
(வடிவேலு பார்த்திபனை இன்டர்வியூவில் கேள்வி கேட்கிறார்)
வடிவேலு : முதல் கேள்வி ஆபில், வாழைப்பழம், திராட்சை இதுல எது இனிபாஇருக்கும்?
பார்த்திபன்: எதுமே இனிப்பு கிடையாது... எல்லாமே பழங்கள் தான்.
வடிவேலு : ரொம்ப புத்திசாலி....
வடிவேலு : நான் உங்க கிட்ட பத்து சுலபமான கேள்வி கேக்கட்டா ? இல்ல ஒரு கஷ்டமான கேள்வி கேக்கட்டா ? யோசிச்சு சொல்லுங்க...
பார்த்திபன்: கஷ்டமான ஒரு கேள்வியே கேளுங்க...
வடிவேலு : நல்ல யோசிங்க... கேள்வி ரொம்ப கஷ்டமானது...
பார்த்திபன்: (கேள்வி கேக்குறது நீ தானே... கேனத்தனமா கேப்ப கேளு)... கேளுங்க சார்...
வடிவேலு : எது முதல வரும்.... இரவு இல்ல பகலா...?
பார்த்திபன்: (அட மடையா) ....ம்ம்ம்... பகல் சார்...
வடிவேலு : எப்படி சொல்லுறீங்க ?
பார்த்திபன்: நீங்க ஒரு கஷ்டமான கேள்வி தா கேட்பேனு சொன்னுனீங்க....ரெண்டவது கேள்வி கேக்குறீங்க...
வடிவேலு : ( அஆ... மடகிட்டானே ! ) உனக்கு இங்க வேலை இல்ல...
பார்த்திபன்: வேலை இல்லன பரவாயில்ல... மாசமான சம்பளம் தாங்க....
வடிவேலு : ஐயோ.... உனக்கு வேலையே கிடையாது
பார்த்திபன்: சரி சார்.... நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் வேலையே செய்யமாட்டேன். எப்போ ஆபாய்ண்ட் மென்ட் ஆர்டர் எப்ப தருவீங்க....
வடிவேலு : ???
*****
(வடிவேலு உடம்பு குறைக்க ஜிம்முக்கு போய் ஜிம் மாஸ்டர் பார்த்திபன் கிட்டஐடியா கேக்குறாரு )
வடிவேலு : நான் உடம்பு குறைக்கனும்...
பார்த்திபன் : உடம்பு குறைக்காது.. நாய் தான் குறைக்கும்
வடிவேலு : நா அத சொல்லல்ல... உடம்பு இலைச்சு சிம்ரன் மாதிரி சிலிம்மா இருக்கனும்...
பார்த்திபன் : எவ்வளவு கிலோ இலைக்கணும்... 5 கிலோவா..10 கிலோவா...
வடிவேலு : 5 கிலோ இலைக்கணும்
பார்த்திபன் : கவலையே படாத.. மரத்த இலைக்கிர மாதிரி இலைசிடுறோம்..
வடிவேலு : ஏய்.... எஃஸ்ஸைஸ் பண்ணி உடம்ப இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா உள்ளே போ...
வடிவேலு : ( என்ன இவன் தைரியமா உள்ளே போ சொல்லுறான்... எதாவச்சு ஆப்பு வைக்க போறானா...)
வடிவேலு உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகான பெண் நின்றுக்கொண்டுஇருந்தாள்.
அழகான பெண் : நீ என்னை பிடிச்சா... நான் உனக்கு தான்.
அந்த பெண் ஒட...வடிவேலு அவளை துறத்தி ஒடினான்.
வடிவேலு : ச்சே... ரொம்ப கிட்ட பொய்ட்டேன்... இன்னும் கொஞ்சம் வேகமா ஓடியிருந்தா.. அவளை பிடிச்சிருப்பேன்.
பார்த்திபன் : என்ன... உடம்புள... 5 கிலோ குறைஞ்சதா...!
வடிவேலு : ஆ.....இப்போ நான் 10 கிலோ உடம்பு இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா உள்ளே போ...
வடிவேலு : ( பொண்ண பிடிக்கிறதுக்கு எது தைரியம்....வேகம் இருந்தா போதும்...இப்போ எப்படியும் அந்த போண்ண பிடிச்சிடனும் )
வடிவேலு உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய சிங்கம் நின்றுக்கொண்டு இருந்தது.
பார்த்திபன் : இப்போ... அந்த சிங்கம் உன்ன பிடிச்சா... நீ அந்த சிங்கத்துக்கு தான்...
வடிவேலு : ஐயோ.... வழக்கம் போல ஆப்பு வச்சிடானே....
*****
(பாத்திபன் - மளிகை கடையில் வேலை செய்றான். வடிவேலு வாங்க வராரு....)
வடிவேலு : அரை கிலோ சக்கர கொடு...
பாத்திபன் : அரை கிலோ எல்லாம் வராது... ஒரு கிலோக்கு தான் சக்கர கிடைக்கும்
வடிவேலு : அதெல்லாம் முடியாது... எனக்கு அரை கிலோ தான் வேணும்....
பாத்திபன் : இரு முதலாளிக்கிட்ட பேசிட்டு வரேன்..
வடிவேலு : சரி போய்ட்டு.. சிக்கரம் வந்து அரை கிலோ சக்கர கட்டு..
பாத்திபன் : முதலாளி.... ஒரு மடையன், முட்டாள் பைய... அரை கிலோ சக்கர தரமாட்டோம்னு சொல்லியும் போகாம அடம் பிடிக்கிறான்....
(பாத்திபன் முதலாளி கிட்ட பேசிட்டு திரும்பும் போது வடிவேலு பின்னாடி நிற்க்கிறான்)
பாத்திபன்: அப்புறம்.... இன்னொரு அரை கிலோ சக்கரையே... இந்த பெரிய மனுஷர் கேட்டாரு...
வடிவேலு : திட்டுரது எல்லாம் திட்டிடு... பெரிய மனுஷனு சொல்லுற... எனக்கு சக்கரையே வேண்டாம்....
பாத்திபன் : அத தான்... தர முடியாது அப்போவே சொல்லிட்டேனே...
வடிவேலு : யோவ் ! இந்த மாதிரி ஆளு வேலைக்கு வச்சா... கடை விளங்குனமாதிரி தான்... அவன வேலைய விட்டு முதல்ல எடு...
பாத்திபன் : அவரால என்ன வேலைய விட்டு அனுப்ப முடியாது...
வடிவேலு : ஏன் ?
பாத்திபன் : ஏன்னா.. நான் இந்த கடை முதலாளி....
4 comments:
நல்ல நகைச்சுவை. உடல் இளைத்தல் காமெடி நல்ல சிரிப்பு :))))
சிரிக்க வச்சிட்டீங்க குகன்!
Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net
நன்றி சென்ஷி, ஜெகநாதன் :-)
Post a Comment