வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label நடைபாதை. Show all posts
Showing posts with label நடைபாதை. Show all posts

Wednesday, June 30, 2010

நடைபாதை - எதிர்வினை

அன்பரீர் ! வாழ்க !

தங்களின் 112 பக்கத்தில் அடங்கிய 24 தலைப்புக்கள் கொண்ட 'நடைபாதை' சிறுகதைத் தொகுப்பை, 11.10.08ல் பெற்றேன். படித்தேன்.

சிறுகதைகள் ஒவ்வொன்றும் தங்களின் சமூதாய உணர்வைக் காட்டிய வண்ணம், எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ரசித்தேன். குறிப்பாக 'வலி' என்ற சிறுகதையும், 'இன்னொரு கண்ணதாசன்', 'உனக்கு நீ செய்யும் உதவி' போன்றவை நன்று.

'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதை 'உரத்தசிந்தனையின் பரிசு பெற்றது என்று நினைக்கிறேன். அதில் படித்ததாக நினைவு. சரியா ?

சிறுகதைகள் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவை மட்டுமல்ல; சில ச்மூதாயப் பழுது நீக்குபவையும் ஆகும். உங்கள் முயற்சி வெல்க !

கட்டுரையிலிருந்து கதை எழுத முயற்சி எடுத்திருக்கிறீர்கள். 'எனது கீதை'யிலிருந்து இது மாறுபட்டிருப்பதும், முன்னேற்றப்பாதையில் செல்வதும் நன்று. கூடுமானவரை ஆங்கில சொற்களைத் தவிர்த்த பேச்சு மொழியை இனி பயன்படுத்துக.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அரிமா மூரளீதரன்
15.10.2008



நான் சந்தித்த வாசகர்களில் மிகவும் வித்தியாசமானவர். எந்த புத்தகம் கொடுத்தாலும் இரண்டே நாட்களில் படித்து முடித்து அதன் விமர்சனத்தை தபாலில் அனுப்பி விடுவார்.

'எனது கீதை' நூல் வெளியீட்டு முன்பு நாள், இவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புத்தகத்தை பற்றி பாராட்டி பேசினார். நூல் வெளிவர முன்பே எப்படி புத்தகம் இவருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. புத்தகம் படித்து விட்டு கருத்துக்கள் சொல்பவர்கள் மிக சிலரே. அதில், முரளீதரன் போன்றவர் மிகவும் வியப்பு தக்க மனிதர். தொலைப்பேசியில் கருத்தை கூறினாலும், கடித்ததில் எழுதி அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று கடித்தம் எழுதி அனுப்புவார்.

இவ்வளவு ஆர்வமுள்ளவராக இருப்பவர் இளைஞராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இவரை நேரில் சந்திக்கும் போது ஏமாற்றம் தான். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர். 63 வயது.

சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரை, கதை கொண்டு நினைவில் வைத்து பேசுவார். தீவிரமாக வாசித்தவர்களை பார்த்திருக்கிறேன். வாசித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு மனிதனை சந்தித்தேன் என்றால் அது இவர் தான். என்னுடைய எழுத்துக்களை மட்டுமல்லாமல் மற்றவர் எழுதிய கட்டுரை, கதைகளை அந்த எழுத்தாளரிடம் சொல்லி தன் கருத்தை கூறுவார். இவர் போன்ற வாசகரை பார்க்கும் போது தான் எழுத்துபவருக்கு தன் எழுத்து மீது நம்பிக்கை பிறக்கிறது.

சமீபத்தில் உடல் நல குறைவால் எந்த நிகழ்ச்சிக்கும் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. ஒய்வு பெறும் வரை குடும்பத்திற்காக உழைத்தவர். ஒய்வு பெற்ற பிறகு 'தமிழுக்காக உழைத்தேன்' என்று சொல்லுவார். ஆனால், அவர் உடல் ஒத்துழைக்கவில்லை.

இவருடைய விமர்சனத்தை படிக்கும் போதும், கேட்கும் போதும் உத்வேகமாய் இருந்தது. அதே சமயம் செய்ய நினைத்ததை காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும் பயமும் பற்றிக் கொண்டது.

நடைபாதை நூலை வாங்க...

Friday, March 13, 2009

எல்லாம் நடந்த பிறகு.....

போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு காவலாளிகளும் மௌனமாக இருந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஆண்களும் சரி, அரையாடையில் பெண்களும் சரி காவல் நிலையத்தில் நிற்பதை தங்கள் கௌரவத்திற்கு கேடாக நினைக்கவில்லை. தாங்கள் செய்தது நியாயம் என்ற நினைத்துக் கொண்டு இருந்தார்கள். மனதில் துளிக் கூட குற்ற உணர்வு இல்லை. இன்ஸ்பெக்டர் சுந்தரம் கமிஷ்னர் கார்மேகம் வந்து விசாரிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தான். பிடிப்பட்ட எல்லோரும் பெரிய இடத்தில் சேர்ந்தவர்கள். கார்மேகம் உத்தரவுப்படி தான் அந்த ஆண்களையும், பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தான். அதனால், அவர் வந்துப் பார்த்துக் கொள்ளட்டும் நமக்கு ஏன் பெரிய இடத்து வம்பு என்று இருந்தான்.

"அரையாடையில் இருந்த பெண் ஒருத்தி ... நாங்க என்ன பெருசா தப்பு பண்ணிட்டோம். எல்லோரும் செய்றத தான் நாங்களும் செஞ்சோம்.. இது என்ன பெரிய தப்பா.... ராத்திரி வேளையில போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தா... எங்கள பத்தி என்ன நினைப்பாங்க..."

"எம்மா ராத்திரி வேளையில இந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ணலாம்.... போலீஸ் ஸ்டேஷன்ல நிக்கிறது கௌரவக் குறைச்சால தெரியுதா உங்களுக்கு.." என்றான் சுந்தரம்.

அந்த காவல்நிலையத்தில் டெலிபோன் மணி ஓயாமால் அடித்துக் கொண்டே இருந்தது. சுந்தரம் அமைதியாக இருந்தான்.

"சார்... போன் எடுக்கவா.." என்றான் கான்ஸ்டேபில்.

"வேண்டாம்... யார் போன் பண்றாங்க நமக்கு எப்படி தெரியும்... இவங்கள விட சொன்னா அப்புறம் அந்த கமிஷ்னர் கிட்ட யார் பதில் சொல்றது..."

சுந்தரம் பேசிக் கொண்டு இருக்கும் போது கார்மேகம் அந்த காவல் நிலைத்திற்கு நுழைந்தான். கமிஷ்னர் வருவதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அங்கு இருக்கும் எல்லா காவலளர்களும் கார்மேகத்திற்கு சலுயூட் அடித்தார்கள்.

"இந்த மரியாதைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... கொடுக்குற வேளைய கடமையா நினைச்சு செய்யுங்க.. பயந்துக்கிட்டு செய்யாதிங்க..."

கார்மேகம் நல்ல கட்டுமஸ்தான உடம்பு.போலீஸ்குரிய கம்பீரம். நேர்மை இவன் இரத்தமென்றால், கடமை இவனுடைய நாடி துடிப்பு.

"சார்... நாங்க என்ன தப்பு பண்ணோம் நினைச்சு இங்க வந்து கூட்டிட்டு வந்திங்க..." பிடிப்பட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்த விமலா கார்மேகத்திடம் கோபமாக கேட்டாள்.

"நீ என்ன தப்பு பண்ணேணு உனக்கே தெரியாத அளவுல நீ இருக்க.... அரைகுறையா டிரஸ் பண்ணி ஆடுற... அப்போ உன் மானத்தை பத்தி கவலப்படாதவ ... இப்போ மட்டும் உன் மானத்தை பத்தி நீ யோசிக்கிறாயா ?"

"நாங்க மாசம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறோம்...எங்க சம்பாதியத்துல ஆடுறோம். அது எங்க இஷ்டம். உங்களுக்கு என்ன வந்தது... நாங்க நடு ரோட்டுல ஆடலைய... ஸ்டார் ஒட்டல...தான் டான்ஸ் பண்ரோம்... அதுல என்ன தப்பு.."

"நீ தண்ணி அடிச்சு... அரைகுறையா டிரஸ் பண்ணி டான்ஸ் ஆடும் போது மத்தவங்க உன் உடம்பை பார்க்கும் போது உனக்கு கூச்சமா இல்ல...."

"அத பத்தி கவல பட வேண்டியது நான்... என்ன கல்யாணம் பண்ணிக்க போறவன்... நீங்க இல்ல.."

இதற்கும் மேல் விமலாவிடம் பேசினால் தனக்கு தான் மரியாதை கேடும் என்பதால்... மற்றவர்களை விசாரித்தான். விமலாவின் தோழி ஸ்வேதாவை விசாரித்தான். அவள் வட இந்திய பெண் என்பதால் தமிழ் தெரியவில்லை. அரை அடையில் நின்ற பாதி பெண்களுக்கு தமிழ் தெரியவில்லை. ஒரு சிலர் ஆந்திரம், பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து இங்குள்ள கணினித்துறையில் வேலை செய்கிறவர்கள்.

கார்மேகம் சென்னையில் இருக்கும் ஆண்கள், பெண்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்திற்கு வர சொல்கிறான்.
விமலாவின் ஆண் நண்பனான சுரேஷ் என்பவனை கார்மேகம் விசாரிக்கும் போது "நாங்க படிச்சவங்க... நல்லது எது ? கெட்டது எது ? எங்களுக்கு தெரியும். நாங்க யாரும் எந்த பொண்ணுங்க கிட்டடையும் தப்ப நடந்துக்கல... நீங்க வேணும் எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேட்டு பாருங்க..."
எந்த பெண்ணும் யாரும் தங்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாக சொல்லவில்லை.

"நாங்க எப்படி போனா உங்களுக்கு என்ன.... ராத்திரி ஸ்டார் ஒட்டல டான்ஸ் அடக் கூடாதுனு சட்டம் எதாவாச்சி இருக்கா என்ன ? எங்கள பெத்தவங்ககளே இதப்பத்தி எங்ககிட்ட கேக்கிறது கிடையாது... நீங்க யாரு இதை பத்தி கேக்க...." என்றாள் விமலா.

தமிழ் பண்பாடை மறந்து போனவர்களுக்கு நினைவுட்டலாம்... ஆனால், விரும்பாதவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது.


விமலாவின் பெற்றோர்கள், சுரேஷ்யின் பெற்றோர்கள் மற்றும் அந்த நட்சத்திர ஒட்டலில் ஆடும் போது பிடிக்கப்பட்ட மற்றவர்களின் பெற்றோர்களும் காவல்நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

கார்மேகம் அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லி அவர்களை திருத்த நினைத்தான்.

"எங்க பசங்க என்ன தப்பு பண்ணாங்க...."

"ராத்திரி ஸ்டார் ஒட்டல்ல ... பீர் கூச்சிக்கிட்டு...டான்ஸ் ஆடுனாங்க..... அதுவும் அரைகுAயா டிரஸ் வேற.... அதுக்கு தான் போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வர சொன்னேன்..."

"அவங்க என்ன குடிச்சு ... நடு ரோட்டுலயா அடுறாங்க.... கவர்மென்ட் பர்மிஷன் கொடுத்த ஒட்டல்ல தான் ஆடுறாங்க... அதுல என்ன பெரிய தப்பா... நீங்க எப்படி ராத்திரி வேளையில போலீஸ் ஸ்டேஷன்ல கூட்டுக்கிட்டு வரலாம்...."

கார்மேகத்திற்கு தூக்கிவாரிப் போட்டது. நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

"எங்க பெத்தவங்க நீங்களே உங்க பசங்கலுக்கு நல்ல புத்திமதி சொல்லறத விட்டு இப்படி பொறுப்பில்லாம பேசுறிங்க..."

"என் பொண்ணு பீர் அடிச்சு சுத்துறது எங்க வீட்டு விஷயம்.... நாங்க தான் அவங்க கண்டிக்கனும்.... நீங்க யாரு... ராத்திரி வேளையில என் பொண்ண ஸ்டேஷனுக்கு கொண்டுவந்ததுக்கு மேல் இடத்துல கம்ப்ளைண்ட் பண்ணா என்னாகும் தெரியுமா..."

"இதோ பாருங்க ரொம்ப பேசுரீங்க..... தப்பு நடந்தது அப்புறம் வரது விட முன்னாடியே தடுக்கலாம் நினைச்சேன்... அது தப்புனு புரியுது... சட்டப்படி ஒரு ஒட்டல்ல டான்ஸ் அடுறது தப்பில்ல தான்... ஆனா ஒரு பொண்ணு குடிச்சிட்டு ஆடுறது வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கும் நல்லது இல்ல... சொன்ன உங்களுக்கு புரியாது.... பட்டாதான் உங்களுக்கு புரியும்"

விமலா சம்பளத்தால் தான் நடுத்தரமாக இருந்த அவர்கள் குடும்பம் சற்று வசதியான நிலைக்கு வந்தது. அதனால், அவள் என்ன செய்தாலும் அவர்கள் பெற்றோர்கள் எதுவும் கேட்க மாட்டார்கள். மற்றவர்களின் பெற்றோர்கள் சமானாமாக பேசி சென்றார்கள். இந்திய பொருளாதாரத்தில் வளர உதவுவதும் கணினித்துறை. இந்தியாவின் பண்பாட்டை மாற்றிக் கொண்டு இருப்பதும் கணினித்துறை. பெற்றோர்களே கேட்காத போது நாம் சொன்னால் யார் மதிப்பார்கள் என்று கார்மேகமும் அமைதியாக இருந்தான்.

இந்த நிகழ்ச்சி அடுத்த வாரத்தில் சனிக்கிழமை இரவு இரண்டு பெண்கள் நட்சத்திர ஒட்டல் அறையில் கற்பழிக்கப்பட்டதாக செய்தி சுந்தரத்திற்கு செய்தி வருகிறது. ஒருத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மற்றொருத்தி கற்பழிக்கும் போது இறந்துவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வேறு யாரில்லை... சென்ற வாரம் காவல் நிலையத்தில் இருந்த வட இந்திய பெண் ஸ்வேதா. கற்பழிக்கும் போது இறந்த பெண் ... விமலா. அவர்களை கற்பழித்தவர்கள் சுரேஷ் மற்றும் அவனுடைய நான்கு நண்பர்களும்.

விமலா மரணச் செய்தி கேட்டவுடன் அவள் தந்தை மயங்கி விழுந்துவிட்டார். விமலாவின் உடலை வாங்க அவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். விமலாவின் உடலை வாங்க வந்த உறவினர் ஒருவர் போலீஸ் காகிதங்களில் கையேழுத்துயிட்டு வாங்கினார். அந்த உறவினர்..

"எல்லா நடந்தது அப்புறம் தான் போலீஸ் என்போதும் வரும்.... இவங்க நினைச்சா இந்த மாதிரி நடக்கிறத தடுக்க முடியும்.... எப்போ யார் கிட்ட லஞ்சம் வாங்கலாம் தான் இவங்க இருக்காங்க.." என்று மற்றவனிடம் புலம்பிக் கொண்டு இருந்தான். எல்லா புலம்பல் வார்த்தைகளையும் காதில் வாங்கிக் கொண்டு சுந்தரம் அமைதியாக இருந்தான்.

நன்றி : தமிழோவியம்.காம்

( நான் எழுதிய 'நடைபாதை' சிறுகதை நூலில் 1வது சிறுகதை)

Wednesday, March 11, 2009

தொலைந்தவர்கள்

9.30 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும். அப்பொது தான் அவன் காலையில் சென்னையில் இருக்க முடியும். செந்தில் பெங்களூரில் உள்ள சாஃட்டுவேர் நிறுவணத்தில் வேலையில் செய்கிறான். சனி, ஞாயிறு வந்ததும் சென்னைக்கு வந்து விடுவான்.

9.25க்கு ரயில்வே ஸ்டேஷனில் அவசரமாக ஏறும் போது ஒரு உருவம் மீது இடித்துவிடுகிறான்.

"சாரி சார் !"

"ஹாய் செந்தில் .. உன்ன பார்ப்பேன் நினைக்கல "

செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

"என்ன தெரியுல"

செந்தில் சற்று யோசித்து.." ஏய் நீ சிவா தானே..எப்படி இருக்க"

"ம்ம்ம்.... நல்ல இருக்கேன்...நீ எப்படி இருக்க"

" நல்ல இருக்கேன்.. இங்க சாப்டுவேர் கம்பேனியிலே வேலை செய்றேன்.ஆமா நீ எங்க இங்க..."

"ஒரு வேலை விஷயமா.. வந்தேன்."

"சரி..டைம் ஆச்சி வா போவோம்."

இருவரும் ஒரே ரயில் பெட்டியில் பயணம் செய்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு 7 வருடம் கழித்து இருவரும் இன்று தான் சந்திக்கிறார்கள். இருவரும் பள்ளியில் படித்த உயிர் நண்பர்கள். இன்று ஒருவருக்கொருவர் எந்த திசையில் இருக்கிறோம் என்று தெரியாமல் வாழ்கிறார்கள். கணிபொறி யுகத்தில் சில சந்திப்புகள் கூட விபத்துப் போல் தான் நடக்கிறது.

"அமா.. சிவா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க.."

"நான் எம்.ஏ ஆங்கீலம் முடிச்சேன். கிராமத்துல அப்பாவுக்கு உதவியா விவசாயம் பார்த்தேன். இங்க ஒரு கம்பேனி இன்டர்வியூகாக வந்தேன், உனக்கு வேலைப் எப்படி போகுது...?"

"நல்ல போகுது..."

"ஆமா... நம்ம ஸ்கூல்ல படிச்சாலே பத்மா... இப்போ என்ன பண்றா...?"

"அவ.. மாமா பையனே கல்யாண பண்ணிக்கிட்டா... சொந்த ஊருல செட்டுலைய்டா..."

"சரி விடு.. நம்ம சந்தானம் சார் எப்படி இருக்காரு..."

"அவர பார்த்து ரொம்ப நாளாச்சு...."

இருவரும் தங்கள் பள்ளி கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பள்ளிப் பருவத்தில் பார்த்த தாவணி அழகிகள், வகுப்பெடுத்த ஆசிரியர்கள், சக நண்பர்கள் எல்லாம் கதைகளை பேசிக் கொண்டு சென்னை வரை வந்தனர். இருவரும் அவர்கள் வாழ்ந்த நாட்களை நிளைத்து பேசிக் கொண்டு இருந்தார்கள். வேறு என்ன செய்வது மீண்டும் அந்த நாட்கள் சென்று வாழ முடியவில்லை ?

நினைவலைகள் ஒடிக் கொண்டு இருக்கும் போது சென்னை என்னும் கரை வந்துவிட்டது. இருவரின் நினைவலைகளும் ஒய்ந்தது.

"சரி சிவா ! எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. கண்டிப்பா நீ வரனும்...."

"ஹாய் ! வாழ்த்துக்கள்...இவ்வளவு நேரம் சொல்லவே இல்ல..."

"நம்ம ஸ்கூல் கதையில சொல்ல மறந்திட்டேன்" என்று சொல்லி முடித்து தன் திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்தான். சிவா வாங்கிக் கொண்டு பிறகு, இருவரும் கூட்ட நெரிசலில் ஒவ்வொரு திசை சென்றனர்f.

கூட்ட நெரிசலில் செந்தில் கொடுத்த அழைப்பிழை சிவா தவரவிட்டான். சிவாவுக்கு செந்தில் திருமணம் எங்கு நடக்கிறது என்று கூட தெரியாது. இருவரில் யாரும் போன் நம்பர் கூட கேட்கவில்லை. விபத்தாய் வந்த இவர்கள் சந்திப்பு இன்னொரு சிறு விபத்தில் இவர்களின் அடுத்த சந்திப்பு தடுக்கப் பட்டது. எனோ தொலைந்த இவர்கள் நினைவுகள் இன்று சந்தித்து மீண்டும் தொலைந்தது. ஆழைப்பிதழ் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிவா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

( நான் எழுதிய 'நடைபாதை' சிறுகதை நூலில் 2வது சிறுகதை)

Thursday, September 11, 2008

"மனசாட்சி சொன்னது" - பரிசு வென்ற சிறுகதை

இந்த முறையாவது கிடைக்குமா... இது நம்முடைய மூன்றாவது முயற்சி... ஏன் இரண்டு முறை கிடைக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது....? பல சிந்தனைகளை மனதில் ஓட்டிக் கொண்டு இருந்தான் ரமேஷ். ரமேஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். மூன்று வருடங்களாக கண்ட கனவு நாளை நிறைவேறுமா என்ற அச்சம். இது அவனுக்கு மூன்றாவது முறை... என்ன நடக்க போகிறது....?

ரமேஷின் பிராஜெக்ட் மேனேஜர் ராமன் அங்கு வருகிறான்.

"ஹெலோ ரமேஷ்.... என்ன ரொம்ப டென்ஷனா இருக்க..." என்றான்.

" ஆமா சார்.... ரொம்ப டென்ஷனா இருக்கு... இந்த தடவை கிடைச்சா..என் லைப்பே மாறிடும்..."

"கவலை படாத... இந்த பிராஜக்ட் சக்ஸஸ் ஆனதற்கு காரணம் நீ தான்.... கண்டிப்பா கிடைக்கும்... டோட் வொரி..."

யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்... ஆனால், நடந்து காட்டுவது வேறு... இரண்டு தடவை விசா கிடைக்கவில்லை... இது எனக்கு மூன்றாவது தடவை. கிடைத்தால், இரண்டு வருஷம் நல்ல சம்பளம்....இனி வாழ்க்கையில் வேலை கூட செய்ய வேண்டியதில்லை.... ஆனால், விசா கிடைத்த பிறகே எல்லாம் சாத்தியம்.

2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எந்த காரணத்திற்காக விசா மறுக்கப்படுகிறது என்ற காரணம் கூட தெரிவதில்லை.நாம் கொடுக்கும் தகவல்களில் ஒரு சிறு தவறு இருந்தால் கூட விசா கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.

மறுநாள்....
அமெரிக்கா தூதரகத்தில் ரமேஷ் காத்துக்கொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் கழிந்தது, ஒவ்வொரு முறையும் இப்படி தான் பல மணி நேரம் பலருக்கு செலவாகிறது. விசா மறுக்கப்பட்டால் பல மணி நேரம் காத்து கிடந்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது.

"ரமேஷ்...." - என்று ஒரு வெள்ளைக்காரன் குரல் அழைப்பு.

ரமேஷ் உள்ளே செல்கிறான். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வெளியே வரவில்லை.
"சோ... மிஸ்டர் ரமேஷ்... யூவர் எச்1பி விசா இஸ் கிரன்டட் ...."

"தாங்க் யூ சார்...."

"ஒ.கே.... ஆல் தி பெஸ்ட்...."

ரமேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.... பல நாள் கனவு இன்றே நிஜமானது... இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் போதும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.
தனக்கு விசா கிடைத்துவிட்டதை தன் நிறுவனத்திற்கு போன் செய்து சொல்கிறான். தன் நண்பர்களுக்கு விருந்துகள் எல்லாம் கொடுத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.

அவன் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அமெரிக்காவுக்கு புறப்பட நல்ல துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். 2007ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்றே இருந்தான். அந்த நேரத்திலா அவன் தொலைக்காட்சியில் அதை பார்க்க வேண்டும்.. அதை பார்த்ததும் மிகவும் மனம் வேதனையுடன் அன்று இரவு பொழுது அவனுக்கு கழிந்தது.
மறு நாள் தன் அலுவலகதில் தன் மேனேஜர் ராமனை பார்க்கிறான்.

"சார்... நான்... அமெரிக்காவுக்கு போகல... நான் இங்கேயே இருந்து வேலை செய்றேனே.."

"என்ன... ரமேஷ்... என்ன ஆச்சு உங்களுக்கு... விசாக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க... இப்போ ஏன் இந்த தீடிர் முடிவு? "

"இல்ல...என க்கு அமெரிக்கா போக மனசு இல்ல... நான் இந்தியாவிலே இருந்து வேலை செய்யனும்னு ஆசை படுறேன்..."

சிரித்துக்கொண்டே ராமன் " அமெரிக்கா போயி வேலை செய்தா தேச திரோகம்னு யாராவது அட்வைஸ் பண்ணாங்கள...? அப்படி யாராவது சொன்னா நம்பாதிங்க... அமெரிக்கா போயி வேலை செய்தா இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் தான்.... யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க..."

"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்"

" அப்படியா....சரி..! என்ன காரணம்... எனி பர்சனல் ரீசன்.."

" சொந்த காரணம் இல்லை... உலக காரணம்... அதான் போகலை...."

"புரியல..."

" நேத்து டி.வியில சதாம் ஹுசைனை தூக்குல போடுறத பார்த்தீங்களா...."

"பார்த்தேன்... ஆனா அதுக்கும் நீங்க சொல்ல வந்ததுக்கும் என்ன சம்மந்தம் இப்போ.."

" நம்மல மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க சம்பாதிச்சு... இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் வாங்கி தரோம்... ஆன அமெரிக்கா அந்த பணத்தை நல்ல வழியில செலவு செய்யல... மத்த நாடு கிட்ட சண்ட போடுரதுல தான் செலவு பண்றாங்க.."

"அதுனால நமக்கு என்ன ?... நம்ம இந்தியா மட்டும் என்ன... நல்ல விஷயத்துக்கா பணம் செலவு பண்றாங்க.... எத்தனையோ அரசியல்வாதி நம்ப வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க.."

" நம்ம இந்தியாவால எந்த நாடும் கஷ்டப்பட்டது இல்ல.... ஒரு பிலைட் ஹைஜாக் பண்ணி தீவிரவாதிகளை விட சொன்னா கூட... எந்த உயிரும் சாகக் கூடாதுனு நாம தீவிரவாதியை விடுதலை பண்ணியிருக்கோம்.... ஆனா ஒரு பிரதமர கொன்னு.. ஈராக்ல கலவரத்த உண்டு பண்ணிட்டாங்க அமெரிக்கா.."

"ரமேஷ்... எனக்கும் விஷயம் தெரியும்... ஆனா உலக அரசியல் பேசி இவ்வளவு வருஷம் காத்திருந்து வாங்கின விசாவ தூக்கி எறியப் போறிங்களா"

"கண்டிப்பா நான் தூக்கி ஏறியதான் போறேன்.... அமெரிக்கா பண்ணுற காரியத்திற்கு மறைமுகமா நாம சம்மந்தம் படுறோம்... க்யூபா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், இப்போ ஈராக் இன்னும் எவ்வளவு நாட்டை அழிக்க போறாங்கனு தெரியலை.... ஆனா இவங்க பண்ணுரதுக்கு தைரியம் கொடுக்குறது நாம சம்பாதிச்சு கொடுக்கும் பணம் தான்...."

" அப்போ.. உங்க முடிவுல இருந்து மாறப் போறதில்லையா..."

" கண்டிப்பா மாற மாட்டேன்... நீங்க என்னை வர்புறுத்தி அமெரிக்கா போக சொன்னா வேலையை விட்டு தான் மாறுவேன்..."

ராமன் என்ன பேசுவது என்று தெரியவில்லை... ஆனால், இறுதியாக ராமன் "நான் வேற யாராவது இந்த பிராஜக்ட்காக அனுப்பிடுவேன்... உங்களுக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடுறீங்க... அது தான் என்னால சொல்ல முடியும்"

"சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பரவாயில்லை... ஆனா, மத்தவங்க சாகுறதுக்கு நாம மறைமுகமாக காரணம் நினைக்கும் குற்ற உணர்ச்சியை விட பரவாயில்லைனு தோன்னுது..."

சரி..உங்க இஷ்டம்..." என்று சொல்லி ராமன் தன் குழுவில் இருக்கும் வேறொருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா செல்ல விசா வேலைகளை தொடங்க சொல்கிறான்.

ரமேஷ் செய்தது முட்டாள் தனமாக தெரிந்தாலும்..அதில் இருக்கும் உண்மை ராமனின் மனிதநேயம், அந்த குழுவில் வேலை செய்யும் எல்லோருக்கும் புரிந்தது. புரிந்தும் இந்த சுயநல உலகில் சுயநலமான முடிவைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. அந்த குழுவில் ஒருவன் அமெரிக்கா செல்கிறான்.

( "நம் உரத்தசிந்தனை" சிற்றிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ரூ.250 பரிசுவென்றது. என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது.

என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது. "நடைபாதை" நூல் வெளியீட்டு விழா செப்.14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு.....
http://tamilbookreview.blogspot.com/2008/09/14.html பார்க்கவும்)

Monday, April 21, 2008

வடிவேல் கம்ப்யூட்டரின் கதை

( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின் புலம்பலே இந்த கதை.)

" நம்மல இப்படி அஸ்ஸம்பில் பண்ணுறத பார்த்தா... யாரோ புது டெவலபர் வாறான் போலிருக்கு..... இவனாவது நல்ல கோடிங் அடிக்கிறானா பார்ப்போம்...."

அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த டெவலபரை அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிமுகங்கள் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் முன் அமர்கிறான்.

"வந்துடாய்யா.... வந்துடான்... இவ்வளவு நாள நம்பல ஜாலியா விட்டாங்க... இப்போ ஒரு டெவலபர போட்டு நம்மல வேல செய்ய வைக்கிறாங்க போலிருக்கு... இவன பார்த்தா அஞ்சு வருஷமாவது எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்... முதல்ல என்ன செய்ய போறானு பார்ப்போம்"

புது டெவலபர் தன் மெயில் பாக்சை திறந்தான்.

"அடபாவி நீயுமாட... இதுக்கு முன்னாடி இருந்தவன் தான் மத்தவங்களுக்கு பார்வட் மெயில் அனுப்புசிக்கிட்டு இருந்தான்... இவனும் மெயில் பாக்சை திறக்குறான்... சரி முதல் நாள்ல வேல இருக்காது போலிருக்கு... என்ன தான் மெயில் அடிக்கிறான்னு பார்ப்போம்..

டியர் செல்லம்,

இன்னைக்கு ஆபிச்ல ஜாயின் பண்ணிட்டேன். இது தான் என் அபிசியல் மெயில் ஐ.டி. : ABC@COMPANY.com

ஐ லவ் யூ செல்லம்..

வித் லவ்,
ABC

"இவரு தமிழ இங்கிலீஷ்ல தான் டைப் பண்ணுவாரு போலிருக்கு... தமிழ் பான்ட் நெட்டுல டௌன் லோட் பண்ணி தமிழ டைப் பண்ணு... இல்ல இங்கிலீஷ்ல டைப் பண்ணு... ஏன்ட ரெண்டும் சேர்த்து என்ன கொழப்புறீங்க.... பாரு ரெட் லைன் போட்டு ஸ்பெல்ச்செக் மிஸ்டேக்னு (Spell check) காட்ட வேண்டியதா இருக்கு...."

அந்த மெயிலில் சப்ஜெக்ட் (Subject) போட்டு பி.சி.சியில் ஐந்து பெண்களின் மெயில் ஐ.டி. போட்டு அனுப்பினான்.

"கொய்யால... ஒரே நேரத்தில அஞ்சு பொண்ணுங்ககிட்ட ஐ லவ் யூ சொல்லுறானே... அஞ்சு வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும் பார்த்தா... அஞ்சு பொண்ணுங்கல மடக்குன எக்ஸ்பிரியன்ஸ் இருக்குறவன இருக்கானே.."


"என்னடா எதோ ரிப்லை மெயில் வர மாதிரி இருக்கு.... அ ஆ... அஞ்சு பொண்ணுங்களும் ரிப்லை அடிச்சிருக்காங்க... எப்போ இவன் மெயில் அடிப்பான்... எப்பொ ரிப்லை அனுப்பனும் இருந்திருக்காங்கையா..."

ரிப்லை மெயிலில்

ஐ லவ் யூ ட செல்லம்
ஆல் தி பெஸ்ட் செல்லம்
பெஸ்ட் ஆப் லக் செல்லம்

" அடப்பாவிகளா..... அந்த பொண்ணுங்களும் செல்லம் போட்டு அனுப்பிச்சிருக்காங்க்டா.... அவ எத்தனை பேருக்கு பி.சி.சி(BCC) போட்டு அனுப்புச்சிருக்காளோ யாருக்கு தெரியும்"

"சரி விடு... மெயில் பாக்ஸ் க்ளோஸ் பண்ணிட்டான்... இனிமே வேல பார்ப்பானு நினைக்கிறேன்"

"இன்டர்நெட் எக்ஸ்போலர் ஓபன் பண்ணி ஏதோ வெப் சைட் அடிக்கிற மாதிரி தெரியுது..."

"அட நாதாரிபயலே.... யாஹூ மெசேஜர் டௌன்லோட் பண்ணுறான்யா... ஆபிஸ் விட்டு போற வரைக்கும் யாஹூ மெசேஜர்ல கடலைய போடுவானே..."

"டேய்... நாலு வின்டோ ஓபன் பண்ணி கடலைய போடுரான்னே... யாரும்மே இவன கேட்க மாட்டிங்களா... ஒரு மெசேஜ் டைப் பண்ணி... நாலு வின்டோவிலும் காபி அன்ட் பேஸ்ட் ( copy & paste ) பண்ணுறானே.... கொஞ்சமாவது வேலைய பாருங்கடா... ஐய்யோ என்னால வாய திறந்து சொல்லக்கூட முடியலியே..."

"எனக்கு மட்டும் வாய் இருந்தா உங்க ப்ராஜக்ட் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்திருப்பேன்.. நீங்க வேலையா பண்ணுறீங்க..."

அந்த டெவலபர் எழுந்து சென்று மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான்.

"எங்கடா போய்ட்டு வர... காபி மிஷின்ல காபி எடுத்திட்டு வருயாடா... ஓசி காபினா ஒரு நாளைக்கு நாலு வாட்டி குடிப்பிங்களே...

காபிக்கு, லன்சுக்கு, ரெஸ்ட்ரூமுக்கு தவிர வேற எதுக்கும் எழுந்திருக்க மாட்டான் போலிருக்கு.."

மீண்டும் எழுந்து பக்கத்து க்யூப் (cube) யில் தலையை விட்டு பேசிக்கொண்டு இருந்தான்.

"டேய் கடவுளுக்கே அடுக்காதுடா... பக்கத்து க்யூபில இருக்குறவ வேற ப்ராஜக்ட்டுட...உன் ப்ராஜக்ட பத்தி அவளுக்கு எப்படி தெரியும்... சந்தேகம் கேக்குற சாக்குல கடலைய போடுறானே... டாய்.. உன் ப்ராஜக்ட் டீம்ல இருக்குறவங்க கிட்ட சந்தேகம் கேளுடா...."
" நல்ல வேளை... உன் டீம்ல பொண்ணுங்க இல்ல.... வேலை சமயத்துலக் கூட கடலை போட்டிருப்பான்..."

மாலை 6 மணியானதும்.. அவன் செல்போனில் அலாரம் ஒலித்தது.

"எதுக்குடா... அலாரம் வச்சிருக்க.. ஆறு மணிக்கு மேல தான் வேல செய்வியா?..."

"அடப்பாவி... என்ன CTTL+ALT+DEL போட்டு எங்கட போறே..."

"ஆ...வீட்டுக்கு போய்டான்யா.. என்ன ஷட் டௌன் (shut down) பண்ணிட்டு போக கூடாதா... அது என்ன லாக் பண்ணிட்டு போறது... கரன்ட் பில் உங்க அப்பன் வந்து கட்டுவானா... கரன்ட ஏன்டா வேஸ்ட் பண்ணுறீங்க..."

" இவங்க மட்டும் ராத்திரியானா நல்லா தூங்குறாங்க... என்ன லாக் பண்ணி ராத்திரி தூங்க விடாம வேலை செய்ய வைக்கறாங்க... எத்தன வைரஸ் வந்து என்ன அட்டாக் (attack) பண்ணப்போதோ தெரியலையே..."

"அட... இது வேற.. எனக்கு சைடுல வந்து தொல்ல கொடுக்குது... இந்த வைரஸ் பேரு கூட எனக்கு தெரியுல... உன் பேரு என்ன...?"

"என் பேரு தெரிஞ்சு என்ன பண்ண போற.. ஸ்கேன் பண்ணப்போறியா..."

"அது இல்லப்பா.... சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்"

"உன் நெட்வோர்க் ஆளுவந்து கண்டு பிடிப்பான்... அப்ப தெரிஞ்சுக்கோ..."

"இந்த வைரஸ்...யாருக்கோ சிக்னல் கொடுக்குற மாதிரி தெரியுது..."

" மச்சி... நான் பி2 வைரஸ் பேசுறேன்... இங்க அன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர் இருக்கு.. நீ ப்ரியா இருந்தா அவன ஆட்டாக் பண்ணிட்டு போ..."

" க்யூல... வந்து அட்டாக் பண்ணுறாங்களே... ஒன்னு, இரண்டு, மூன்னு..."

" என்ன எவ்வளவு வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் அடிவாங்குற மாதிரி அப்படியே எண்ணிக்கிட்டு இருக்குற..."

"போறவன் வந்தவன் எல்லாம் வைரஸ் ப்ரொகிராமுல ரூம் போட்டு அட்டாக் பண்ணுறீங்க... ஒரு கணக்கு வச்சிக்க வேண்டாமா..."

"எத்தனை வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் தாங்குதே... ரொம்ப நல்ல கம்ப்யூட்டர்டா.." என்று ஒரு வைரஸ் சொன்னது.

அடுத்த நாள் காலையில்....

கடவுச்சொல் ( Password) அடித்து புது டெவலபர் தன் வேலையை தொடங்குகிறான்.

"வந்துட்டான்யா... வந்துட்டான்... அது என்னடா பாஸ்வாட் செல்லம் வச்சிருக்க.... மனசுல பிரகாஷ் ராஜ் நினைப்பு... எனக்கு மட்டும் கை கால் இருந்துச்சு உன்ன கில்லி மாதிரி அடிச்சிருப்பேன்..."

"மறு படியும் மெயில் பாக்ஸ் ஓபன் பண்ணுறானே... யாருய்யா இவனோட ப்ராஜக்ட் மேனேஜர் இவன கேள்வியே கேட்க மாட்டீங்களா..."

"ஒருத்தன் வந்து அவன் கிட்ட பேசுறான்.. என்ன தான் பேசுறானு கேட்போம்..."

இந்த இருவரும் பேசி முடிந்ததும் கணினி தன் புலம்பலை தொடர்ந்தது.

"அடபாவி... நீ தான் ப்ராஜக்ட் மேனேஜரா... அது தான் உன் கிட்ட வந்து ஸ்டேடஸ் ரிப்போட் சொல்லுறாங்களா... ஐய்யோ.. இவன் எக்ஸல் ஷீட் தவிர எதையும் ஓபன் பண்ணி வேல செய்ய மாட்டானே... தினமும் இப்படி தான் வேலை செய்யாம கடலை போடுறத நான் பார்க்கணுமே... அந்த கடவுள் தான் என்ன காப்பாத்தணும்..."

"என்னால முடியாது... நான் ஹாங் ஆக போரேன்... யாரு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க..."

அந்த ப்ராஜக்ட் மேனேஜர் கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்கிறான்.

"அப்பா... ஒரு நிமிஷம் நமக்கு ரெஸ்ட் கொடுத்திட்டான்.... சந்தோஷம்...."

தன் புலம்பலை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டது. மீண்டும் தன் புலம்பலை தொடரும்........

LinkWithin

Related Posts with Thumbnails