வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label ஒரு நிமிட கதை. Show all posts
Showing posts with label ஒரு நிமிட கதை. Show all posts

Friday, July 27, 2012

மரியம் மிஸ்

ஏன் மரியம் மிஸ் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ? எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வு எழுதினேன். பிரசாத்துக்கு மட்டும் முழுசாக பத்து மதிப்பெண் போட்டிருக்க, எனக்கு மட்டும் 2 மதிப்பெண்.

மரியம் மிஸ் ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கிற பையன், படிக்காத பையன் என்று இரண்டாக பிரித்துவிடுவார். அப்படி அவர் மனதளவில் பிரித்துவிட்டால், வருடம் முடியும் வரை அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். அவர் பார்வையில் நான் படிக்காத பையன். படிக்கிற பையன் பேப்பரில் பார்த்து அதிக மார்க் போடுவார். என்னைப் போன்ற படிக்காத பையன் தப்பி தவறி நன்றாக எழுதினால் கூட குறைவான மார்க்கில் இருந்து கொஞ்சம் அதிகமாக போடுவார். அவ்வளவு தான்.


இந்த தேர்வுக்கு கஷ்டப்பட்டு தேர்வுக்கு வரக்கூடிய முக்கியமான கேள்கிகளை படித்து வந்தேன். என் நேரம். நான் படிக்காத கேள்விகள் வந்து தொலைத்தது. வழக்கம் போல் முன் பக்கம் அமர்ந்திருக்கும் நன்றாக படிப்பவன் பிரசாத் பேப்பரை காப்பி அடித்து எழுதினேன். அப்படி இருந்தும், மரியம் மிஸ் இருக்கும் ஒரு தலை பட்சத்தால் இந்த முறையும் பெயிலாகிவிட்டேன்.

ஐந்து மதிப்பெண் இருந்தால் போதும், பாஸ்ஸாகி விடுவேன். பேப்பரில் கையில் வைத்திருந்த போது, என் அருகில் வந்த பிரசாத் “என்ன பிரதாப் ! எவ்வளவு மார்க் ?” என்றான்.

அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் தொல்லையே இது தான். அடுத்த தேர்வு வரை அவர்கள் செய்யும் அலும்பு தாங்க முடியாது. என் பேப்பரை வாங்கி பார்த்தான்.

”என்னடா ! கரேட்டா தானே எழுதியிருக்க... “ என்றான்.உன்ன பார்த்து தானே எழுதினேன். கரேட்டா இல்லமா எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“மரியம் மிஸ் கிட்ட பேசி நான் மார்க் வாங்கி தரேன் வா !” என்று அவனாகவே மிஸ்ஸிடம் அழைத்து சென்றான். எதோ பாஸ்ஸானால் சரி தான்.

“மிஸ் ! பிரதாப் கரேட்டா தான் எழுதியிருக்கான். கம்மியா மார்க் போட்டிருக்கீங்க !!” என்று என் பேப்பரை கொடுத்தான்.

இதுவே நான் கொடுத்திருந்தால் என் பேப்பரை வாங்கிக் கூட பார்க்க மாட்டார்கள். படிக்கும் பையன் பேப்பர் கொடுத்தாலே மிஸ்ஸிடம் தனி மரியாதை தான். இரண்டு மூன்று பேப்பரை நன்கு ஏற இறக்க பார்த்தார். தான் ஏன் சரியான பதிலுக்கு குறைந்த மதிப்பெண் போட்டிருக்கிறோம் என்ற சந்தேகம் மிஸ்ஸுக்கு வந்ததிருக்கும்.

பிரசாத் இடது கையில் இருக்கும் அவனது பேப்பரை வாங்கி என் பேப்பரோடு ஒப்பிட்டு பார்த்தார்.

“ஏன்டா ! பிரசாத் பேப்பர பார்த்து காப்பி அடிச்சதும் இல்லமா. மார்க் கேக்க அவனை கூட்டிட்டு வர...”

படிக்கிற பையனுகளிடம் பிரச்சனையே இது தான். நமக்கு நல்லது செய்றேன் சொல்லி வம்பில் மாட்டிவிடுவார்கள்.

“ உன்ன அப்படியே விட்டுருலாம் பார்த்தேன். நட பிரின்ஸ்பல் ரூமுக்கு...”

