வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 19, 2012

Paula Coelho வின் Alchemist

"இந்த நாவலை படிங்க... நீங்க உங்களுக்கு பிடித்தை செய்வீங்க " என்று நண்பர் ஒருவர் கொடுத்ததன் பெயரில் இந்த நாவலை படித்தேன்.

சுயமுன்னேற்ற கட்டுரைகள், கருத்துக்கள் போல சுயமுன்னேற்ற நாவல் வகையில் " Alchemist " சேர்ந்தது என்று சொல்லலாம்.

When the person desires something, all the universe conspires to help that person to realize his dream. 

ஒருவன் தன் வாழ்க்கையில் ஒன்றை அடைய நினைக்கிறான் என்றால், அண்டம் எல்லாம் சேர்ந்து அதை அடைய அவனுக்கு உதவி செய்யும் என்ற கருத்தை வழியுறுத்துவது தான் இந்த நாவலின் நோக்கம்.



ஆடு மேய்க்கும் சிறுவன் சன்டிகாவிடம் ஜோசியம் பார்ப்பவள் அவனுக்கு பெரிய புதையல் கிடைக்கும் என்கிறாள். தனக்கு பணம் தர வேண்டாம், புதையல் கிடைத்தால் பத்து சதவீதம் கொடுக்க வேண்டும் என்கிறாள். முதலில் யோசிக்கும் சன்டிகா, முன்னாள் மன்னன் மெல்ஷிசேடெக் புதையலை தேடி செல்ல உத்வேகப்படுத்துகிறான். இரண்டு ராசியான கற்களை கொடுத்து, அதை சொல்லும் நல்ல சம்பாஷ்யை புரிந்து கொண்டு புதையலை தேடி செல்ல சொல்கிறான். புதையல் கிடைத்தால் தனக்கு பாதி தர வேண்டும் என்கிறான்.

ஒரு வழியாக புதையலை தேடி செல்லும் சன்டிகா கையில் வைத்திருந்த பணத்தை இழக்கிறான். தன் இலக்கில் இருந்து மாறாத சன்டிகா, ஒரு கண்ணாடி கடையில் வேலை செய்து பணம் சேர்த்து தனது பயணத்தை தொடர்கிறான். இறுதியாக அவன் புதையலை அடைந்தானா இல்லையா என்பதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாலைவனம், காற்று, சூரியன் எல்லாம் சிறுவனிடம் பேசி, அவன் கட்டளைக்கு கட்டுப்படுவது எல்லாம் சிறுவர் கதைப் போல் உணர்த்துகிறது. இவ்வளவு நேரம் சிறுவர்களுக்கான நாவலை தானா படித்தோம் என்ற எண்ணமும் வருகிறது.

நம் பகுத்தறிவுக்கு சவாலாக பல விஷயங்கள் இந்த நாவலில் உள்ளது. எனுனும் குழந்தைகள் நாவல் என்று முன்பே சொல்லியது போல், சில மாயயை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நாவலில் மிகவும் ரசிக்க கூடியது வசனங்கள் தான். நான் மிகவும் ரசித்த வரிகள்.

If I Could, I'd write a huge encyclopedia just about the words luck and coincidence. It's with those words that universal language is written.

For me, the war seemed a curse. But now it's a blessing. because it brought me to you. (போர்களத்தில் பார்க்கும் பெண்ணை கவர இதை விட நல்ல வாக்கியம் சொல்ல முடியாது)

The war is important to both armies. It's not a battle of good against evil. It's a war between forces that are fighting for the balance of power.


Every search begins with beginner's luck and every search ends with the victor's being severely tested.


There is only one thing that makes a dream impossible to achieve. the fear of failure.

ஒரு முறை நாவலை வாசிக்கலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails