
வன்மம், குரோதம், கொடுமை நிறைந்த ஹிட்லரின் மரண மூகாமில் தன் மகனை காப்பாற்ற துடிக்கும் ஒரு யூத தந்தையின் கதை.
வாழ்க்கை அழகாக ரசித்து வாழும் யூத இளைஞன் குய்டூ. அவனால் யாரையும், எந்த சூழ்நிலையிலும் சிரிக்க வைக்க முடியும். அப்படிப்பட்டவன் ஒரு நாள் சைக்கிலில் செல்லும் போது இத்தாலி பெண்ணான டோராவை பார்த்ததும் காதல் கொள்கிறான். டோரா வேறு ஒருவனுடன் நிச்சயமாகியிருந்தாலும், குய்டூ வேடிக்கை செயல்களால் கவரப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் அவனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறாள். அவர்களுக்கு 'ஜோஷூவா' என்ற மகன் பிறக்கிறான்.
சந்தோஷமாக ரசித்து வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் ஹிட்லரின் நாஜி படைகள் நுழைகிறது.பல யூதர்கள் நாஜி படையினர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அதில், குய்டூ, அவன் மகனும் அவர்களால் இழுத்து செல்லப்படுகிறார்கள். நாஜி படையினர் டோராவை அழைத்து செல்ல மறுக்கின்றனர். ஆனால், அவள் தன் கணவன், மகனை விட்டு பிரிய முடியாமல் யூத கைதியாக அவளும் செல்கிறாள்.
ஆண்கள் பிரிவு சிறையில் குய்டுவும், அவன் மகன் ஜோஷ்வாவும், பெண்கள் பிரிவு சிறையில் டோராவும் அடைத்து வைக்கப்படுகின்றனர். நாஜி படை கொடுமையின் நடுவில் தன் பயப்படாமல் இருக்க, " நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, நாம் அனைவரும் டாங்க் வண்டிக்காக போட்டி பொடுகிறோம்" என்று சொல்லி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறான். ரஷ்யப் படை முன்னேறிவரும் சமயத்தில், குய்டூ தன் மகனோடு தப்பி செல்ல முயற்சி செய்கிறான். மகனை ஒரு பெட்டியில் இருக்க சொல்லி விட்டு, அவன் நாஜி படையினரிடம் மாட்டி கொள்கிறான். மகனிடம், "பெட்டியில் இருந்து வெளியே வந்தால், விளையாட்டில் தோல்வியடைந்து விடுவோம்" என்று சொன்னதால், அந்த சிறுவன் தந்தை இழுத்து செல்வதை அரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
குய்டூவை சுட்டு கொள்ள, ரஷ்ய படை வரவால் டோரா தன் மகனோடு சேருகிறாள்.
குய்டூவாக நடித்தவர் ராபர்டோ பெனிங்னி. அவரே கதை, இயக்கம் செய்திருக்கிறார். கொடூரம் நிறைந்த இடத்தில் ஒருவனால் சிரிக்க வைக்க முடியும் என்பதை காட்டி நம் மனதை ஆள்கிறான். இந்த வித்தியாசமான சிந்தனைக்கே அவரை எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
முதல் பாதியில் அழகான தேவதையாகவும், இரண்டாவது கைதியுடையிலும் 'Nicoletta Braschi'. கணவன், மகன் பிரிந்த சோகத்தை கண்களே காட்டி நடித்திருக்கிறார்.
ஜோஷ்வா வரும் சிறுவன் அழகாகவும் இருக்கிறான். தந்தை சொல்லும் எல்லாம் பொய்யையும் அப்படியே நம்பும் போது நம் கண்கள் நம்மை அறியாமல் கலங்குகிறது.
அழகான முதல் பாதியை 'யூத்' படத்தில் இவ்வளவு கேவலமாக எடுதிருக்கிறார்களா என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா எந்த நல்ல படத்தை விட்டு வைத்திருகிறது.
இத்தாலி மொழியில் வெளிவந்து பல உலக மொழிகளிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட படம்.
ஹிட்லர் நாஜி படையெடுப்பை வைத்து எத்தனையோ படங்கள் வந்து விட்டது. ஆனால், இந்திய சுதந்திர காலத்தை மையமாக வைத்து ஏன் ஒரு நல்ல படம் தமிழ் சினிமா எடுத்தால் தான் என்ன...??
4 comments:
நல்ல அறிமுகம் குகன். நான் இந்த படம் பார்த்திருக்கிறேன்!! நானும் பல காட்சிகளில் கண் கலங்கி விட்டேன்..எல்லாரும் பார்க்க வேண்டிய படம்..
தமிழ் சினிமா பற்றி...என்னத்த சொல்லறது..
அருமையான படம். பகிர்விற்கும் நன்றி.
ஒரு நல்ல படம் தமிழ் சினிமா எடுத்தால் தான் என்ன...??///////
டிசம்பர் 18 வரை பொறுத்திருங்க குகன்.
உலக சினிமாவின் உதாரணம் இந்த படம்...அத எடுத்து எழுதிருக்கீங்க...ரொம்ப சந்தோசம்...தொடர்ந்து எழுதுங்க...
I just love this movie. Thanks for writing about this.
Post a Comment