வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 19, 2014

Netaji Subhas Chandra Bose : The forgotten hero

சமிபத்தில் ' Netaji Subhas Chandra Bose: The Forgetten Hero' என்ற ஹிந்தி படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம். போஸாக சச்சின் கெடேகர் (தமிழில் தெய்வ திருமகள், மாற்றான் படத்தில் நடித்தவர்.) 200% நேதாஜியாக பொருந்தியிருக்கிறார்.

வரலாற்று படம் என்பதால் வழக்கம் போல் வணிக ரீதியாக தோல்வி படம் தான். ஆனால், இந்த படத்தில் நிறைய வரலாற்று கேள்விகள் எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.

போஸ் ஆரம்பக்காலத்தில் படம் தொடங்கவில்லை. நேதாஜி இளமை பருவம் அவரின் சுதந்திர போராட்டத்தின் வேட்கையை காட்டவில்லை. குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியதையாவது சொல்லியிருக்கலாம். இரண்டும் இல்லாமல், காந்தியுடன் விவாதம் நடத்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அதாவது 1940ல் இருந்து ஆகஸ்ட், 1945ல் விமானம் ஏறியது வரை படம் செல்கிறது.



நேதாஜியின் வாழ்க்கையை இளமைப் பருவத்தில் காட்டியிருந்தால் காந்தி காங்கிரஸ் தனது சொந்த ஸ்தாபனமாக நடத்தியதை வெளியே தெரிந்திருக்கும். இன்னும் எத்தனைக் காலம் காந்தியின் உண்மை முகத்தை திரையில் காட்டாமல் இருக்க போகிறோமோ தெரியவில்லை.

1934ல் வெனினாவில் சந்தித்த எமிலியை தனது உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். பிறகு 1937ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், படத்தில் நேதாஜி ஜெர்மனியில் அடைக்களமாக இருக்கும் போது (1941 பிறகு) திருமணம் செய்து கொண்டது போல் காட்டுகிறார்கள்.

ஒரு வருடம் ஜெர்மனியில் தங்கிய பிறகு நேதாஜி ஹிட்லரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தனது முதல் சந்திப்பிலே அவரது புத்தகத்தில் ’மெயின் கேம்ப்’ (எனது போராட்டம்) புத்தகத்தில் இந்தியர்களை பற்றி குறிப்பட்டது தவறு என்கிறார். "எனது போராட்டம்" ஹிட்லர் சிறையில் இருக்கும் போது எழுதியது. கிட்ட தட்ட 15 வருடங்களுக்கு முன் இருக்கும். ஹிட்லரே எழுதியதை மறந்திருப்பார். இந்திய சுதந்திரத்திற்காக இராணுவ உதவி பெற வந்த இடத்தில் நேதாஜி ஹிட்லரின் புத்தகத்தைப் பற்றி பேசியிருப்பாரா ?

ரஷ்யா மீது படை எடுத்தது தவறு என்று ஹிட்லர் முன் தைரியமாக நேதாஜி கூறுவது போல் காட்டுகிறார்கள். நேதாஜி கூறியதும் ஹிட்லர் பொறுமையாக பதிலளிக்கிறார். நேதாஜி துணிச்சல் மிக்கவர் தான். தனது நாட்டுக்காக உதவி வாங்க வந்த இடத்தில் தனது சொந்த கருத்தை ஹிட்லர் முன்பே கூறியிருப்பாரா ? என்ற சந்தேகம் எழுகிறது. தனது ஆலோசகர்கள் கூறியே ஏற்காத ஹிட்லர், நேதாஜி சொல்லியா கேட்டுவிடவா போகிறார். இதை நேதாஜி அறியாதவரா என்ன ? ஹிட்லர் பொறுமையாக பதில் அளிக்கக் கூடியவரா ?

ஹிட்லரிடம் இருந்து எந்த உதவி கிடைக்காததால், கடைசியாக ஜப்பானுக்கு செல்ல உதவி கேட்கிறார். விமானத்தில் செல்ல விரும்புவதாக போஸ் சொல்ல, ஹிட்லர் நெடுந்தூரம் விமானப் பயணம் மிகவும் ஆபத்தானத், தனது யூ போட்டில் (நீர்முழுகி கப்பல்) செல்ல சொல்கிறார். முதல் சந்திப்பிலேயே நேதாஜி மீது ஹிட்லருக்கு அப்படி என்ன அக்கரை என்று சொல்லும் அளவிற்கு தோன்றுகிறது.

படத்தின் புணைவுக்காக இப்பட்டிப்பட்ட காட்சிகள் சேர்க்கப்பட்டதா அல்லது உண்மையிலேயே நேதாஜி ஹிட்லரிடம் இப்படி தான் பேசினாரா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

நேதாஜியின் சர்ச்சைக்குரிய மரணத்தை அதிகம் தொடாமல் விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

இறுதியில் வெள்ளையர்கள் பேசும் போது, "இந்தியாவை நாம் இன்னும் அடிமையாக வைத்திருந்தால், இந்திய இராணுவம் நமக்கு உதவி செய்யுமா என்பது சந்தேகம். அந்த அளவுக்கு ஐ.என்.ஏ இந்திய இராணுவத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருகிறது" என்கிறார்.

இராணுவ உதவி கிடைக்காத நாட்டை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது என்பதால் கூட வெள்ளையர்கள் நம்மை விட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பல அரசியல் காரணமாக நேதாஜியின் வாழ்க்கையை முழுமையாக அலசவில்லை என்பதை ஏற்கலாம். சுதந்திரத்திற்காக போராடிய ஒருவரை மறந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதற்காக பாராட்டலாம். வரலாற்று பிழை இருப்பதை தான் இந்த படத்தில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails