Friday, November 26, 2010

இரண்டு குறும்படங்கள்

பித்தள சொம்பு

ஜெகன், வி.எஸ்.ராகவன் போன்ற திரைப்பட கலைஞர்களை வைத்து இயல்பான நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்கள். ‘ஆல்மைட்டி’ ஆங்கில படத்தை ஞாபகப்படுத்தினாலும், டைம்ங் காமெடி நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.



கடைசி தகவல்

நல்ல கதையை யோசித்து காஸ்டிங், வசனத்தில் கொட்டை விட்டுயிருக்கிறார்கள். இதுப் போன்ற கதையில் சோர்வில்லாத வசனங்கள் மிகவும் முக்கியம். ஒரு கட்டத்திற்கு என்ன சொல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிக்கிறது.

Thursday, November 25, 2010

பௌத்த சூத்திரங்கள் எப்படிப் பிறந்தன?

புத்தர் இறக்கும் போது ஞானம் பெற்றுவிட்ட அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைச் சுற்றிக் கூடிவிட்டனர்.அவருடைய உபதேசங்களை எழுதிவைக்க முடிவு செய்தார்கள் .குரு இறந்துவிடப் போகிறார்.வருங்காலத்துக்கு அவருடைய உஅபதேசங்களை எழுதி வைக்க வேண்டு மல்லவா?

பிரமாதமான சீடர்கள் இருந்தார்கள். மிகப் பெரிய ஞானியர்.ஆனால் யாரும் அவருடைய உபதேசங்களை அப்படியே திருப்பிச் சொல்ல முடியவில்லை.சிலர் முழு மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.அவர்களை கேட்ட போது தோள்களைக் குழுக்கி ,”ஏதாவது தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே.பிழைகள் இருக்கத்தான் செய்யும்.அவரிடம் நாங்கள் கண்டதை எல்லாம் அப்படியே வார்த்தைகளில் வடிக்க முடியாது “ என்று சொல்லிவிட்டார்.



எந்த ஒரு ஞானியும் புத்தரின் உபதேசங்களைத் தொகுத்துச் சொல்ல முன் வரவில்லை.கடைசியாக ஆனந்தரை அனுகினார்கள்,புத்தரோடு நாற்பத்திரெண்டு வருடங்கள் இருந்தவர் அவர் ஒருவர் தான்.ஆனாலும் ஞானம் சித்திக்கவில்லை.எல்லாமும் அவருக்கு நினைவிருந்து .வார்த்தைக்கு வார்த்தை புத்தருடைய உபதேசங்களை அவர் நினைவில் வைத்திருந்தார்.

அசாதாரணமான நினைவாற்றலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.ஒரு ஞானியின் வார்த்தைகளை அஞ்ஞானியின் வாய் வழியாகக் கேட்டு நம்ப புடியுமா?

புத்தர் இறந்த அன்று ஆனந்தாவை அழைத்து ,”ஆனந்தா!நாளைக்கு நான் இங்கே இருக்கமாட்டேன்.எனவே அவசரப்படு,இனியும் தள்ளிப் போடாதே!”என்றார்.

புத்த்ர் இறந்தப்பின் அங்கே கூடியவர்கள் கேட்டுக் கொண்ட்தற்காக ஆனந்தர் இருபத்து நான்கு மணி நேரம் கண்கலை மூடி அமர்ந்தார்.அவருடைய வாழ்வில் முதல் முறையாக அப்படி அமர்ந்தார்.எப்போதும் புத்தரோடேயே இருந்துவிட்டதால் அவருக்கு கண்களை மூடி அமர்வதே முடியாத காரியமாக இருந்தது.

தினமும் அவரை சுற்றி பல காரியங்கள் நடந்துக் கொண்டே இருந்த்தால் அவருக்கு எப்போதும் ஏதாவது செய்வதற்க்கு வேலை இருந்து கொண்டே இருந்தது இப்போதுதான் புத்தர் போய்ச் சேர்ந்துவிட்டாரே !வேறு வேலை ஏதும் இல்லை .கண்களை மூடி இருபத்து நான்கு மணிநேரம் அமர்ந்துவிட்டார்.தன் வாழ்வில் முதல் முறையாக மௌனத்தில் அமர்ந்துவிட்டார்.
இருபத்து நான்கு மணிநேரத்தில் ஞானம் பெற்றார்.நாற்பத்திரெண்டு வருடம் நடக்காத காரியம் இருபத்து நான்கு மணிநேரத்தில் நடந்துவிட்ட்து.

அவருடைய ஞானப் பிரகாசத்தை பிற ஞானியர் கண்டனர்.அவருடைய ஜோதியை கண்டனர்.பிறகு “ஆனந்தா இனி சத்சங்கத்துக்கு வரலாம் நீர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக் கொள்கிறோம் “என்றார்கள்.

அப்படித்தான் பௌத்த சூத்திரங்கள் யாவும் தொகுக்கப்பட்டன.

**

புத்தரை ஒருவர் திட்டினார்.புத்தர் கேட்டார்,தன் வழி நடந்தார்.புத்த பிட்சு ஆனந்தர்,”திட்டியவனுக்கு மறுமொழி எதுவும் கூறவில்லையே” என்று கேட்டார்.

புத்தர் “மற்றவர்களது தவற்றுக்கு என்னைத் தண்டித்துக் கொள்வதை,வெகு காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.அவன் திட்டுகிறான்.திட்டுவது அவன் செயல்,அவன் தவறு.அதில் நான் எங்கே நுழைந்தேன்”திட்டட்டும்,திட்டாதிருக்கட்டும்.மோசமாகத் திட்டட்டும்.லேசாகத் திட்டட்டும்,பலத்தைச் செலுத்தித் திட்டட்டும்,பலமற்று திட்டட்டும்,அவன் உழைத்தான்.கிராமத்திலிருந்துநடந்து,நம் பாதை வரையில்,திட்டுவதறகாக் வந்தான்.திட்டி விட்டான்.தனது வேலையை முடித்து விட்டான்,திரும்பினான்.இதில் எனக்கு என்ன சம்பந்தம்?

திட்டுவதற்க்கு,அவனை நான் தூண்டவில்லை அவனை நான் உற்ச்சாகபடுத்தவுமில்லை. எனக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை.நான் தொடர் பற்றவன்.அவனது தவற்றிற்காக ,எனக்கு ஏன் தண்டனை விதித்துக் கொள்ளவேண்டும்?நான் கோபமைடைந்தால்,அதில் எரிபடுவது நானே .தீ,எனக்குள் எழும்.எனது மயிர்கால்கள் அனைத்தும் குத்திடும்;எனது பிராணன் துடிக்கும்,எனது ரத்த அழுத்தமே அதிகரிக்கும்,இரவு எனக்கு உறக்கம் வராது;இந்த மனிதன்,திட்டி முடிதாயிற்று,வேலை முடிந்தது,என்று ஆனந்தமாக உறங்குவான்!”எனறார்.

Wednesday, November 24, 2010

உலக சினிமா : Turtles Can Fly

மூன்று வேளை சாப்பிட கஷ்டப்படுற குழந்தைகளுக்கு எந்த மாதிரி வேலை செய்வார்கள். டீ க்ளாஸ் கழுவது, டெபிள் துடைப்பது, கடையை சுத்தப்படுத்துவது போன்ற வேலை செய்வதை பார்த்திருப்போம். பதினாலு வயது நிறம்மாத ஒருவனுக்கு இந்த வேலையை கொடுத்தால் அரசாங்கத்திற்கு நாம் பதில் சொல்ல வேண்டும். பதினாலு வயது நிறம்மாதவர்களிடம் வேலை வேலைக்கு வைத்தால் அபராதம் கட்ட வேண்டும்.

குழந்தைகள் தொழிலாளர்கள் நம் நாட்டில் இருக்கின்ற போதிலும், அவர்கள் பாதுக்காக்க ’சட்டம்’ இருக்கிறது. நகர்ப்புற பகுதியில் சட்டத்திற்கு பயந்து சில இடங்களில் குழந்தைகளிடம் வேலை வாங்குவதில்லை. அவர்களை பாதுகாக்க அமைப்புகள் இருக்கிறது. அப்படி, குழந்தைகளை போக்கிஷ்மாக பார்ப்பவர்களுக்கு இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் நடித்த படம் என்றாலும் குழந்தைகளுக்கான கற்பனை உலகம் இந்த படத்தில் இல்லை. தங்கள் வயிற்றை காக்க புதைந்து இருக்கும் கண்ணி வெடிகளை எடுக்கும் குழந்தைகள் பற்றின கதை.



குழந்தைகளை வேலைக்கு அனுப்ப யோசிக்கும் நாம், கண்ணி வெடி எடுக்கும் சிறுவர்களை பார்க்கும் போது இப்படி எல்லாம் இருக்கிறதா என்ற நம்பாமல் இருக்கமுடியவில்லை.

இராக் – துருக்கி எல்லை பகுதியில் இருக்கும் குர்டிஷ் மூகாமில் அமெரிக்க இராணுவம் உடுருவல் முன்பு கதை தொடங்குகிறது.

எல்லோராலும் ’சாட்டிலைட்’ என்று அழைக்கப்படும் 13 வயது சிறுவன் தான் நாயகன். குர்டிஷ் மூகாமில் இருக்கும் சிறுவர்களுக்கு இவன் தான் தலைவன். புதைந்து கிடக்கும் கன்னி வெடிகளை எடுத்து விற்று அதில் வரும் பணத்தில் தனக்கும், தன்னை நம்பி இருக்கும் சிறுவர்களுக்கு உணவு கொடுக்கிறான். பகுதி நேரங்களில் கிராமங்களில் சாட்டிலைட் இணைப்புக் கொடுத்து சதாம் பற்றி வரும் செய்தி செனலில் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பெரியவர்களுக்கு மொழிப்பெயர்ப்பான்.

ஆபாத்தான வேலை என்றாலும், மூகாமில் இருக்கும் சிறுவர்களுக்கு கன்னி வெடி எடுக்கும் வேலை தவிர எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு வயது குழந்தையோடு அகிரின் என்ற சிறுமி, அவளின் சகோதரன் ஹென்கோய்யோடு அங்கு வருகிறான். ஹென்கோய்க்கு இரண்டு கை கிடையாது. ஆனால், தன் வாயால் கன்னி வெடியை லாவகரமாக எடுக்க தெரிந்தவன். நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்பே சொல்லும் விசேஷ அறிவு திறன் கொண்டவன்.

ஆபத்தான வேலையை இரண்டு கை இல்லாத ஹென்கோய் செய்வது சாட்டிலைட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹென்கோய்யை பயமுறுத்தி பார்க்கிறான். எதுவும் நடக்கவில்லை. தன்னையறியாமல் அவனின் சகோதரி அகிரின் மீது காதல் வளர்த்துக் கொள்கிறான்.

அவளுடன் இருக்கும் இரண்டு வயது குழந்தை அவளின் ’சகோதரன்’ என்று அந்த கூட்டத்தில் இருக்கும் எல்லா சிறுவர்களும் நினைக்கின்றனர். ஆனால், அது அகிரினுக்கு பிறந்த குழந்தை.
எல்லையில் வசிக்கும் எல்லா பெண்களுக்கும் இராணுவத்தால் நடக்கப்படும் கொடுமை அந்த சிறுமிக்கும் நடந்திருக்கிறது. அகிரின் தன் சகோதரனிடம் மூகாமை விட்டு செல்லும் போது குழந்தையை இங்கேயே விட்டு விட வேண்டும் என்று சொல்கிறான். ஹென்கோய்க்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், அவள் கேட்கும் நியாயமான கேள்விக்கு பதில் அளிக்க் முடியாதவனாக இருக்கிறான். அப்போது, யுத்தம் தொடங்க போவதாக ஹென்கோய் ஆரூடம் சொல்கிறான்.

முக்கியமான செய்தி என்பதால் அந்த கிராமம் முழுக்க யுத்தம் தொடங்கபோவதை சாட்டிலெட் பரப்புகிறான். இருந்தாலும், ஹென்கோய் சொல்லுவது நடக்குமா மனதில் ஒரு சந்தேகம் சாட்டிலெட் மனதில் இருக்கிறது. கிராம மக்கள் எல்லோரும் பயந்து மலை உச்சுக்கு செல்கின்றனர். அப்போது, அமெரிக்க விமானங்கள் தங்களுக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை கீழே போடுகிறது. அதில், அவர்களை காப்பாற்ற வந்த ரட்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், அகிரின் குழந்தையை தூக்கி சென்று மிக தொலைவில் விட்டு வருகிறாள். ஆனால், சாட்டிலெட் குழந்தை தவறு தலாக வந்துவிட்டது என்று நினைத்து அவளின் கூடாரத்தில் விடுகிறான்.

சாட்டிலெட் முதல் கொண்டு யுத்த தொடங்கியதால் தங்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் முடிவு வரும் என்று நம்புகின்றனர். தன்னை நம்பி இருக்கும் சிறுவர்களை பாதுக்காக்க கன்னி வெடி வைத்து தூப்பாக்கி வாங்குகிறான். தன் குழந்தையை எப்படியாவது தொலைக்க வேண்டும் என்று நினைத்த அகிரின் கன்னிவெடி இருக்கும் பகுதியில் குழந்தையை கட்டி வைத்துவிட்டு அழுதுக் கொண்டே திரும்புகிறான்.

கன்னி வெடி நடுவில் குழந்தை இருப்பதை அறிந்த சாட்டிலெட் காப்பாற்ற செல்கிறான். அந்த முயற்சியில் ஒரு கன்னி வெடி வெடித்துவிட, சாட்டிலெட் கால் பலமாக காயம் ஏற்ப்படுகிறது. ஆனால், பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை சாட்டிலெட் நண்பர்கள் அகிரின் கூடாரத்தில் சேர்கின்றனர். மீண்டும், குழந்தையை பார்க்கும் போது அகிரின் தன்னையறியாமல் அழுகிறாள். குழந்தை ஆசையாய் அவளை நெருங்கும் போது அவளால் என்ன செய்தென்று தெரியவில்லை.

எல்லாம் இன்று முடிந்துவிடும் என்று ஹென்கோய் ஆரூடம் சொன்னதாக சாட்டிலெட்டின் நண்பன் அவனிடம் கூறுகிறான். இதை, உறுதி செய்துக் கொள்ள ஊன்றுகோள் வைத்துக் கொண்டு சாட்டிலெட் அவனை தேடி செல்கிறான். ஹென்கோய் தூங்கும் போது, அகிரின் குழந்தையோடு தற்கொலை செய்துக் கொள்வதுப் போல் ஆரூட அறிவுக்கு தோன்றுகிறது. விழிக்கும் போது அகிரின் தன் அருகில் இல்லாததை பார்க்கிறான். அவளை தேடி அளையும் ஹென்கோய், ஏரிக்கரையில் சாட்டிலெட் அழுதப்படி பார்க்கிறான். இரண்டு கையில்லாத ஹென்கோய் ஏரியில் குதிக்கிறான். கல் கட்டப்பட்ட குழந்தையின் காலையும், அகிரின் உடையையும் பார்க்கிறான். ஹென்கோய் நீந்தமுடியாமல் அவனும் இறக்கிறான்.

அமெரிக்க இராணுவம் இராக் எல்லை பகுதியில் நுழையும் போது யுத்தம் முடிவுக்கு வந்த ஆனந்தம் இல்லாமல் சாட்டிலெட் ஊன்றுகோல் வைத்துக் கொண்டு வெறுமையாக நிற்க்கிறான்.

முக்கியமான கதாப்பாத்திரங்கள் எல்லோரும் சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். சாட்டிலெட் ஆயுத வியாபாரியிடம் கன்னி வெடிக்கு பதிலாக தூப்பாக்கி கேட்கும் காட்சி எதோ மளிகை கடையில் பொருள் வாங்குவது மிக சாதாரனமாக அந்த நாட்டில் வாங்கலாம் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலே இரண்டு கையில்லாத சிறுவனை வைத்து ஹென்கோய் கதாப்பாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். வாய்யால் கன்னி வெடியை செயலிழக்க வைக்கும் காட்சியே அதிர வைக்கிறது. எப்போதும் சோகமான முகத்தில் தோன்றும் அகிரின் கதாபாத்திரம். புத்தகம் சுமக்கும் வயதில் தன் தோளில் குழந்தையை சுமந்து கன்னி வெடி இடையில் விடும்போது அந்த குழந்தையின் மழலை மொழி பார்வையாளரில் இதயத்தை கசிய வைக்கிறது.

அமெரிக்காவின் உடுருவலை இராக் மக்கள் வரவேற்றது போல் காட்டியிருக்கிறார்கள். கருத்தளவில் இந்த படம் ஒரு தலைப்பட்சமாக காட்டப்படுகிறது. அமெரிக்க இராணுவம் வந்தால் மக்கள் பிரச்னை தீரும் என்று நினைத்த சாட்டிலெட், அமெரிக்க இராணுவம் எல்லையில் வந்ததும் எந்த வித உணர்ச்சியில்லாமல் காட்டும் போது ஆயிரம் அர்த்தம் சொல்கிறது.

உலகில் அதிகம் சபிக்கப்பட்ட மனிதர்கள் என்றால் எல்லை பகுதியில் வாழும் மக்களாக தான் இருப்பார்கள். எல்லை யுத்தத்தில் இரண்டு பக்கமும் சேரமுடியாமல் நடுவில் சிக்கி அதிகம் இறப்பது இவர்கள் தான்.

ஆமை புகுந்த வீடு மட்டுமல்ல... அமைதி படை நுழைந்த நாடும் உருப்படாது.

Tuesday, November 16, 2010

சத்திய சோதனை

இந்திரா பார்த்தசாரதி

இ.பா புத்தகங்கள் என்றால் அரசியல் பகடி செய்யும் எழுத்துக்கள் தான். ’வேதப்புரத்து வியாபாரிகள்’ அபத்தங்களாக சம்பவங்களை கோர்க்கப்பட்டு தற்கால அரசியல்வாதிகளை நக்கலடித்திருப்பார்.’ஏசுவின் தோழர்கள்’ நாவலில் போலிஷ் நாட்டோடு அரசியலோடு இந்தியாவை ஒப்பிட்டு செய்திருப்பார். ‘சுதந்திர பூமி’ நாவலில் ஒரு சமையல்க்காரன் அரசியல்வாதியான கதையை சொல்லியிருப்பார். இதில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கொள்கையை பகடி செய்திருப்பார். இந்த மூன்று அரசியல் நாவலை கட்டுரையாகக் கூட எழுதியிருக்கலாம். ஏன் நாவலாக எழுதினார் படித்து முடித்த பிறகு தோன்றியது ? கட்டுரையில் சொல்ல வேண்டியதை கதாப்பாத்திரங்களின் விவாதம் மூலம் சொல்லியிருப்பார்.

மிக எளிமையான எழுத்து, அதிக வர்ணனையில்லாத நடை என்பதால் இவரின் மூன்று புத்தங்களை படித்திருக்கிறேன். இ.பாவின் ‘சத்திய சோதனை’ நான் படித்த நான்காவது புத்தகம். இதுவும் அரசியலை பற்றிய சமக்கால நாவல் தான்.

மகாத்மா காந்தி சுயசரிதையின் தலைப்பைக் கொண்ட புத்தகம் தவிர அவரின் சுயசரிதைக்கும், இந்த நாவலுக்கும் எந்த சம்மந்தமில்லை. காந்தியிருந்திருந்தால் தன் புத்தகம் பெயர் இதற்கு வைத்தற்காக மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் இந்த தலைப்பு வைத்துவிட்டார்கள் போல.

தமிழ் அகராதியில் ‘அரசியல்’ என்றால் நாட்டை நிர்வாகிக்கும் கலை. ஆனால் நாம் பயன்ப்படுத்துவது...? தந்திரம், ஏமாற்றுவது, முகமூடி, காலை வாரிவிடுவது, மாட்டிக் கொள்ளால் இருப்பதற்கு... போன்ற காரியங்களுக்கு மாற்றுப் பெயராக தான் இருக்கிறது.

பிரும்மநாயகம் என்ற அரசியல்வாதியின் சுயசரிதை எழுத கோஸ்ட் ரைட்டராக வரும் வாசுதேவன், அவர் செகரெட்டியாக சேருக்கிறான். அங்கு அவருடன் வாசுதேவனுக்கு கிடைக்கும் அனுபவம், அரசியல் தந்திரமும் அவனை பிரம்மிக்க வைக்கிறது. பிரம்மநாயகம் வேட்பாளராக நிருத்திய பிரம்மநாயகத்தின் நண்பர் தணிகை கொலைச் செய்யப்படுகிறார். தணிகையின் கொலை அரசியலுக்காக செய்யப்பட்டதா ? பிரும்மநாயகம் பங்குயிருக்குமா ? என்று பல சந்தேகங்கள் வாசுதேவன் மனதில் ஓடுகிறது. இறுதியில், கொலை பழி வாசுதேவன் மேல் படியாக சந்தர்ப்பங்கள் அமைக்கிறது. அதில் வாசு எப்படி மீண்டான் என்பதை புத்தகம் வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே சரியான குடிநீர் வசதிகூட இல்லாம இருக்கிறவங்க சதவிகிதம் தெரியுமா உங்களுக்கு ? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க ?’

‘சாராயம் கொடுங்க’

’அரசாங்கத்துக்கு உங்க சிபாரிசு இதுதானா ?’

‘என் சிபாசிசு இல்லேய்யா. அரசாங்கம் இதைத்தானே இப்போ செய்திட்டு வருது ?”


**

’படிச்சு முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டிருக்கேன்.’

வேலை தேடுவானேன் ? கட்சியிலே சேர்ந்திடு !’


’வேதப்புரத்து வியாபாரிகள்’, ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலில் இருந்த இ.பாவின் அரசியல் நகைச்சுவை இதில் குறைவு தான். எழுத்தாளன் கண்ணோட்டத்தில் நடக்கு கதை இன்னும் அரசியல் நகைச்சுவை கலந்திருக்கலாம்.

தன் முந்தைய நாவலில் திராவிட அரசியலை பகடி செய்தவர், இதில் வன்னிய அரசியலை பகடி செய்திருக்கிறார். குடி பழக்கம் இல்லாதவனாக பேசும் தலைவன் அந்தரங்க நண்பனோடு குடிப்பது போல் அமைத்திருக்கிறார்.

பார்ப்பனிய அரசியல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இவர் ஒரு நாவல் எப்போ எழுதப்போகிறார் ??

சமகால அரசியல் நாவல் வரவேற்க ஒன்று தான். இ.பா நாவல் ஒரு தலை பட்சமாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

நூல் வாங்க... இங்கே


ரூ.100 , பக் : 136
கிழக்கு பதிப்பகம்

Thursday, November 11, 2010

சில மொக்கை குறும்படங்கள்

நல்ல துணி எடுக்க நூறு துணியை எடுத்து வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அது போல தான், நல்ல குறும்படம் பார்க்க சில மொக்கை குறும்படங்களை பார்த்து தொலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி நல்ல குறும்படங்களை தேடும் போது கண்ணில் மாட்டிய சில மொக்கை படங்கள். எடுத்துக் கொண்ட கதைக் களம், மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக இயக்கியவர்களை பாராட்டலாம்.

Someone’s

பள்ளி மாணவன் இயக்கிய குறும்படம் என்பதை தவிர பெரிதாக சொல்ல இதில் இல்லை. மாணவன் என்பதால் என்னவோ கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக இறுதியில் சொல்லியிருக்கிறார்.



பலன்

நாளைய இயக்குனர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட குறும்படமா ? நகைச்சுவை படமா ? என்று ஒன்றும் புரியவில்லை. படம் எடுக்க வரும் இயக்குனரின் காட்சியை நடிகர்கள் எப்படி மாற்ற வைக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.



முதல் படி

இறுதி காட்சி வரை இந்த பெண்ணுக்கு என்ன குறை இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வசனம் ஓரளவுக்கு பரவாயில்லை. நல்ல எண்ணத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் விமர்சணத்துக்கு அப்பால் இதை பார்க்க வேண்டும்.

Wednesday, November 10, 2010

குண்டக்க மண்டக்க - 1

[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]

வடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...
பார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...?

வடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...
பார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...

வடிவேலு : நானும் வரேன்..
பார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...?

வடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..
பார்த்திபன் : சரி வந்து தொல...

வடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)

பெண் வீட்டில்......

பார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...
வடிவேலு : வணக்கம்ங்க....
'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....

பெண் வந்து காபி கொடுக்க...



வடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...
வடிவேலு : அப்போ பொண்டாடிய....
பார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...

வடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)
ரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...
'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....

வடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...
'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...
ரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...

பார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..
வடிவேலு : சரிப்பா... பொண்ணுங்க கிட்ட எனக்கு பேச தெரியாதா....

'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....

'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...?
வடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..

'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...
வடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...

'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...

வடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...

'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...
வடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...

'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....
வடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )

வடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...
'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...

'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...

வடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...
'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...

வடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...
'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...

வடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...
'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....

வடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....

(இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)

பார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...

கடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...
வடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...

பார்த்திபன் : அப்படியா…! பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...
வடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....

பார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....
வடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...

பார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...
ரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..
பார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...
ரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...

வடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...
ரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...



வடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...
ரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...

வடிவேலு : ஐயோ..அடிக்காதிங்க..அடிக்காதிங்க...பார்த்திபா...காப்பாத்து...
பார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...

வடிவேலு : அப்படி நியாயம் கேளு...
பார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...

வடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்காம விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)
வேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.
ரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....

வடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...

வேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...
வடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....
ரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......

(இது ஒரு மறுபதிவு)

Tuesday, November 9, 2010

இலக்கியச் சோலையில் "சாப்பாட்டு பிரியன்"



அக்டோபர் மாதம் இலக்கியச் சோலை மாத இதழில் நான் எழுதிய "சாப்பாட்டு பிரியன்" சிறுகதை.

Monday, November 8, 2010

உலக சினிமா : The Kite Runner

வாழும் பூமி நரகமாக விட்ட பிறகு வாழ கிடைத்த பூமியில் தங்களுடன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அசைப்போட்டு பார்ப்பார்கள். அப்போது இனிமையான நினைவுகளிடையே ஏதாவது வலி கண்டிப்பாக ஒலிந்திருக்கும். இனிமையான நினைவு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் வேதனை மனதை ஆட்கொண்டிருக்கும்.
அப்படி பாலியத்தில் வாழ்ந்த பூமி பிரிந்து, மீண்டும் தன் சொந்தத்தை தேடி சென்றவனின் பற்றிய கதை தான் ‘The Kite Runner’

எழுத்தாளாராகிவிட்ட சந்தோஷத்தில் அமீர் வீட்டுக்குள் நுழைய ரஹிம் கான் என்பவரிடம் இருந்து போன் வருகிறது. ரஹிம் கான் என்ற பெயரை கேட்டத்தும் அவனது நினைவலைகள் பாலியத்தை நோக்கி செல்கின்றன.

1978ல் ஆப்கானிஸ்தானில் வாழும் அமீரின் நண்பன் ஹாசன் பட்டம் விட அவனுக்கு உதவியாக அமீர் இருக்கிறான். இருவருக்கும் பெரிய பொழுதுபோக்கே பட்டம் விடுவது தான். அமீர் பணக்கார வீட்டு மகன். அவனின் தந்தை பாபா ஒரு கம்யூனிச எதிர்பாளர். அமீரின் தந்தை பாபாவிடம் வேலை செய்யும் அலியின் மகன் தான் ஹாசன். ஆசிப்பும், அவனது நண்பர்களும் அமீரிடம் வம்பு செய்யும் போது ஹாசன் அவர்களை தன் உண்டிக்கோள்ளால் அடித்துவிடுவதாக மிரட்டுகிறான். ஆசிப் அவர்கள் இருவரையும் நண்பர்களல்ல, முதலாளி, வேலைக்காரன் உறவு என்று சொல்லும் போது அமீருக்கு வேதனையாக இருக்கும். அதே சமயம், அவனின் தந்தை ஹாசனின் புத்திசாலி தனத்தை பாராட்டும் போது பொறாமையும் ஒட்டிக் கொள்ளும்.



அமீர் தனியாக இருக்கும் எழுதும் போது கதையை அவனது தந்தையின் நண்பன் ரஹிம் கான் பாராட்டுவார். அவனது முதல் வாசன் ரஹிம் கான். அதே சமயம், ஹாசன் அமீர் கதைக்கு விமர்சன முன் வைக்கும் போது அமீர் மனதில் நண்பன் ஸ்தானத்தில் ஹாசன் ஒரு படி கீழ் தள்ளப்படுகிறான். இருந்தாலும், இருவரும் தொடர்ந்து நண்பர்களாக விளையாடுகிறார்கள். ஒரு முறை பட்டம் விடும் விழா நடக்கும் போது அமீர் பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் அருத்து வெற்றிப்பெறுகிறான். அமீர் அருத்த பட்டத்தை ஹாசன் எடுக்க செல்ல, அமீர் தடுக்கிறான். " உனக்காக ஆயிரம் முறை செய்வேன் " என்று சொல்லி பட்டத்தை எடுக்க செல்கிறான். ஆசிப் குழுக்கள் அவனை சுழ்ந்துக் கொள்ள அவனிடம் பட்டம் கேட்கிறார்கள். ஹாசன் அதை தர மறுக்க அவனை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதையெல்லாம் பயந்தப்படி பார்த்த அமீர் மறைந்துக் கொள்கிறான்.

தனக்கு நடந்த்து என்ன என்று சொல்ல தெரியாத ஹாசன் தன் நண்பர் அமீரிடம் பட்டத்தை தருகிறான். ஹாசன் தனக்காக ஏன் இதை செய்ய வேண்டும் ? ஒரு வேலை ஆசிப் சொல்லுவது போல் தங்களுக்குள் முதலாளி, வேலைக்காரன் உறவு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. அவனை தன் வீட்டில் இருந்து அனுப்ப, அவன் மீது திருட்டு பழி போடுகிறான் அமீர். ஹாசனும் ஏற்றுக் கொள்கிறான். அமீர் அப்பா பாபா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அலி தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறான். அமீர் குற்றவுணர்வோடு ஹாசனை பார்க்கிறான்.

1979ல் ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானை உடுருவல் செய்ததால், தன் சொத்துக்களை எல்லாம் ரஹிம் கானிடம் நிர்வாகம் செய்ய ஒப்படைத்து மகனை அழைத்து செல்கிறான். வழியில் சோவியத்தின் சிப்பாய் ஆப்கானின் பெண்ணை புணர்ந்து கொள்ள அழைக்க தன் உயிரை பொருட்படுத்தாமல் தைரியமாக எதிர்கிறான். அமீர் மனதில் அவன் அப்பா ஒரு பெரிய ஹீரோவாக உருவாகுகிறார்.

இருவரும், அமெரிக்காவில் தன் வாழ்நாளை கலிக்கிறார்கள். அமீர் படித்து பட்டம் பெறுகிறான். அவன் தந்தை ஹாசனைப் பற்றி நினைவு படுத்தும் போதெல்லாம் அவனின் குற்றவுணர்வு அவனை கொள்ளும். அதை வெளியே காட்டிக் கொள்ளமல் இருப்பான். பாபா தன் நண்பரின் மகள் சொரயாவை திருமணம் செய்து வைத்த சந்தோஷத்தில் இறக்கிறான்.

அமீரின் நினைவலைகள் முடிந்து நீண்ட நாட்கள் பிறகு ரஹிமிடம் பேசுகிறான். முக்கியமான விஷய்த்திற்காக அமீரை பாகிஸ்தான் வரச்சொல்லுகிறான். பாகிஸ்தான் சென்ற அமீர் தன் முதல் புத்தகம் ரஹிம் கானுக்கு சமர்பிப்பதை காட்டுகிறான். அப்போது ஹாசன் அவன் தந்தை பாபாவின் இன்னொரு மகன் என்று கூறுகிறான். மேலும், அமீரின் சொத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஹாசனும், அவனது மனைவியும் இறந்ததை கூறுகிறான். முதலில் கோபப்படும் அமீர் ஹாசனின் உறுக்கமான கடிதம் படித்து அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து நெகிழ்கிறான்.

ரஹிம் ஹாசனின் மகன் சௌரப் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு அலைத்து செல்ல சொல்கிறான். தாடி, டர்பன் போட்டுக் கொண்டு அமீர் காபுல்லுக்கு செல்கிறான். சோவியத் படைகளை விட தாலிபன் மிகவும் கொடுமையாக பெண்ணை அடித்து கொள்வதும், கால் இழந்த சிறுவர்கள் தன் கட்டை காலை விற்பதும், தூக்கி தொங்கிய உடல் என்று நரகமாகிவிட காபுலை பார்க்கிறான். ஹாசனின் மகன் தன் சிறுவயது எதிரியான ஆசிப் வைத்திருபதை அறிந்து தன் உயிரை பணைய வைத்து சௌரப்பை மீட்கிறான்.


சௌரபை ரஹிம் கான் வீட்டுக்கு அழைத்து வர அவர் இறந்த செய்தியை அறிகிறான். சௌரப் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்து செல்கிறான் அமீர். அவர்களோடு நெருங்கி பழக சௌரப் தயங்கும் போது அமீர் பட்டம் வாங்கி வானத்தில் விடுகிறான். ஹாசன் தனக்கு சொல்லி தந்ததை அவன் மகன் சௌரப்புக்கு சொல்லி தருக்கிறான். சௌரப் பட்டத்தை அருக்க, அமீர் எடுத்து செல்ல ஓடும் போது ஹாசன் கூறிய " உனக்காக ஆயிரம் முறை செய்வேன்" ஆமீர் சொல்லுவது போல் படம் முடிகிறது.

கதைகளம் ஆப்கானில் நடப்பது போல் இருந்தாலும் பெரும்பகுதி சீனாவில் உள்ள கஷ்கரில் படமாக்கப்பட்டது.

பதின்ம சிறுவர்கள் ஹாசனை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி எந்த ஆபாசமும் இல்லாமல் இருந்தாலும் பெரும் சர்ச்சை கிளப்பியது.

உலக அரசியல் பார்வையில் தீவிரவாதி நாடு என்று முத்திரை குத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ரஷ்ய உடுருவல், தாலிபான் ஆக்கிரமிப்பு என்று அழகாய் பார்த்த நாடு தற்காலத்தில் மயாணமாய் காட்டும் போது அமீர் கண்களுக்கு மட்டுமல்ல பார்வையாளனுக்கும் வலியை கொடுக்கிறது.

எத்தனையோ வாழ்ந்து இடிந்த வீடுகளில் பல பாலிய வயது கதைகள் ஒலிந்திருக்கிறது. அமீர் கதாப்பாத்திரம் நினைத்து பார்க்கும் நேரமில்லாமல் இன்னும் பலர் வாழ்ந்துக் கொண்டுயிருக்கிறார்கள்.

Thursday, November 4, 2010

ஹைக்கூ கவிதைகள்

தங்கத்தில் இருந்து
வெள்ளி வந்தது
ஏழையின் வேர்வை !

**

ஓசோனின்
ஓட்டையைப் போல்
ஏழையின் குடை !

**

என்னுள் இருந்து
என்னை ஆட்டிவைக்கிறது
தலைகனம் !

**

ஆணுக்கு இருந்திருந்தால்
பரத்தையை தேடியிருக்க மாட்டான்
கற்பு !

**

நீண்ட தூரம் பயணம்
ஓட்டியவன் கட்டிலில்
அவனை ஓட்டியது பனியில் !

**

நூறு ரூபாய் லஞ்சம்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
சான்றிதழுக்காக !

Tuesday, November 2, 2010

இரண்டு குறும்படங்கள்

நண்பா

பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் போட்டி தான் கதை. யார் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஆரோக்கிய விஷயத்தை வைத்து எடுத்ததை பாராட்டுக்குறியது. இரண்டு சிறுவர்களும் நடிப்பும் க்யூட். இந்த குறும்படத்தில் வரும் குழந்தைகளுக்கான பாடல் நம்மை சிறுவர் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.

பல விருதுகள் “நண்பா” குறும்படத்திற்கு கிடைத்துள்ளது.



தோட்டா... விலை என்ன ?

படத்தின் ஆரம்பக் காட்சியில் Perfume, SAW போன்றா சீரியல் கில்லர்ஸ் படம் போல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துவிட்டு, இறுதி காட்சியில் தன் கருத்தை நச் என்று பதிவு செய்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்த நடிகர் மிக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

Monday, November 1, 2010

உலக சினிமா : Schindler's List

அதிஷ்ட கெட்ட சின்டலெர் எந்த வியாபாரம் தொடங்கினாலும் நஷ்டம் தான். சிமன்ட் பாக்ட்ரி தொடங்கினான். இழுத்து மூடப்பட்டது. விற்பனைக்கு வாங்கிய பொருள் விற்கமுடியவில்லை. அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் பயனில்லை. வியாபாரத்தில் தோல்வி அடைந்த சின்டலெர் சரித்திர பக்கங்களில் மறக்க முடியாத முக்கியமான மனிதர்.இரண்டாம் உலக போர் முடிவில் நாசி கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் தூக்கில் தொங்கியும், துப்பாக்கியில் சுட்டும் சிவப்பு படை தண்டனை வழங்கியுள்ளது. ஆனால், நாசி கட்சியை சேர்ந்த சின்டலெரை ஒன்றும் செய்யவில்லை.



இவர் இறந்த போது யூதர்கள் அவர்கள் கௌரவப்படி மரியாதை செழுத்தினர். நாசி கட்சி சேர்ந்த ஒருவனுக்கு யூதர்கள் மரியாதை செலுத்தினார்கள் என்றால் சின்டலெருக்கு மட்டும் தான். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் பக்கம் இருந்து கொண்டு நாசி படைக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆயிரம் யூதர்களுக்கு மேல் தன் சொந்த பணத்தில் காப்பாற்றியவர். இன்றும் யூதர்கள் அவர் சமாதிக்கு சென்று கௌரவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சின்டலெர் வாழ்க்கையை பற்றிய படம் தான்..... Schindler's List.

இரண்டாம் உலக யுத்தம் (1939) தொடக்கத்தில் படம் தொடங்குகிறது. போலாந்து யூதர்களை இடம் மாற்றம் செய்யப்படும் போது சின்டலெர் போர் ஆயூதங்கள் செய்வதற்காக போலாந்து யூதர்களை வேலை செய்ய வைக்க நாசிப்படையினரிடம் கேட்கிறான். நாசி படையில் தலைமை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சம்மதம் வாங்குகிறான். கைதிகளாக வேலை செய்யும் யூதர்கள் போர் ஆயூதம் செய்ய மிகவும் உதவியாக இருப்பதுப் போல் ஆவணங்கள் தயார் செய்கிறான். இதனால், அவன் பாக்ட்ரியில் இருக்கும் யூதர்கள் மரண முகாமுக்கோ, நாசி படையினரால் கொல்லப்படாமல் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆனால், நாசிப்படையின் எஸ்.எஸ் பிரிவு தலைவனான ஆமான் கோத் சின்டலெர் தொலிற்சாலையில் வேலை செய்ய ஒத்துழைப்பு தராதவர்களை கொல்கிறான். யூதர்களை கொன்றாலும், சின்டலெர் தொலிற்சாலையில் வேலை செய்ய ஆடகள் அனுப்பிக் கொண்டு தான் இருந்தான். அதனால், சின்டலெர் ஒன்று செய்யாதவனாய் நிற்கிறான்.

தன் தொழிற்சாலைக்களில் வேலை செய்பவர்களுக்காக தனியாக முகாம் அமைக்க ஆமான் கோத்துக்கு பணம் கொடுத்து அனுமதி வாங்கிறான். ஆரம்பத்தில் லாபம் சம்பாத்திக்கும் நோக்கம் சின்டலெருக்கு இருந்தாலும் போக போக தன்னால் எத்தனை உயிரை காப்பாற்ற முடியுமோ அவ்வளவு பேரையும் காப்பாற்ற நினைக்கிறான்.

தன் மனத்துக்கு வந்த பெயரை எல்லாம் சொல்லி ஒரு பட்டியல் தயார் செய்து அவர்களை தன் மூகாம் வேலைக்காக அழைத்துச் செல்கிறான். குழந்தைகளை அழைத்து செல்லும் போது சிக்கல் ஏற்ப்பட சின்டலெர் அவர்கள் மூகாமின் ஓறத்தின் படிந்து இருக்கும் அழுக்கு தொடைக்க உதவுவார்கள் என்று சொல்லி அவர்களையும் அழைத்து செல்கிறான். யூத பெண்கள் குளிக்க அறைக்கு செல்லும் போது விஷவாய்வு வருமோ என்று அஞ்சியப்படி சென்றவர்கள், தண்ணிர் வருவதை பார்த்து அவர்களின் பயம் தெளிகிறது.

தனக்காக வேலை செய்யும் யூதர்கள் அடிக்கவோ, துன்புறுத்தவோ, கொலை செய்யவோ கூடாது என்று நாசிப்படகளுக்கு கட்டளைப் போடுகிறான். இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு உயிரும் தன் வேலைக்கு முக்கியம் என்று சொல்கிறான்.

1945 ல் இரண்டாம் உலக யுத்தம் முடியும் போது நாசியின் எஸ்.எஸ் படையினர் சின்டலெரிடம் யூதர்களை கொல்ல சொல்லியும் மறுக்கிறான். சிவப்பு படை நெருங்கி வருவததால், சின்டலெர் தன் குடும்பத்தோடு தப்பிக்க நினைக்கிறான். தன்னால் காப்பாற்றப்பட்டு ஒரு விருந்து கொடுக்கும் போது, யூதர்கள் "சின்டலெர் போர் குற்றவாளி இல்லை" என்று எழுதிய கடிதத்தை கொடுக்கின்றனர்.

"ஒவ்வொரு உயிரை நாம் காப்பாற்றும் போது உலகத்தை காப்பாற்றுகிறோம்" வாசகம் பொருந்திய பரிசும் கொடுக்கிறார்கள். மனைவியுடன் சின்டலெர் காரில் ஏறும் போது இன்னும் பல உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும் என்று சொன்னப்படி செல்கிறான்.

படம் முடியும் போது, அவனால் காப்பாற்ற சின்டலெர் யூதர்கள் உலகம் முழுக்க 6000 பேர்க்கு மேல் வசிக்கிறார்கள் என்பதை குறிப்பது போல் படம் முடிகிறது.

ஆறு கோடி மேல் இறந்த யூதர்களுக்கு இந்த படத்தை சமர்பணம் செய்துயிருக்கிறார் இயக்குனர் சிடிவன் ஸ்பீல்பெர்க். ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஜூராஸிக் பார்க் போன்ற பொழுது போக்கு ஜனரக படங்களை இயக்கிய ஸ்பீல்பெர்க் தன்னால் நல்ல கலைப்படம் கூட எடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து ஆஸ்கர் சின்டலர் தொடங்கிய எந்த தொழிலும் சரியாக அமையவில்லை.யூத சமூகத்தில் இருந்து வந்த நிதி உதவியில் தொடங்கிய வியாபாரமும் இழுத்து முடப்பட்டன. அவரின் வியாபார நண்பர்களும் அவருடன் நட்பை முறித்துக் கொண்டனர். 1969 முதல் கிழக்கு ஜெர்மனி அளித்த பென்ஷன் தொகையில் தன் காலத்தை கலித்தார். இதய நோய் காரணமாக 1974ல் ஆஸ்கர் சின்டலர் இறந்தார். தான் வாழ்க்கையில் தோற்றாலும் தன்னால் முடிந்த உயிரை காப்பாற்றி அவர் பெயரில் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறார் சின்டலெர்.

இலங்கை இராணுவ முகாமில் சின்டலெர் போன்ற மனிதன் இல்லாமல் எத்தனையோ தமிழர்கள் இறந்திருக்கிறார்கள். கோடிப் பேர்களை கொன்றவன் 'சின்டலெர்' போல் தமிழர்களை காப்பாற்றிய ரட்சகன் என்று பவனிவந்துக் கொண்டுயிருக்கிறார். இன்னும் விடியாதா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ஒரு சமூகம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.

பெரிய பெயரில்லாமல் ஒரு சமூகத்தை காப்பாற்றி சாதாரன மனிதனாக இறந்த 'சின்டலெர்' யை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
Related Posts with Thumbnails