வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 15, 2014

லூசியா (எனக்குள் ஒருவன்)

முதன் முதலாக நான் முழுமையாகவும், மிகவும் ரசித்து பார்த்த கன்னடப்படம்.

இதற்கு முன் கிரவுட் பண்ட்டில் பல படங்கள் வந்திருந்தாலும், பெரியளவில் வெற்றிப் பெற்ற படம் என்றால் ”லூசியா” தான்.

கனவுக்கும், நிஜத்திற்கும் இடையே மாட்டிதவக்கும் சராசரி மனிதனின் கதை தான். நிஜத்தில் சந்தித்த மனிதர்கள் தான் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் எப்படியெல்லாம் அவர்கள் தன்னுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தானோ, கனவில் அப்படி நடந்துக் கொள்கிறார்கள்.



ஒரு கட்டத்தில் கனவு நிஜத்தை வெல்லும் போது, இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கனவிலே வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான் நாயகன். அதில் இருந்து மீண்டு வந்தானா இல்லையா என்பது தான் கதை.

இரண்டு கதையிலும் நாயகன் ஒருவன் என்றாலும், இரண்டு பேரின் வாழ்க்கையும் நேர் எதிர்.

எல்லோருக்கும் வாழ விரும்பிய வாழ்க்கை ஒன்று இருக்கும். அதில் வாழ்ந்து பார்க்க வேண்டும் ஆசை இருக்கும். ஆனால், இயல்பு வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பிடித்தது போல் மாற்றி அமைத்துக் கொள்ளத் எல்லோராலும் முடிவதில்லை.

நம்முடைய சராசரி வாழ்க்கை அடுத்தவனுக்கு மிகப் பெரியதாக இருக்கும். அந்த சராசரி வாழ்க்கையை நமக்கு கீழ் இருப்பவன் மட்டுமல்ல, நமக்கு மேல் வசதியாக இருப்பவனும் விரும்புகிறான் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

தமிழில் சித்தார்த் இரண்டு பாத்திரத்தில் நடிக்க தன்னை அதிகம் மாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது புகைப்படத்தில் தெரிகிறது. இயக்குனர் அத்தோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கொஞ்சம் மாற்றினாலும் குழம்பிவிடக் கூடிய திரைக்கதை அது. மிக நேர்த்தியாக கன்னடத்தில் கையாண்டு இருப்பார்கள். தமிழில் அப்படியே இருந்தால் போதும். கன்னடப் படத்தில் இருக்கும் திரைக்கதை தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து அதி புத்திசாலித்தனத்தை காட்டக் கூடாது. (நாம சொன்னா கேக்கவா போறாங்க).

கன்னடத்தில் அதிகம் என்னை கவர்ந்ததால் “எனக்குள் ஒருவன்” படத்தை தமிழில் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails