1978ல் அலெக்ஸ் கர்னர் சிறுவயதில் அம்மாவுடன் இருந்த ஞாபகங்களில் இருந்து படம் தொடங்குகிறது. 1989ல் இளைஞனான அலெக்ஸ், தன் சகோதரி அரியன், அரியனின் குழந்தை பால், அம்மா கிரிஸ்டினாவோடு கிழக்கு பெர்லினில் வசிக்கிறான். கிரிஸ்டினா ஒரு கம்யூனிச ஆதரவாளர். வேலையை முடித்து வீட்டுக்கு திரும்பும் வழியில் மக்கள் போராட்டம் நடக்க போராட்டக்காரர்களோடு அலெக்ஸ் கைது செய்யப்படுகிறான். அதை அவன் அம்மா கிரிஸ்டினா பார்க்கிறாள். தன் மகன் கைதாவதை பார்த்த கிரிஸ்டினாவுக்கு மாரடைப்பு ஏற்ப்படுகிறது. கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில் பிரிக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியும், வடக்கு ஜெர்மனியும் ஒன்று சேர்ந்து ஜெர்மனியாக உருவெடுக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையில் இருக்கும் பெருஞ்சுவர் உடைக்கப்படுகிறது. அதுவரை கம்யூனிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனி மெல்ல மெல்ல முதலாளித்துவம் நுழைகிறது. கிரிஸ்டினாவை கவனத்துக் கொள்ளும் நர்ஸ் லாரா மீது அலெக்ஸ்க்கு காதல் வருகிறது. வீடியோ படம் எடுக்கும் டெனிஸ் என்ற நபரின் நட்பு அலெக்ஸ்க்கு கிடைக்கிறது. அலெக்ஸின் சகோதரி அரியனுக்கு வடக்கு ஜெர்மனி பகுதியில் இருந்து புது காதலன் கிடைக்கிறாள். கிழக்கு ஜெர்மனிப் போல் அவர்கள் வீடும் முழுவதுமாக முதலாளித்துவ பொருட்களாக கொண்ட வீடாக மாற்றுகிறார்கள்.
கோமாவில் இருந்த கிரிஸ்டினா கண் விழிக்கிறாள்.
டாக்டர் அலெக்ஸிடம், கிரிஸ்டினாவுக்கு வருத்தமோ, அதிர்ச்சியான தகவலோ, விஷயமோ கேள்விப்பட்டாமல் மீண்டும் மாராடைப்பு ஏற்ப்படும் என்று சொல்கிறார். நாட்டில் நடந்த தற்போதைய மாற்றத்தை அம்மா கேள்விப்பட்டால், கம்யூனிச ஆதரவாளராக இருக்கும் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று அலெக்ஸ் நினைக்கிறான்.
கிரிஸ்டினா கோமாவிற்கு முன்பு எப்படி வீடு இருந்ததோ மீண்டும் அப்படியே வீட்டை மாற்றுகிறான் அலெக்ஸ். கிழக்கு ஜெர்மனி இருந்த போது பொருட்கள் தயாரித்த பல நிறுவனங்கள் இப்போது இல்லை என்பதால், அவர்களின் காலி டப்பா, கவர் கொண்டு தற்பொதைய பொருட்களை நிரப்புகிறான். தன் நாடு மாறிவிட்டதை அம்மாவுக்கு சந்தேகம் வராததுப் போல் நடந்துக் கொள்கிறான். டி.வி பார்க்க வேண்டும் என்று கிரிஸ்டினா ஆசைப்படும் போது, தனது நண்பன் டெனிஸ் வைத்து கம்யூனிச செய்திகளை வாசிக்க வைக்கிறான்.
ஒரு நாள் தன் வீட்டு ஜென்னலில் ’கோக்ககோலா’ நிறுவனத்தின் விளம்பரத்தை பார்க்கிறாள் கிரிஸ்டினா. அது ஒன்றுமில்லை என்று அலெக்ஸ் பேச்சை மாற்றுகிறான். பிறகு டெனிஸைக் கொண்டு ’கோக்ககோலா’ சோஷலிச குடி பானமாக அரசாங்கம் அறிவித்து போல் செய்தியை ஒளிப்பரப்புகிறான். இன்னொரு முறை, அலெக்ஸ் தூங்கிக் கொண்டு இருக்கும் போது கிரிஸ்டினா வெளியே வந்து பல வெளிநாட்டு நிறுவன விளம்பரத்தை பார்த்து அதிர்கிறாள். லெனினின் சிலை எலிக்காப்டரில் தூக்கி செல்வதை பார்க்கிறாள். தூங்கி விழித்த அலெக்ஸ் அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து, வடக்கு ஜெர்மனியில் இருந்து பலர் அகதிகளாக வேலை தேடி கிழக்கு ஜெர்மனி வந்திருப்பதாக கூறுகிறான். அதனால் சில வடக்கு ஜெர்மனி விளம்பரங்களும், நவீன உடைகள் அணிந்திருக்கும் மனிதர்கள் இருப்பதாக பொய் சொல்கிறான். அதை நம்ப வைக்கும் விதமாக டெனிஸ்ஸைக் கொண்டு டி.வி செய்தியையும் ஒளிப்பரப்புகிறான். உடனே, கிரிஸ்டினா நாமும் வடக்கில் இருந்து வரும் ஒரு குடும்பத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று சொல்கிறாள்.
கிரிஸ்டினாவை அழைத்துக் கொண்டு அலெக்ஸ், அரியன் தங்கள் காதலர்களோடு அவர்களின் விடுமுறைக்காக வெளியே அழைத்து செல்கிறான். வழியில் இருக்கும் மாற்றங்கள் தெரியாமல் இருக்க கிரிஸ்டினாவை கண்ணை கட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவதாக சொல்கிறான் அலெக்ஸ். தன் மகன், மகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கும் போது கிரிஸ்டினா தன் கணவன் வடக்கு ஜெர்மனி சென்ற போது தான் கிழக்கு ஜெர்மனியில் இருக்க முடிவு எடுத்ததை நினைத்து வருத்தப்படுகிறாள். தன் கணவன் ராபர்ட்டை பார்க்க ஆசைப்படுவதாக சொல்கிறாள். அன்று இரவு, கிரிஸ்டினா உடல் மேலும் மோசமாகிறது.
இந்த முறை, கிரிஸ்டினா உடல் பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொல்கிறார். அலெக்ஸ் தன் அப்பாவிடம் பேசி அம்மாவை பார்க்க அழைத்து வருகிறான். அன்று, கிழக்கு-வடக்கு ஜெர்மனி இணைந்த ஒரு வருட கொண்டாட்ட நிகழ்வு நடைப்பெற இருக்கிறது. அலெக்ஸ் டாக்ஸி ட்ரைவரை புதிய கிழக்கு ஜெர்மன் அதிபராக நடிக்க வைத்து, கிழக்கு-வடக்கு ஜெர்மனி இணைந்ததாக பழைய செய்தியோடு தொகுத்து வீடியோ தயாரிக்கிறான். இரண்டு நாடு இணைவதால் கம்யூனிசத்திற்கு எந்த பங்கமும் வராது என்று அதிபர் உறுதி மொழி வழங்குவது போல் அந்த செய்தி உள்ளது. படுக்கையில் இருக்கும் கிரிஸ்டினா முதலாளி நாடாக வடக்கு ஜெர்மனி கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட சந்தோஷ்த்தில் இறக்கிறாள்.
இறந்த தன் அம்மாவின் அஸ்தியை கிழக்கிலும் இல்லாமல், வடக்கிலும் கழக்காமல் அவள் அஸ்தியை ராக்கெட்டில் விட்டு வெடிக்க வைத்து காற்றில் கலக்கிறான்.
