள் என்னை எதுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கு தத்துக்கொடுக்க வேண்டும் ? எனக்கு எதுவுமே நினைவில் இல்லை.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கேள்வியாக தான் இருந்தது. குழப்பங்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. என் தந்தை அருகில் இருந்தால் குழப்பத்தை தீர்த்து வைப்பார். அப்பா இங்கு இருப்பதாக தெரியவில்லை. சேகர் எங்கே...?? இவ்வளவு நேரம் இங்கு தானே இருந்தாய்.. சேகர்... சேகர்... மனம் என் கணவரை தேடியது.
" இவ்வளவு நேரம் உங்க கணவர் சேகரோடவா இருந்தீங்களா....? " என்றான்.
" ஆமாம். அவரு இப்போ எங்க...?" என்று ஆவலுடன் கேட்டேன்.
" அவரு செத்து அம்பது வருஷம் ஆகுது. இவ்வளவு நேரம் நீங்க இருந்தது கனவு...." என்றான் மதன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.” என் கணவர் இறந்து விட்டாரா ?” , "நான் கனவோடு வாழ்ந்தேனா.... எப்படி முடியும் ? நான் நிஜம். என் அப்பா சீதாராமன் நிஜம் . என் கணவர் சேகர் நிஜம். எல்லாம் கனவு என்று சொல்கிறான் இந்த முட்டாள் மதன்." என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன்.
" நான் முட்டாள் இல்ல பாட்டிம்மா.." சிரித்துக் கொண்டே கூறினான் மதன்.
நான் மனதுக்குள் நினைப்பது இவனுக்கு எப்படி தெரியும். இதற்கு முன்பு நான் சேகருடன் இருந்ததை நினைத்தையும் கண்டு பிடித்தான். நான் நினைப்பது எப்படி அவனுக்கு தெரிந்தது…?
" ரொம்ப குழப்பிக்காதிங்க பாட்டிம்மா. நீங்க, உங்க அப்பா சீதாராமன், சேகர் எல்லாரும் நிஜம் தான். உங்களுக்கு கனவு கொடுக்கும் இயந்திரம் பொருத்தியிருக்கோம். இருபத்திரண்டாம் நூற்றாண்டு கொடுமையா வியாதிகளுல 'டிரீமிங் டிஸார்டர்' ஒண்ணு. கனவு வராம எப்படி தடுக்கனும் ஆராய்ச்சி பண்ணி மிஷின் கண்ணு பிடிக்க போறோம். அதுக்கு உங்கள எங்களுக்கு டோனேட் பண்ணியிருக்காங்க. "
‘டிரீமிங் டிஸார்டர்’ இருபத்திரண்டாம் நூற்றாண்டின் கொடுமையான வியாதியா....!!!! எனக்கு தலையே சுற்றியது.
" உங்க உடம்புல சிலிகோன் சிம் ஒண்ணு பொருத்தி இருக்கோம். உங்க கனவுகள், உள் மனது பேசும் வார்த்தைகள், எண்ணங்கள் எல்லாம் எனக்கு கேட்கும்..." என்றான்.
அடப்பாவி இது வேறையா... இவனுக்கு தெரியாமா நான் எதுவும் நினைக்க கூட முடியாதா... எல்லாம் என் தலையெழுத்து என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்.
" எப்படி இவ்வளவு வருஷம் நான் சாகமா இருக்கேன்....?"
" உங்க உடம்புக்கு நல்லா இருக்க நாங்க மருந்து கொடுக்குறோம். கனவு உங்கள ரொம்ப இளமையா வச்சிட்டு இருக்கு. மனுஷன் தன்னோட முதுமை நினைக்கும் போது தான் மரணமே வருது. உங்க கனவு உங்கள இருபது வயசுல வாழ வைக்கிறதாளா நீங்கள இவ்வளவு வருஷம் இருக்கீங்க.."
கனவு காண்பதை வியாதி என்கிறான். அதே சமயம் அந்த கனவு தான் என் மனதை இளமையாக வைத்துக் கொண்டு நீண்ட நாள் வாழ வைத்ததாக கூறுகிறான். ஜிலேப்பி போல் அவன் சொல்லுவது ஒன்று புரியாமல் இருந்தது.
"ஜிலேப்பி.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?" என்று ஒரு இயந்திரமிடம் கேட்டான் மதன்.
" இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இனிப்பு வகை உணவு. அதை எப்படி செய்வது என்ற குறிப்புகள் என் டேடா பேஸ்ஸில் இல்லை. " என்றது இயந்திரம்.
" பரவாயில்லை” என்று இயந்திரமிடம் கூறிவிட்டு “என்ன பாட்டிம்மா.. இனிப்பு வேணும்மா..." என்று கூறி இரண்டு மாத்திரை நீட்டினான் மதன்.
"என்னது இது...?" வினாவினேன்.
"இனிப்பு மாத்திரை" என்றான்.
"ஐயோ.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கே....." என்று தலையில் கை வைத்துக் கொண்டேன்.
முதுமையில் மறதி சகஜம் தான். ஆனால், என் கணவரின் மரணம், எனக்கு பிறந்த குழந்தைகள், பேரன், பேத்திகள் என்று எல்லோரையுமே மறந்து விட்டேன்.
‘நூற்றி இருபது’ வயதில் நான் வாழ்வதே அதிசயம் என்ற போது, இவர்கள் மறந்தது பெரிதாக தெரியவில்லை. என்னை ஆராய்ச்சிக்கு தத்து கொடுத்தவர்களை நினைவில் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன். என் கணவர் சேகரின் மரணத்தை மறந்ததை தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்பா சொன்ன சில வார்த்தைகள் காதோரம் ஒலித்துக் கொண்டு இருந்தது " கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."
இங்கு ‘முட்டாள்’ மதன் கனவை மிஷின் மூலம் தடுக்க பார்க்கிறேன் என்று நினைத்தேன். இருப்பத்தி ஓறாம் நூற்றாண்டில் படித்த சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதை விட மிகையாகவே நேரில் பார்க்கிறேன். தூக்கம் கண்களில் குடிப்புக தொடங்கியது. கனவு மெல்ல மெல்ல என் தூக்கத்திற்குள் நுழைந்தது.
சேகர் என்னை நோக்கி வருகிறார். அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தார். நான் சேகரை ஆசையோடு அனைத்துக் கொண்டேன். இருவரும் இன்ப உலகத்திற்கு சென்றோம்.
என் கனவில் சல்லாபம் செய்வதை ‘முட்டாள்’ மதன் கேட்டுக் கொண்டு இருந்தான்.
----
அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிக்காக எழுதியது. போட்டி முடிவு வழக்கம் போல் உத்திக்கிச்சு...
Monday, March 2, 2009
ரைட் சகோதரர்கள்
வானத்தில் பறக்க வேண்டும். வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. இந்த ஆசைகள் எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது? பலருக்கும் அந்த ஆசைகள் காற்றாகப் போய்விட்டது. அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. ஏனென்றால் பலரும் தங்கள் ஆசையைச் செயல்படுத்த, வாழ்க்கையில் முன்னேற்றமடைய, முயற்சிகள் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ரைட் சகோதரர்கள் பறக்க நினைத்தார்கள். பறந்தார்கள், பலரையும் பறக்க வைத்து விட்டார்கள்.
மில்டன் ரைட் தன் குழந்தைகள் விளையாட வாங்கி வந்த பறக்கும் பொம்மை, அவருடைய குழந்தைகளில் வில்பர் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் ஆகிய இருவரிடத்திலும் வானில் பறக்கும் புதிய விசையைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தோற்றுவிக்க அந்த முயற்சியில் இறங்கினர். அவர்கள் முயற்சியில் எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் மாற்றி தங்கள் ஆர்வத்தை விடாமல் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
வாழ்க்கையை ஓட்டத் தேவையான பணத்திற்கு அவர்கள் பழைய சைக்கிள்களை வாங்கி புதிய சைக்கிள்களாக மாற்றும் சைக்கிள் மெக்கானிக்குகளாக பணிபுரிந்தாலும் பறக்கும் பொருளை உருவாக்கும் எண்ணத்திலிருந்து கீழிறங்காமல், கல்யாணம் எதுவும் முடித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். இவர்களின் எண்ணத்திற்கு உறுதுணையாக இவர்களின் சகோதரி காத்ரீன் ரைட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் உதவி வந்தார்.

கடைசியில் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பிரான்ஸில் இருக்கும் "வி மென்ஸ்" என்ற இடத்தில் வில்பர் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானத்தில் நாற்பத்தைந்து வினாடிகள் வானில் பறந்து காட்டினார். அதன் பிறகு ரைட் சகோதரர்கள் 1909-ல் ரைட் கம்பெனி என்ற பெயரில் விமானம் தயாரிக்கும் கம்பெனியைத் துவக்கினர். இக்கம்பெனியில் விமானம் தயாரிக்க துவக்கத்தில் இருந்து உதவி வந்த சார்லி டைலரைக் கவுரவப்படுத்தும் விதமாக முக்கியப் பொறுப்பு கொடுத்து அளவுக்கு அதிகமான சம்பளமும் கொடுத்து வந்தார்கள். இப்போதெல்லாம் காரியம் முடிந்ததா அவனைக் கழற்றிவிடு என்றிருக்கும் நிலையில் ரைட் சகோதரர்கள் பழசை மறக்காத உத்தமர்கள்தான்.
இந்த உத்தம சகோதரர்களை ரைட் சகோதரர்கள் எனும் தலைப்பில் குகன் எழுதியிருக்கிறார். இந்த நூலை சென்னை, Prodigy வெளியிட்டிருக்கிறது. தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலைத் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் தங்கள் நூலகங்களுக்கு வாங்கி ரைட் சகோதரர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
நூலை வாங்க...
கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
நன்றி : முத்துகமலம்.காம்
மில்டன் ரைட் தன் குழந்தைகள் விளையாட வாங்கி வந்த பறக்கும் பொம்மை, அவருடைய குழந்தைகளில் வில்பர் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் ஆகிய இருவரிடத்திலும் வானில் பறக்கும் புதிய விசையைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தோற்றுவிக்க அந்த முயற்சியில் இறங்கினர். அவர்கள் முயற்சியில் எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் மாற்றி தங்கள் ஆர்வத்தை விடாமல் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
வாழ்க்கையை ஓட்டத் தேவையான பணத்திற்கு அவர்கள் பழைய சைக்கிள்களை வாங்கி புதிய சைக்கிள்களாக மாற்றும் சைக்கிள் மெக்கானிக்குகளாக பணிபுரிந்தாலும் பறக்கும் பொருளை உருவாக்கும் எண்ணத்திலிருந்து கீழிறங்காமல், கல்யாணம் எதுவும் முடித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். இவர்களின் எண்ணத்திற்கு உறுதுணையாக இவர்களின் சகோதரி காத்ரீன் ரைட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் உதவி வந்தார்.

கடைசியில் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பிரான்ஸில் இருக்கும் "வி மென்ஸ்" என்ற இடத்தில் வில்பர் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானத்தில் நாற்பத்தைந்து வினாடிகள் வானில் பறந்து காட்டினார். அதன் பிறகு ரைட் சகோதரர்கள் 1909-ல் ரைட் கம்பெனி என்ற பெயரில் விமானம் தயாரிக்கும் கம்பெனியைத் துவக்கினர். இக்கம்பெனியில் விமானம் தயாரிக்க துவக்கத்தில் இருந்து உதவி வந்த சார்லி டைலரைக் கவுரவப்படுத்தும் விதமாக முக்கியப் பொறுப்பு கொடுத்து அளவுக்கு அதிகமான சம்பளமும் கொடுத்து வந்தார்கள். இப்போதெல்லாம் காரியம் முடிந்ததா அவனைக் கழற்றிவிடு என்றிருக்கும் நிலையில் ரைட் சகோதரர்கள் பழசை மறக்காத உத்தமர்கள்தான்.
இந்த உத்தம சகோதரர்களை ரைட் சகோதரர்கள் எனும் தலைப்பில் குகன் எழுதியிருக்கிறார். இந்த நூலை சென்னை, Prodigy வெளியிட்டிருக்கிறது. தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலைத் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் தங்கள் நூலகங்களுக்கு வாங்கி ரைட் சகோதரர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
நூலை வாங்க...
கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
நன்றி : முத்துகமலம்.காம்
Sunday, March 1, 2009
என்னால தாங்க முடியலே சார்...!
"சீக்கிரம் வாம்மா பார்கவி.... ரெயில் கிளம்பப் போகுது..." - தன் மனைவியை அவரப்படுத்திக் கொண்டே விரைந்தான் சினிவாசன்.
"குழந்தைய வாங்கிக்கோங்க... என்னால வேகமா நடக்க முடியல..." - குழந்தையை நீட்டினாள் பார்கவி.
"வாடா செல்லம்... நாம போவோம்... இந்த அம்மா வேண்டாம்..." என்று கூறியபடி தன் குழந்தையை வாங்கினான்.
வெள்ளிக்கிழமை என்றால் எழும்பூர் ரெயில்வே நிலையத்தின் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு நாள் விடுமுறை என்றாலே ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. புத்தாண்டு விடுமுறை வேறு... எழும்பூர் நிலையம் முழுக்க வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்கி பலர் காத்துக் கொண்டு இருந்தனர்.
நல்ல வேளை சீனிவாசனுக்கு கடைசி நிமிடத்தில் டிக்கேட் கன்ஃபார்ம் ஆனது. சேர்ந்து கிடைத்த இந்த நான்கு நாள் லீவை திருச்சியில் இருக்கும் தன் பெற்றோர்களுடன் கழிக்க தன் மனைவி, குழுந்தையுடன் செல்கிறான்.
ராக்போர்ட் ட்ரெயின் புறப்படும் நேரத்தில் சீனிவாசன், பார்கவி ரயிலை பிடித்தனர்.
"பார்கவி ! கோச் நம்பர் எஸ்-10 தானே...சீட் நம்பர் என்ன...?"
"கோச் நம்பர் எஸ்-10 தான் கொஞ்சம் இருங்க... டிக்கெட்டைப் பார்த்து சீட் நம்பரைப் சொல்றேன்..." என்றபடி தன் பையில் இருந்து டிக்கெட்டை எடுத்து, " 51, 52...ங்க " - என்றாள்.
கோச் நம்பர் எஸ்-10க்குள் ஏறி தங்கள் சீட்டை சரிபார்த்தபடி இருவரும் அமர்ந்தனர். குழந்தை அம்மாகிட்ட போக வேண்டும் என்பது போல் கையை அம்மாவை நோக்கிக் காண்பித்ததால் பார்கவியிடம் குழந்தையைக் கொடுத்தான்.
பின்பு தங்கள் சீட்டுக்கு அடியில் தாங்கள் கொண்டு வந்த பேக்குகளைப் பத்திரப்படுத்தினான்.
இவர்கள் இருந்த சீட்டிற்கு எதிர்புறத்தில் ஒரு முதியவரும் இருந்தார். அவருக்கு அனேகமாக அறுபது வயதிருக்கும்.
"சார், நீங்க எங்க இறங்குவீங்க....?" - என்றான் சினிவாசன்.
"நான் ஸ்ரீ ரங்கத்துல இறங்கனும் தம்பி... நீங்க...?" - என்றார் முதியவர்.
"நான் திருச்சி ஜங்ஷன்ல இறங்குவேன். நீங்க இறங்கும் போது நாங்க தூங்கிட்டு இருந்தா... எங்கள எழுப்புறீங்களா..."
"கண்டிப்பா எழுப்புறேன்... உங்க பெர் என்ன...?" - என்று கேட்டார் அந்தப் பெரியவர்.
"சீனிவாசன்... நீங்க..." -
"என் பெயர் நாராயணன். ரிட்டையர்டு BHEL எம்பிலாயி..." - பெருமையுடன் கூறினார் நாராயணன்.
இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில், பார்கவி தன் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது சினிவாசன் கையில் இருந்த நாளிதழை வாங்கி நாராயணன் படித்தார்.
"இன்னைக்கு எல்லா பேப்பர்லையும் ஒக்கேனக்கல் பிரச்சனை தான்... இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்து நல்ல பப்ளிசிட்டி தேடிக்கிறாங்க.."
சீனிவாசன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். ஆனால், நாராயணன் சும்மா இருக்கவில்லை.
"இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்தா காவேரி, ஒக்கேனக்கல் பிரச்சனை தீர்ந்திடுமா... தண்ணி இல்லைன்னா தண்ணி இருக்குற ஊராகப் பார்த்து போக வேண்டியது தானே.... என்ன சார் நான் சொல்லுறது..." - என்று அவரது கருத்துக்கு சீனிவாசனிடம் ஆதரவு தேடினார்.
அந்தப் பெரியவரின் கருத்து தவறாகத் தோன்றவே சீனிவாசன் அமைதியாக இருக்க விரும்பவில்லை. நாராயணன் மீது கோபத்துடன் பேசினான்.
"சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருக்குறது அவங்க எதிர்ப்பைக் காட்ட... பப்ளிசிட்டிகாக இல்ல. முதல்ல அத தெரிஞ்சிக்கோங்க. தமிழ் நாட்டுல இருந்துகிட்டு, தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்பிட்டு தமிழன் அடிவாங்குறத பார்த்து நமக்குத்தான் ரோஷம் வரல. அவங்களாச்சும் தமிழ் உணர்வோட இருக்காங்களேன்னு... சந்தோஷப்படுங்க சார்"
"தம்பி நான் என்னோட அபிப்ராயத்த சொன்னேன்...அதுக்கு ஏன் இப்படிக் கோபப்படுறீங்க...?"
"எது அபிப்ராயம்...? தண்ணி இல்லைனா தண்ணி இருக்குற ஊரைப் பார்த்து போகறதா... இங்க தான் ! நாம பொறந்தோம்...இங்கதான் வாழ்ந்தோம்... இது நம்ம ஊருங்கிற உணர்வு வரனும்... அந்த உணர்வு இல்லாம உங்கள மாதிரி இருந்தா... கர்நாடகா, கேரளா, ஆந்திரா இப்படி எல்லாரும் தமிழனை மட்டம் தட்டுவாங்க... கன்னடக்காரனுக்கு மொழி வெறி இருக்கும் போது... நமக்கு தமிழ் உணர்வாவது இருக்க வேண்டாமா...?" மேலும் கோபத்துடன் பேசினான் சீனிவாசன்.
"பயங்கற தமிழ் வெறியனா இருப்பான் போல " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நாராயணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
ரயில் விழுப்புரம் வந்து அடைந்திருந்தது. அந்த ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடங்களாவது நிற்கும் ஏதாவது சாப்பிடுவதற்கு வாங்கலாம் என்று நினைத்தான்
அப்போதுதான் அவனின் மொபைல் ஒலித்தது. தன் மோபைலை எடுத்துப் பேசினான்...
"ஹலோ... செப்பும்மா. இப்புடு விழுப்புரம்ல வுண்டா... இக்க ட்ரெயின் வொச்சேதானிக்கு இரண்டு கென்ட சேப்பு அவுனும்..." என்றான் சீனிவாசன்.
சீனிவாசன் சரியாக சிக்னல் கிடைக்காமல் மெதுவா அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிருந்தாலும் சற்று உரக்க கத்தியதில் அவனுடைய பேச்சு நாராயணன் காதில் விழுந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக நகர்ந்த போதுதான் அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.
நாராயணன் சற்று தயக்கத்துடன் கேட்டார், " சார்... நீங்க தெலுங்கா...?"
"ஆமாம்... சீனிவாச ராவ்..." என்றான்.
"தெலுங்கா இருக்கீங்க.... தமிழனப் பத்தி தப்பாச் சொன்னா உங்களுக்கு அதிகமாக் கோபம் வருதே...?" - என்றார் மெதுவாக.
"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே... இந்தத் தமிழ்நாட்டுலதான். தமிழ் நாட்டில சாப்பிட்ட சோறு என் உடம்புல இரத்தமா ஓடுது... அந்த நன்றி உணர்ச்சி பல தலைமுறையா இங்கேயே வாழ்ந்த தமிழனுக்கு இல்லாததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்... இதுக்காக கன்னடமொழி பேசுறவங்களோ இல்லை வேறு மொழி பேசுறவங்களோ எனக்கு எதிரிகளில்லை... நாமெல்லோரும் இந்தியர்கள்தான். மொழி வழியில் பாகுபாடுகளிருக்கலாம். அதே சமயம் ஒரே நாட்டுக்குள்ள எந்தப் பாகுபாடுமில்லாமல் ஓடி வருகிற நதியை மொழியாலும், ஒரு சில அரசியல் லாபத்துக்காகவும் பிரித்தாளும் நிலையை என்னால தாங்க முடியலே சார்..." என்றான் சீனிவாசன்.
"யோசித்துப் பார்த்தால் நீங்க சொல்றது சரின்னுதான் படுது..."என்று சொன்னபடி நாராயணன் தூங்கிப் போனார்.
ஆனால் அதற்குப் பின்பு சீனிவாசனுக்குத் தூக்கம் வரவேயில்லை.
ரயில் ஸ்ரீ ரங்கம் வந்திருந்தது.
சீனிவாசன் நாராயணனை எழுப்பி, "சார் ஸ்ரீ ரங்கம் ஸ்டேசன் வந்துடுச்சு" என்றான்.
"சரியான சமயத்தில என்னை எழுப்பி விட்டுட்டீங்க...ரொம்ப நன்றி தம்பி..." என்றபடி ஸ்ரீ ரங்கம் ஸ்டேஷனில் இறங்கினார் அந்தப் பெரியவர் நாராயணன்.
நன்றி : முத்துகமலம்.காம்
"குழந்தைய வாங்கிக்கோங்க... என்னால வேகமா நடக்க முடியல..." - குழந்தையை நீட்டினாள் பார்கவி.
"வாடா செல்லம்... நாம போவோம்... இந்த அம்மா வேண்டாம்..." என்று கூறியபடி தன் குழந்தையை வாங்கினான்.
வெள்ளிக்கிழமை என்றால் எழும்பூர் ரெயில்வே நிலையத்தின் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு நாள் விடுமுறை என்றாலே ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. புத்தாண்டு விடுமுறை வேறு... எழும்பூர் நிலையம் முழுக்க வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்கி பலர் காத்துக் கொண்டு இருந்தனர்.
நல்ல வேளை சீனிவாசனுக்கு கடைசி நிமிடத்தில் டிக்கேட் கன்ஃபார்ம் ஆனது. சேர்ந்து கிடைத்த இந்த நான்கு நாள் லீவை திருச்சியில் இருக்கும் தன் பெற்றோர்களுடன் கழிக்க தன் மனைவி, குழுந்தையுடன் செல்கிறான்.
ராக்போர்ட் ட்ரெயின் புறப்படும் நேரத்தில் சீனிவாசன், பார்கவி ரயிலை பிடித்தனர்.
"பார்கவி ! கோச் நம்பர் எஸ்-10 தானே...சீட் நம்பர் என்ன...?"
"கோச் நம்பர் எஸ்-10 தான் கொஞ்சம் இருங்க... டிக்கெட்டைப் பார்த்து சீட் நம்பரைப் சொல்றேன்..." என்றபடி தன் பையில் இருந்து டிக்கெட்டை எடுத்து, " 51, 52...ங்க " - என்றாள்.
கோச் நம்பர் எஸ்-10க்குள் ஏறி தங்கள் சீட்டை சரிபார்த்தபடி இருவரும் அமர்ந்தனர். குழந்தை அம்மாகிட்ட போக வேண்டும் என்பது போல் கையை அம்மாவை நோக்கிக் காண்பித்ததால் பார்கவியிடம் குழந்தையைக் கொடுத்தான்.
பின்பு தங்கள் சீட்டுக்கு அடியில் தாங்கள் கொண்டு வந்த பேக்குகளைப் பத்திரப்படுத்தினான்.
இவர்கள் இருந்த சீட்டிற்கு எதிர்புறத்தில் ஒரு முதியவரும் இருந்தார். அவருக்கு அனேகமாக அறுபது வயதிருக்கும்.
"சார், நீங்க எங்க இறங்குவீங்க....?" - என்றான் சினிவாசன்.
"நான் ஸ்ரீ ரங்கத்துல இறங்கனும் தம்பி... நீங்க...?" - என்றார் முதியவர்.
"நான் திருச்சி ஜங்ஷன்ல இறங்குவேன். நீங்க இறங்கும் போது நாங்க தூங்கிட்டு இருந்தா... எங்கள எழுப்புறீங்களா..."
"கண்டிப்பா எழுப்புறேன்... உங்க பெர் என்ன...?" - என்று கேட்டார் அந்தப் பெரியவர்.
"சீனிவாசன்... நீங்க..." -
"என் பெயர் நாராயணன். ரிட்டையர்டு BHEL எம்பிலாயி..." - பெருமையுடன் கூறினார் நாராயணன்.
இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில், பார்கவி தன் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது சினிவாசன் கையில் இருந்த நாளிதழை வாங்கி நாராயணன் படித்தார்.
"இன்னைக்கு எல்லா பேப்பர்லையும் ஒக்கேனக்கல் பிரச்சனை தான்... இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்து நல்ல பப்ளிசிட்டி தேடிக்கிறாங்க.."
சீனிவாசன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். ஆனால், நாராயணன் சும்மா இருக்கவில்லை.
"இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்தா காவேரி, ஒக்கேனக்கல் பிரச்சனை தீர்ந்திடுமா... தண்ணி இல்லைன்னா தண்ணி இருக்குற ஊராகப் பார்த்து போக வேண்டியது தானே.... என்ன சார் நான் சொல்லுறது..." - என்று அவரது கருத்துக்கு சீனிவாசனிடம் ஆதரவு தேடினார்.
அந்தப் பெரியவரின் கருத்து தவறாகத் தோன்றவே சீனிவாசன் அமைதியாக இருக்க விரும்பவில்லை. நாராயணன் மீது கோபத்துடன் பேசினான்.
"சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருக்குறது அவங்க எதிர்ப்பைக் காட்ட... பப்ளிசிட்டிகாக இல்ல. முதல்ல அத தெரிஞ்சிக்கோங்க. தமிழ் நாட்டுல இருந்துகிட்டு, தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்பிட்டு தமிழன் அடிவாங்குறத பார்த்து நமக்குத்தான் ரோஷம் வரல. அவங்களாச்சும் தமிழ் உணர்வோட இருக்காங்களேன்னு... சந்தோஷப்படுங்க சார்"
"தம்பி நான் என்னோட அபிப்ராயத்த சொன்னேன்...அதுக்கு ஏன் இப்படிக் கோபப்படுறீங்க...?"
"எது அபிப்ராயம்...? தண்ணி இல்லைனா தண்ணி இருக்குற ஊரைப் பார்த்து போகறதா... இங்க தான் ! நாம பொறந்தோம்...இங்கதான் வாழ்ந்தோம்... இது நம்ம ஊருங்கிற உணர்வு வரனும்... அந்த உணர்வு இல்லாம உங்கள மாதிரி இருந்தா... கர்நாடகா, கேரளா, ஆந்திரா இப்படி எல்லாரும் தமிழனை மட்டம் தட்டுவாங்க... கன்னடக்காரனுக்கு மொழி வெறி இருக்கும் போது... நமக்கு தமிழ் உணர்வாவது இருக்க வேண்டாமா...?" மேலும் கோபத்துடன் பேசினான் சீனிவாசன்.
"பயங்கற தமிழ் வெறியனா இருப்பான் போல " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நாராயணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
ரயில் விழுப்புரம் வந்து அடைந்திருந்தது. அந்த ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடங்களாவது நிற்கும் ஏதாவது சாப்பிடுவதற்கு வாங்கலாம் என்று நினைத்தான்
அப்போதுதான் அவனின் மொபைல் ஒலித்தது. தன் மோபைலை எடுத்துப் பேசினான்...
"ஹலோ... செப்பும்மா. இப்புடு விழுப்புரம்ல வுண்டா... இக்க ட்ரெயின் வொச்சேதானிக்கு இரண்டு கென்ட சேப்பு அவுனும்..." என்றான் சீனிவாசன்.
சீனிவாசன் சரியாக சிக்னல் கிடைக்காமல் மெதுவா அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிருந்தாலும் சற்று உரக்க கத்தியதில் அவனுடைய பேச்சு நாராயணன் காதில் விழுந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக நகர்ந்த போதுதான் அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.
நாராயணன் சற்று தயக்கத்துடன் கேட்டார், " சார்... நீங்க தெலுங்கா...?"
"ஆமாம்... சீனிவாச ராவ்..." என்றான்.
"தெலுங்கா இருக்கீங்க.... தமிழனப் பத்தி தப்பாச் சொன்னா உங்களுக்கு அதிகமாக் கோபம் வருதே...?" - என்றார் மெதுவாக.
"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே... இந்தத் தமிழ்நாட்டுலதான். தமிழ் நாட்டில சாப்பிட்ட சோறு என் உடம்புல இரத்தமா ஓடுது... அந்த நன்றி உணர்ச்சி பல தலைமுறையா இங்கேயே வாழ்ந்த தமிழனுக்கு இல்லாததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்... இதுக்காக கன்னடமொழி பேசுறவங்களோ இல்லை வேறு மொழி பேசுறவங்களோ எனக்கு எதிரிகளில்லை... நாமெல்லோரும் இந்தியர்கள்தான். மொழி வழியில் பாகுபாடுகளிருக்கலாம். அதே சமயம் ஒரே நாட்டுக்குள்ள எந்தப் பாகுபாடுமில்லாமல் ஓடி வருகிற நதியை மொழியாலும், ஒரு சில அரசியல் லாபத்துக்காகவும் பிரித்தாளும் நிலையை என்னால தாங்க முடியலே சார்..." என்றான் சீனிவாசன்.
"யோசித்துப் பார்த்தால் நீங்க சொல்றது சரின்னுதான் படுது..."என்று சொன்னபடி நாராயணன் தூங்கிப் போனார்.
ஆனால் அதற்குப் பின்பு சீனிவாசனுக்குத் தூக்கம் வரவேயில்லை.
ரயில் ஸ்ரீ ரங்கம் வந்திருந்தது.
சீனிவாசன் நாராயணனை எழுப்பி, "சார் ஸ்ரீ ரங்கம் ஸ்டேசன் வந்துடுச்சு" என்றான்.
"சரியான சமயத்தில என்னை எழுப்பி விட்டுட்டீங்க...ரொம்ப நன்றி தம்பி..." என்றபடி ஸ்ரீ ரங்கம் ஸ்டேஷனில் இறங்கினார் அந்தப் பெரியவர் நாராயணன்.
நன்றி : முத்துகமலம்.காம்
Subscribe to:
Posts (Atom)