Wednesday, March 21, 2012

ஊழல்

அன்-ரிசர்வ் பெட்டியில் இடம் பிடிக்க வரிசையாக அவரவர் கையில் பெட்டியுடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள். இடம் பிடிப்பது முடியாத காரியம் கூட்டத்தை பார்த்தவுடன் புரிந்துக் கொண்டேன். நிற்க இடம் கிடைத்தால் நல்லது என்று தோன்றியது.

என் முன் நிற்பவர் ஒரு நாளிதழ் படித்துக் கொண்டு இருந்தார். ரயில் வரும் வரை படிக்கலாம் என்று அவரிடம் பேப்பர் கேட்டேன். தான் படிப்பதை என்னிடம் கொடுத்து, வாரப் புத்தகத்தை படிக்க எடுத்தார்.

“பெருசா நியூஸ் இல்ல சார். எல்லா பக்கமும் லஞ்சம், ஊழல் தான். இத காசு கொடுத்து வாங்கி படிக்கனும்னு தலையில எழுதியிருக்கு...”

” அப்போ எதுக்கு பேப்பர் வாங்குனீங்க...?”

”நாமல எப்படி ஏமாத்துனாங்கனு தெரிஞ்சிக்க வேண்டாம் !!!”



அவரை பார்த்தால் எந்த கட்சியும் சேர்ந்தவில்லை என்று தோன்றியது. சராசரி பிரஜையின் கோபம் தான் அவரிடமும் இருந்தது. வெள்ளை வேட்டி, கட்டம் போட்ட சட்டை. பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல் தெரிந்தார். ரயிலில் வந்ததும் அடித்து பிடித்து ஏறினேன். கூட்டத்தில் அந்த மனிதர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

விழுப்புரம் வந்ததும் தன் குடும்பத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அந்த மனிதரை அழைத்து வாங்கின பேப்பரை கொடுத்து டீ குடிக்க அழைத்தேன்.

"உக்கார இடம் கிடச்சுதா ?"

"மேல ஏறினதும் எட்டு பேருக்கு இடத்த போட்டுடேன்." என்று பெருமையாக சொன்னார்.

"அவ்வளவு இடம் புடிச்சிங்களே ! யாரும் சண்டைக்கு வரலையா ?"

"இரண்டு மூனு பேரு கத்துனாங்க.. நான் காதுல வாங்கிக்கல " என்றார்.

“சாதான ஆள் நீங்க... உங்க குடும்பத்துக்கு இத்தன இடத்த புடிக்கும் போது. பதவியில இருக்குறவன் செஞ்ச மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருது ? " என்றேன். சிரித்துக் கொண்டு அவர் எந்த பதிலும் சொல்ல வில்லை. இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வார் என்றே தோன்றியது.

Thursday, January 19, 2012

வீர விளையாட்டு !

தற்கொலையை கோழைத்தனம் என்று சொல்பவர்கள் கூட மரணத்தோடு விளையாடுவதை வீர விளையாட்டு என்கிறார்கள். இந்த விளையாட்டில் உயிரை ஏன் துச்சமாக கருதுகிறார்களோ தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு விளையாட்டு விளையாடி விட வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி மார் தட்டுபவர்கள் யாரும் களத்தில் குதிப்பதில்லை. பெண்களை கவர நினைப்பவர்களும், பரிசு தொகைக்கும் தான் களத்திற்கு வருகிறார்கள். சில சமயம் ஆணுக்குறிய அடையாளத்தையும் இழக்கிறார்கள்.

கல கலவென்று இருந்த என்னையும் இந்த வருட களத்தில் குதிக்க வைத்துவிட்டனர். எனக்கு இந்த விளையாட்டில் விருப்பமே இல்லை. ஆனால் என்ன செய்வது ? ஒவ்வொரு வருடத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவன் கலந்துக் கொள்ள வேண்டுமாம். இந்த வருடம், என் குடும்பத்துக்காக நான் களம் இறங்கியிருக்கிறேன்.



என் சித்தப்பா இந்த விளையாட்டில் இறந்ததாக அம்மா ஒரு முறை கூறியிருக்கிறார். அவரை சின்ன வயதில் பார்த்த ஞாபகம். களத்தில் வந்தவுடன் அவர் என் கண் முன் தெரிவது போல் இருந்தது. வீர விளையாட்டில் மரண பயத்தோடு களத்தில் இருந்தேன்.