தன் அம்மா கடைசி வரை கம்யூனிச நாட்டில் வாழ்கிறோம் என்ற நம்பக்கையில் இறந்ததாக அலெக்ஸ் சொல்கிறான். தன் அம்மாவின் நினைவுகள் தன் பழைய கிழக்கு ஜெர்மனியோடு தொடர்பு கொண்டது. அம்மா நினைவு இருக்கும் வரை அந்த நாட்டின் பற்றிய நினைவு இருக்கும் என்று அலெக்ஸ் பாத்திரம் சொல்லும் போது படம் முடிகிறது.
சோவியத், இந்தியா என்று ஒன்றாய் இருந்த எத்தனையோ நாடுகள் உடைந்து விட்டாலும் பிரிந்த இரண்டு நாடு ஒன்றாயானது என்றால் அது ஜெர்மனி தான். ஜெர்மனி இணைப்பு பின்னனி வைத்து நகைச்சுவையும், சோகமும் கலந்த கதை கொடுத்த இயக்குனர் பாராட்டியாக வேண்டும்.
அம்மாவுக்காக இல்லாத ஒரு நாட்டை அலெக்ஸ் பாத்திரம் உருவாக்கி காட்டும் பல இடங்களில் நெகிழ வைக்கிறது. குறிப்பாக, அம்மா இறக்க போகிறார் என்று தெரிந்தும் போலி செய்தி தொகுப்பை ஒளிப்பரப்பும் போது ஒரு பக்கம் சிரிப்பை வர வழைத்தாலும், அந்த பாத்திரத்திற்காக அம்மா பாசமும் தெரிகிறது.
அலெக்ஸ், அரியன் 30 வருடங்களாக கிரிஸ்டினா சேர்த்த பணத்தை புது நாட்டில் மாற்ற நினைக்கும் போது பணம் மாற்றும் நாள் முடிந்து விட்டதாக அதிகாரி சொல்லி பணம் வாங்க மறுக்கிறார். முதலாளித்துவ நாட்டில் ஏழைகளை ஏழைகளாக இருக்க வைப்பதை இந்த காட்சி காட்டுகிறது.
கோல்டன் க்ளோப், BAFTA, ஈரோப்பியன் விருது என்று பல விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது.
இன்றைய தலைமுறைக்கு எதிரியாக தெரியும் பாகிஸ்தான், அறுபது வருடங்களுக்கு முன்பு சுதந்திரத்துக்காக போராடிய நாடு இரண்டாக பிரிக்கும் போது எப்படி இருந்திருக்கும் ? பொது எதிரியை வெளியே அனுப்பிய கையோடு நமக்கு நாமே எதிரியாகிவிட்டதை நினைத்து அன்றைய மக்கள் மனது எவ்வளவு பாதித்திருக்கும் ? மக்களுக்காக கவலைப்படாத அரசியல் சூழ்னிலையில் வாழும் நாம் பிரிவு வந்தாலும் கவலைப்பட போவதில்லை. கவலைப்படவும், கோபப்படவும் நேரமில்லை.
2 comments:
ம்... மிக நல்ல சினிமா. அதிலும் அந்த லெனினின் சிலை பகுதி பகுதியாய் பிரிக்கப்பட்டு தூக்கிச் செல்லப்படும் காட்சி... அற்புதம்.
அந்த மகன் தனது தாய்க்காக எடுத்திடும் பிரயத்தனங்கள் நிறையவே... நம்மோடு இயைந்திருந்த கலாச்சாரத்தைத் தொலைத்து வாழ்வதென்பது எவ்வளவு கடினமென அந்த தாயின் கதாப்பாத்திரம் எடுத்துக் காட்டுகிறது...
இந்த படத்தை பற்றி கேள்விபட்டு நாட்கள் ஆக, இப்பொழுதுதான் ஒரு நல்ல விமர்சனம் படிக்கிறேன்.பார்க்க ஆவலை தூண்டும் எழுத்துக்கள்.மனதார நிறைய நன்றிகள்.
Post a Comment