'ஜல்லிகட்டு நடத்த கூடாது சொன்னாங்க... விடுவாங்களா நம்ப ஆளுங்க… நடத்தி காட்டிடோம்ள..' என்று விளையாட்டை நடத்துபவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் பெருமையில் என் உயிர் உஞ்சலாடிக் கொண்டு இருந்தது. எனக்கு சங்குதுவது போல் ஆட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு இளைஞர்களும் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். நான் ஓடியதில் ஒருவன் மேல் ஏறி ஓடினேன். மிதிக்க கூடாத இடத்தில் மிதித்து விட்டேன். ' அவன் நிலைமை என்னவோ' என்ற கவலையுடன் நான்கு கால்களில் நிற்காமல் ஓடினேன்.

**

இந்த மாதம் 'பொதிகை மின்னல்' (ஜனவரி 2012) மாத இதழுக்காக நான் எழுதிய ஒரு பக்க கதை.

Saturday, October 3, 2009

வாடிய மல்லி !

"பிச்ச வாங்கி தான் வாழனும்னு மனசுல பச்ச குத்தியிருக்காங்க போலிருக்கு..." என்று மனதில் நினைத்துக் கொண்டான் கோகுல்.

மதுரை செல்லும் வரை ட்ரெயினில் போழுது போகவில்லை என்று ஒரு பழைய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டு இருந்தான். ஒருவன் அமர்ந்த படி இறுக்கையில் இருந்தவர்களின் கால் கீழ் இருக்கும் குப்பையை சுத்தம் செய்து பிச்சைக் கேட்டு வந்தான். ஸ்வரஸ்யமாக படித்துக் கொண்டு இருக்கும் போது அந்த பிச்சைக்காரன் கோகுலின் காலை தொட்டு பிச்சை கேட்டான்.

" ஏப்பா உக்காந்த இடத்துல ஷூ பாலீஷ் போடலாம், பேப்பர் கடை வைக்கலாம். எதுக்கு பிச்ச எடுக்குற " என்று சொல்ல கோகுல் வாய் எடுத்தான். வார்த்தைகள் தொண்டை வரை நின்றது. " காசு இருந்தா போடு. வெட்டி பேச்சு பேசாத ! " என்று அந்த பிச்சைக்காரன் சொல்லிவிட்டால், மதுரை வரும் வரை மற்ற பயணிகள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். எதுக்கு வம்பு என்று காசு கொடுக்காமல் அமைதியாக மீண்டும் புத்தகம் படித்தான்.

ஆர்வமாக படித்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் பிச்சை கேட்கும் குரல். கவனிக்காமல் இருந்தான். இரண்டு கை தட்டல் சத்தம் கேட்டது. பிச்சை கேட்பவனை அடித்து துரத்த வேண்டும் என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தான். ஒரு திருநங்கை பிச்சை கேட்டு நின்றது.... மன்னிக்கவும் நின்றார்.



கோகுல் மனதில் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

" மகராசனா இருக்கனும்..!" என்று வாழ்த்தி விட்டு அந்த திருநங்கை சென்றார். அவனுடன் பயணம் செய்தவர்கள் யாரும் அந்த திருநங்கைக்கு காசு போடவில்லை. ஊனமுற்றவனுக்கு காசு போடாதவன், திருநங்கைக்கு பணம் கொடுத்த கோகுலை பலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

அவன் அதை பற்றி கவலைப்படாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை படித்தான்.

" பிஷ்மர் மரணத்திற்குக் காரணமான சிகண்டி ஒரு அலி, அர்ஜூனன் அலியின் உருவத்தோடு இருக்கும் போது தான் கௌரவப்படைகள் தன்னந்தியாய் தோற்கடித்தான். கடவுள் ஆண் வடிவாகவோ அல்லது பெண் வடிவாகவோ பாராபட்சமாய் இருக்க முடியாது. அலி வடிவத்தில் தான் இருக்க வேண்டும்"

மதுரை வரும் போது, சு. சமுத்திரம் எழுதிய 'வாடா மல்லி' புத்தகத்தை படித்து முடித்தான்.

--
குட்டி கவிதை

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்' என்று அழைப்போம் !!

Friday, September 25, 2009

வீர விளையாட்டு

தற்கொலையை கோழைத்தனம் என்று சொல்பவர்கள் கூட மரணத்தோடு விளையாடுவதை வீர விளையாட்டு என்கிறார்கள். இந்த விளையாட்டில் உயிரை ஏன் துச்சமாக கருதுகிறார்களோ தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு விளையாட்டு விளையாடி விட வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி மார் தட்டுபவர்கள் யாரும் களத்தில் குதிப்பதில்லை. பெண்களை கவர நினைப்பவர்களும், பரிசு தொகைக்கும் தான் களத்திற்கு வருகிறார்கள். சில சமயம் ஆணுக்குறிய அடையாளத்தையும் இழக்கிறார்கள்.

கல கலவென்று இருந்த என்னையும் இந்த வருட களத்தில் குதிக்க வைத்துவிட்டனர். எனக்கு இந்த விளையாட்டில் விருப்பமே இல்லை. ஆனால் என்ன செய்வது ? ஒவ்வொரு வருடத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவன் கலந்துக் கொள்ள வேண்டுமாம். இந்த வருடம், என் குடும்பத்துக்காக நான் களம் இறங்கியிருக்கிறேன்.



என் சித்தப்பா இந்த விளையாட்டில் இறந்ததாக அம்மா ஒரு முறை கூறியிருக்கிறார். அவரை சின்ன வயதில் பார்த்த ஞாபகம். களத்தில் வந்தவுடன் அவர் என் கண் முன் தெரிவது போல் இருந்தது. வீர விளையாட்டில் மரண பயத்தோடு களத்தில் இருந்தேன்.

'ஜல்லிகட்டு நடத்த கூடாது சொன்னாங்க... விடுவாங்களா நம்ப ஆளுங்க… நடத்தி காட்டிடோம்ள..' என்று விளையாட்டை நடத்துபவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் பெருமையில் என் உயிர் உஞ்சலாடிக் கொண்டு இருந்தது. எனக்கு சங்குதுவது போல் ஆட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு இளைஞர்களும் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். நான் ஓடியதில் ஒருவன் மேல் ஏறி ஓடினேன். மிதிக்க கூடாத இடத்தில் மிதித்து விட்டேன். ' அவன் நிலைமை என்னவோ' என்ற கவலையுடன் நான்கு கால்களில் நிற்காமல் ஓடினேன்.

Wednesday, February 11, 2009

'கமலா' - வெற்றி பெற்ற போஸ்ட் கார்ட் சிறுகதை

பதிவர் நண்பர்களுக்கு வணக்கம்,

நம் உரத்தசிந்தனை இலக்கிய மாத இதழ் நடத்திய 'போஸ்ட் கார்ட்' சிறுகதை போட்டியில் நான் எழுதிய 'கமலா' சிறுகதை வெற்றி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம் 'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதைக்கு நம் உரத்தசிந்தனை சிறந்த கதை என்று தேர்வு செய்துள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்

----

கமலா

சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.

"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.

"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.

சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.

" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.

Sunday, January 18, 2009

கமலா , புத்தகம் : இரண்டு அரை நிமிட கதைகள் !

கமலா

சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.

"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.

"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.

சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.

" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.

நன்றி : அதிகாலை.காம்

*************

புத்தகம்

பரபரப்பாக புத்தகக் கண்காட்சியில் இறுதி நாள் நடந்துக் கொண்டு இருந்தது. புத்தக கடைகளின் பெயரை பார்த்து நடந்ததில் பலர் என்னை இடித்து சென்றாதை கூட தெரியாமல் இருந்தேன். பாரதியார், புதுமைபித்தன், கல்கி என்று பெரிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கினேன். அப்போது ஒரு புத்தக கடையில் ஆர்வமாக நுழைந்தேன். இந்த கடையில் இருக்கும் புத்தகங்களை பார்ப்பதற்காகவே தினமும் ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். அந்த கடையின் உரிமையாளர் என்னை பார்த்து சிரித்து விட்டு, அவர் கடையில் இருந்த பத்து பிரதிகள் கொண்ட புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாடிய புத்தகத்துடன் அந்த புத்தகங்களை வாங்கினேன்.

உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களோடு விற்க படாத நான் எழுதிய புத்தகளையும் கையில் சுமந்தப்படி புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தேன்.

*****

ஒரு நிமிட கதைகளுக்கு போட்டியாக அரை நிமிட கதைகள் எழுதியிருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே... திட்ட நினைப்பவர்கள் தனியாக மின்னஞ்சல் அனுப்புங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails