Wednesday, December 31, 2008

குண்டக்க மண்டக்க – 17

கோபப்பட்டேன் ஜெயில்ல போட்டாங்க !

இன்று கணிணித்துறையில் பலருக்கு வேலை பாதுகாப்பு இல்லை. முன்பெல்லாம் அதிக சம்பளத்திற்காக ஆறு மாதம் ஒரு முறை வேலையை விட்டு மாறுவார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்தாலும், யார் வேலை கொடுக்கிறார்கள். எல்லா இடங்களிலும் வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இதை பற்றி எல்லாம் யோசிக்காமல் வடிவேலு தன் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்று வேறொரு நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூ செல்கிறார். வடிவேலுவின் நேரம் இன்டர்வியூ பெனலில் அமர்ந்திருப்பவர் பார்த்திபன். பார்த்திபனை பார்த்ததும் தன் தலையில் ஆயிரம் வாலா பட்டாசு கொலுத்திப் போட்டது போல் இருந்தது.

பார்த்திபன் அறையில் கால் வைத்த பிறகு திரும்பி சென்று விடலாமா சென்று கூட நினைத்தார். ஆனால், அவரால் முடியவில்லை.

பார்த்திபன் : உள்ள வாப்பா... வெட்கப்படாத...
வடிவேலு : (உன்ன பார்த்த வெட்கமடா வரும்...? பயம் தான் வருது)

( பார்த்திபன் வடிவேலுவை இன்டர்வியூவில் கேள்வி கேட்கிறார். )

பார்த்திபன் : இன்டர்வியூக்கு...ஏன் லேட்டு...?
வடிவேலு : சாரி.... லிப்ட் 2 மணி நேரம் நின்னு போச்சு...

பார்த்திபன் : எனக்கு கூட தான்... எஸ்கலெட்டர் நின்னு போச்சு.... நான் ஆபிஸ்க்கு கரேக்ட்டா வரல...
வடிவேலு : &$%... (முதல் கேள்விலேயே ஆரம்பிச்சிட்டானே...)

பார்த்திபன்: இன்டர்வியூவுக்கு லேட்டா வர நீ... வேல சேர்ந்தது அப்புறம் எப்படி கரேக்ட்டா வருவ..
வடிவேலு : அப்பாடா... வேலை கிடையாத ( இந்த இடத்த விட்டு காலிப்பண்ணா போதும்.)

பார்த்திபன்: அப்படி நா சொல்லவே இல்ல. என் கேள்விக்கு பதில் சொன்னா வேலை கண்டிப்பா உண்டு.

வடிவேலு : இந்த கொடுமை வேற இருக்க... (மனதுக்குள்) இவன் கேக்குற கேள்விக்கு தப்பு தப்பா பதில் சொல்லனும். வேல மட்டும் கிடைச்சா தினமும் இவன பார்க்க வேண்டியது வரும்.

பார்த்திபன்: கேள்வி கேக்கட்டா....
வடிவேலு : ஆ... கேளுங்க..

பார்த்திபன்: நீங்க யாரு ?
வடிவேலு : (பேரு தெரியாம தான் இன்டர்வியூக்கு கூப்பிட்ட...) என் பேரு வடிவேலு...

பார்த்திபன்: அது உங்க பேரு...நீங்க யாரு ?
வடிவேலு : நான் இதுக்கு முன்னாடி.... சாப்ட்வேர் கம்பனியில வேலை செஞ்சேன்...




பார்த்திபன்: அது உங்களுடைய வேலை... நீங்க யாரு...?
வடிவேலு : ஐயோ... ஏன் சார் என்ன பார்த்தா உங்களுக்கு புடிக்கலையா.... வேலை இல்லனா இல்லனு சொல்லுங்க... இப்படி ஏன் சார் டார்ச்சர் பண்ணி கேள்வி கேக்குறிங்க...

பார்த்திபன்: சரி... அத விடுங்க... கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் ஆகுறாதுக்கு அப்படி கேள்வி கேட்டென்..
வடிவேலு : (இவ ரிலாக்ஸ் ஆக நான் தான் மாட்டுனே பொலிருக்கு )

பார்த்திபன்: முதல் கேள்வி...
வடிவேலு : ….

பார்த்திபன்: லாரிக்காரன் ஒருத்தன் ஒன் வேல போறான். ஆனா போலீஸ் ஒன்னுமே கேக்கல
வடிவேலு : ஏன் ???
பார்த்திபன்: ஏன்னா, அவன் நடந்து போறான்
வடிவேலு : சு..சு... இப்போவே கண்ணு கட்டுதே..

பார்த்திபன்: ஒரு அழகான பொண்ண நீ காதலிக்கிற...
வடிவேலு : அந்த பொண்ணு என்ன காதலிச்சாளா...

பார்த்திபன்: உன்ன ஏவ காதலிப்பா...அவசரப்படாம கேள்விய கேளு... அவக்கிட்ட உன் காதல சொல்லப்போர... அடிவாங்காம்ம எப்படி சொல்லுவ.. ?
வடிவேலு : போறவன்...வரவன் எல்லாம் என்ன அடிக்கிறான்.... அழகான பொண்ணுக்கிட்ட நான் காதலிக்கிறேனு சொன்னா அடிக்காமலா இருப்பா...!

பார்த்திபன்: நான் உன் கிட்ட கேள்வி கேட்கனும்... நீ கேக்க கூடாது....
வடிவேலு : நேரா போய்... ஐ லவ் யூ... சொல்லுவேன்...

பார்த்திபன்: செருப்பால அடிப்பா... வேற எப்படி சொல்லுவ...
வடிவேலு : லவ் லெட்டர் கொடுப்பேன்...

பார்த்திபன்: அண்ணன குடிகிட்டு வந்து கைய வெட்டுவா... வேற எப்படி சொல்லுவ...
வடிவேலு : ( இவன் என்கிட்ட இன்டர்வியூ கேள்வி கேட்குறானா... ஐடியா கேட்குறானா...) மனதில் நினைத்துக் கொண்டான்.

பார்த்திபன்: ஐடியா கேட்குறா வச்சுகொயேன்...
வடிவேலு : (அ..ஆ... மனசில நினைச்சத அப்படியெ சொல்லுறான்... பேசாம தெரியலனு சொல்லுவோம்) தெரியல சார்..

பார்த்திபன்: உன் லவ் ஒரு பொண்ணு கிட்ட கூட சொல்ல தெரியல... நீ எப்படி எங்க கம்பேனி சாப்ட்வேர் பத்தி க்ளைன்ட் கிட்ட சொல்ல போற…?
வடிவேலு : சரி... நீங்க எப்படி சொல்லுவிங்க...

பார்த்திபன்: துடுப்பு இருக்குர போட்டுல அந்த பொண்ண கூட்டிகிட்டு போய்... நடு கடலுல ... ஐ லவ் யூ சொல்லி... ஒத்துக்கலைனா.... துடுப்ப கிழப் போட்டுடுவேனு சொல்லுவேன்...
வடிவேலு : ??? ... ( ஏன் நேரமே சரியில்ல..)

பார்த்திபன்: அடுத்த கேள்வி...
வடிவேலு : (என்ன விட்டா இப்படியே ஓடுவேன்...)

பார்த்திபன் : ஒரு பொண்ணு வீட்டுக்கு லேட்டா போறா... அப்போ அப்பா "ஏன் லேட்டு கேக்குறாரு... அம்மா "ஒய் யூ ஆர் லேட்" கேக்குறாங்க... அண்ணன் "தும் லேட் க்ய கரும்" கேக்குறான்... அக்கா "எந்துக்கு லேட்டுக ஒச்சவு" கேக்குறா... ஏன் ஆழுக்கு ஒரு பாஷையில பேசுறாங்க...?
வடிவேலு : அந்த பொண்ணுக்கு எல்லா பாஷை தெரியும்...

பார்த்திபன்: ஒரு பொண்ணு லேட்ட வந்தா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க.
வடிவேலு : ச்..ச்... முடியல...

பார்த்திபன்: ஆமா.... இன்னும் இன்டர்வியூ முடியல... அடுத்த கேள்வி... STD க்கு எதிர் மறை என்ன?
வடிவேலு : (அழுதுக்கொண்டே) தெரியல...

பார்த்திபன்: No coffee da.
வடிவேலு : அடி செருப்பால நாயே... செல்போன்ல வர சர்தார் ஜோக், கடி ஜோக் எல்லாம் இன்டர்வியூவில கேள்வி கேக்குற... நீ பண்ணுற டார்சருக்கு உன்ன கொன்னா கூட தப்பில்ல..

பார்த்திபன் இதுவரைக்கு பல முறை டார்ச்சர் கொடுத்தாலும் வடிவேலு கோபப்பட்டதில்லை. முதல் முறையாக தன் வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி தீர்த்துவிட்டார் வடிவேலு. பார்த்திபன் எதுவும் பேசாமல் அமைதியாக வடிவேலு திட்டுவதை கேட்டு கொண்டு இருந்தார்.

வடிவேலு பார்த்திபனை மன தார திட்டிய திருப்தியுடன் அறை கதவை திறந்து வெளியே வர அந்த கம்பெனியின் பாதுகாவலர்கள் வடிவேலுவை பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கின்றனர். வடிவேலு பார்த்திபனை திட்டும் போது தன் செல்போன் மூலம் பாதுகாவலர்களை அழைத்து, வடிவேலு திட்டுவதை கேட்ட வைத்தார்.

வேலை கிடைக்காததால் கம்பேனி மேனேஜரை தர குறைவாக பேசிய குற்றத்திற்காக போலீஸ் வடிவேலுவை கைது செய்தனர்.

ஜெயில் செல்லுக்குள்...

வடிவேலு : பேசாம கொடுக்குற சம்பளத்துல பழைய கம்பேனியில வேலை செஞ்சிட்டு இருந்திருக்கலாம். அதிக சம்பளத்துக்கு ஆசப்பட்டு இருக்குற வேலையும் போச்சு... ஜெயில்ல போட்டுட்டானே..

Tuesday, December 30, 2008

"'குண்டு' குரு - 'மண்டு' மதன்" அறிமுகம் - புது நகைச்சுவை தொடர்

‘குண்டக்க – மண்டக்க’ நகைச்சுவை தொடரை படித்த பலர் என்னை இருந்தார்கள். அதில் கூறிப்பாக ‘ராஜ்’ அவர்களை சொல்ல வேண்டும். தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வைத்து எழுதுங்கள் என்று கூறினார். அவரை போல் இன்னும் ஒரு சிலர் இதே அறிவுரை கூறினார்கள். சமிபத்தில் பதிவர் சந்திப்பில் கூட ‘கேபிள் சங்கர்’ அவர்கள் என் நகைச்சுவை தொடரை பாராட்டி, தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் பற்றி கூறியிருந்தார். அதனால், ‘குண்டக்க மண்டக்க’ தொடரை இன்னும் ஒரு கதையோடு முடித்துக் கொண்டு, புதிய நகைச்சுவை தொடராக 'குண்டு' குரு - 'மண்டு' மதன் தொடரை எழுதலாம் என்று இருக்கிறேன். (குண்டக்க மண்டக்க போல் கோர்வையாக இருப்பதால் குண்டு - மண்டு என்று தேர்ந்தெடுத்தேன்)

'குண்டு' குரு - 'மண்டு' மதன் இதற்கு முன் யாரவாது பயன் படுத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

'லாரன் - ஹார்டி' கதாப்பாத்திரங்கள் போல் இந்த இரண்டு பாத்திரம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ( பேராசையில்) 'குண்டு - மண்டு' என்று வைத்தேன். எழுத தொடங்கும் போதே பெரிய அளவில் யோசிக்கிறேன். தவறில்லை. அப்போது தான் ஒரளவாவது வெற்றி கிடைக்கும்.
இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். என்னென்றால், அது எனக்கே தெரியாது. 'குரு' குண்டாய் இருப்பான். கொஞ்சம் புத்திசாலி. 'மதன்' ஒல்லியாக இருப்பான். சரியான மடையன். அவ்வளவு தான் இப்போதைக்கு. கார்டூன் மதன், மதி, மருது போன்றவர்கள் இந்த பாத்திரங்களை வரைந்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். (ஓவர பேசுர ... இங்கையே நிறுத்திக்கோ... குகன்)

கதைக்கு ஏற்றவாரு... இவர்கள் பாத்திரப்படைப்புகள் எப்படி மாற்ற போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நாலு பேரு சிரிக்க வைக்க எதுவுமே தப்பிலே’ என்ற தைரியத்தில் தொடங்குகிறேன்.

'குண்டு' குரு - 'மண்டு' மதன் சிரிக்க வைக்க வருகிறார்கள்.

தாயாகுங்கள்… மன்னிக்கவும் தயாராகுங்கள்.

Monday, December 29, 2008

குண்டக்க மண்டக்க – 16

பரிதாபப்பட்டு பாலாய் போனவன்

பார்த்திபன் வடிவேலுவை வருத்து எடுத்து மேலும் மேலும் கருப்பாக மாறிக்கொண்டே இருந்தார். இருக்கும் நிறத்தை வடிவேலு காப்பாற்றிக் கொள்ள நினைத்தாலும் பார்த்திபன் விடுவதாக இல்லை. ஏதாவது ஒரு உருவத்தில் அசரீரியின் குரல் போல் கண்முன் தோன்றி வடிவேலுவை வம்பில் மாட்டி விடுகிறார். இப்படி தான், வடிவேலு ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகும் திரும்பி வரவேயில்லை. எதோ ஒரு ஆபத்து அவரை அங்கே துறத்திக் கொண்டே இருந்தது. அந்த ஆபத்துக்கு காரணம் 'நம்ப' பார்த்திபன் தான்.

வடிவேலு ஓட பலர் அவரை துறத்தி துறத்தி அடிக்கிறார்கள். ஏன் அவருக்கு மட்டும் அப்படி நடக்க வேண்டும்...? அப்படி என்ன தான் நடந்தது ?

ஒரு சின்ன ப்ளாஷ் பேக்

சில மணி நேரங்களுக்கு முன்பு....

வயது நிறம்ப நான்றாக சாப்பிட்டு, பில்லுக்கு பணம் கொடுத்து ஹோட்டலை விட்டு வெளியே வந்துக் கொண்டு இருந்தார் வடிவேலு. அந்த சமயத்தில் பார்த்திபன் அந்த பக்கமாக வருகிறார். பார்த்திபனை பார்த்த வடிவேலு சாரப்பாம்பு தன் காலை சுற்றி கடிப்பது போல் உணர்ந்தார். பதட்டத்தில் அங்கும், இங்கும் ஓடிபார்த்தார். பலனில்லை. இறுதியில் ஹோட்டலில் இருக்கும் டாய்லேட்டுக்கு சென்று ஒழிந்துக் கொண்டார். பாவம் வடிவேலு...! பார்த்திபன் வடிவேலுவை முன்பே கவனித்து விட்டத்தை தெரியாமல் இருந்தார். வடிவேலு ஒழிந்து இருக்கும் டாய்லட்டுக்கு பக்கத்து டாய்லட்டுக்கு சென்றார்.

இரண்டு டாய்லட்டுமே வெஸ்டன் டாய்லட் என்பதால் இருவரும் அமர்ந்தபடி இருந்தனர். வடிவேலு வந்தால் பிடித்து விடலாம் என்று பார்த்திபனும், பார்த்திபன் சென்ற பிறகு வெளியே வரலாம் என்று வடிவேலுவும் இருந்தனர். கடைசியில் இருவரும் ஒரு மணி நேரமாக வெஸ்டன் டாய்லட்டில் சும்மா இருந்தார்கள். பொறுமை இழந்த பார்த்திபன் பேச தொடங்கினார்.

பார்த்திபன் : ஹொலோ... நீ எங்க போனாலும் உன்ன கண்ணுபிடிச்சிடுவேன் பார்த்தியா....
வடிவேலு: (மனதுக்குள்) பாம்பு மாதிரி என்னையே சுத்துறானே...? (பார்த்திபனிடம்) இப்ப உனக்கு என்னப்பா வேணும் ?

பார்த்திபன் : நீ எப்படி இருக்க...?
வடிவேலு: ( எங்க வந்து என்ன பேசுறான் பாரு...) நல்ல இருக்கேன்.

பார்த்திபன் : வேலை எல்லாம் எப்படி போகுது...?
வடிவேலு: (ச்சே... இதப்பத்தி கேக்குறான்) இப்ப தான் ஆரம்பிச்சேன்... நல்ல தான் போய்ட்டு இருக்கு..

பார்த்திபன் : சரி...இப்ப நா அங்க வரட்டும்மா...
வடிவேலு: (ஐயோ...கருமம்...கருமம்.. இரண்டு பேரும் ஒண்ணா செய்யுற வேலையா இது..) இங்க ஹவுஸ்புல்லு... யாரும் வரமுடியாது... (சின்ன புள்ள தனமா இருக்கு..)

பார்த்திபன் : நா போன வச்சிடுறேன். பக்கத்து டாய்லேட்டுல் இருக்குறாவன் உன்கிட்ட பேசுறது எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்கான்...
வடிவேலு: (அடபாவி சண்டாளா... போன்லையா பேசுற... என்ன பேசவச்சு. இப்படி ஒரு பல்பு கொடுத்திட்டானே..)

மெதுவாக டாய்லேட்டில் இருந்து வடிவேலு வெளியே வர, பார்த்திபனும் வெளியே வருகிறார். பார்த்திபன் கையில் போன் இல்லை. வடிவேலுவை வெளியே வர வைக்க பார்த்திபனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று.

பார்த்திபன் : என்ன வடிவேலு ! நல்ல சாப்பிட்டியா...
வடிவேலு: டாய்... வாயில ஏதாவது வந்திடபோவுது..

பார்த்திபன் : அடபாவி... உனக்கு வாயுல வரும். எல்லாரும் வேற இடத்துல தானே வரும்
வடிவேலு : (இவன் தொல்ல தாங்க முடியல்ல...) எந்த இடத்துக்கு வந்து… என்ன கேள்வி கேக்குற...?

பார்த்திபன் : ஹோட்டல்ல வந்து சாப்பிடியா கேக்காம...என்ன கேப்பாங்க..?
வடிவேலு: வெளியே வந்து கேளு... டாய்லட்டு சாப்ட்டியா கேட்டா... என்ன அர்..( வேணாம்டா அவன் கிட்ட அதிகம் பேசாத வம்பா போய்ட்டும்)

பார்த்திபன் : என்னவோ சொல்லவந்த சொல்லு...
வடிவேலு: ஒண்ணுமில்ல...
என்று கூறிய படி தன் கையை கழுவி விட்டு டிஷ்யூ பேப்பரில் கையை துடைத்துக் கொண்டு இருந்தார். பார்த்திபன் கை கழுவாமல் அப்படியே வடிவேலுவை பார்த்திருந்தார்.

வடிவேலு: என்னப்பா... 'அது' போய்ட்டு கை கழுவாம இருக்க...
பார்த்திபன் : 'அத' டாய்லட்டுல தான் போனேன். அப்ப எதுக்கு கை கழுவனும்

வடிவேலு: வ்வே..(வாந்தி எடுப்பது போல்) இவன் கிட்ட எதுவும் பேசக்கூடாது..
பார்த்திபன் : வா வடிவேலு... சாப்பிட்டு போவோம்

வடிவேலு: நா சாப்பிட்டாச்சி... நீ போ ! நா உன்ன அப்புறம் பாக்குறேன்.
வடிவேலு அந்த இடத்தை விட்டு நழு பார்த்தார். ஆனால், சிறிது நேரம் யோசித்த பார்த்திபன்....

பார்த்திபன் : உன் கிட்ட.. சொல்லுறதுக்கு என்ன..? என் கிட்ட பணம் இல்ல வடிவேலு... நான் சாப்பிடுறதுக்கு பில் கட்டுறியா...
வடிவேலு: (பரிதாபமாக) என்னப்பா அவ்வளவு கஷ்டத்துலையா இருக்க...

பார்த்திபன் : ஆமாப்பா... வேலைய விட்டு அனுப்புசிட்டாங்க.. எனக்கு உன்ன விட்டா யார தெரியும்... (சிவாஜி போல் கண்கலங்க...)
வடிவேலு: நீ அழுகாத... எனக்கு கஷ்டமா இருக்கு. நீ எதோ விளையாடு நினைச்சி பேசிட்டேன். உனக்கு உதவாம யாருக்கு உதவப்போறேன். நீ எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடு நா பணம் தரேன்.

பார்த்திபன் : ரொம்ப.. நன்றிப்பா...
வடிவேலு: நம்மக்குள்ள நன்றி எதுக்கு ? ( இவன் கண் கலங்க வச்சிருக்கானே தவிர.. இப்ப தான் இவன் கண் கலங்கி நான் பார்க்குறேன்)

பார்த்திபன் சாப்பிட உள்ளே செல்ல, வடிவேலு வெளியே நின்றுக் கொண்டு இருந்தார். அறை மணி நேரம் கழித்து ஒரு சர்வர் வடிவேலுவிடம்

சர்வர் : ஒருத்தர் உள்ள சாப்பிட்டாரே அவர் பில்லுக்கு நீங்க கட்ட போறீங்க..
வடிவேலு: ஆமா...

சர்வர் : இந்தாங்க ( பில்லை காட்டினார்)
வடிவேலு: என்னது பத்தாயிரமா... என்னால முடியாது... ? உள்ள சாப்பிடுறவன் கிட்ட வாங்கிக்கோ...
பார்த்திபன் அங்கு இல்லை. எப்போதோ 'எஸ்' (எஸ்கேப்) ஆகிவிட்டார்.

சர்வர் : நூறு பேருக்கு பார்சல் கொடுத்திருக்கேன்... பணம் கொடுக்குறீயா... இல்ல.. ஜென்மத்து இந்த ஹோட்டல்ல மாவு ஆட்டுறியா..
வடிவேலு: அடபாவி... அவன் அழும் போதே கொஞ்சம் உஷாரா இருந்திருக்கனும். பத்தாயிரத்துக்கு ஜென்மம் முழுக்க வேலை செய்ய சொல்லுறானே... (வ்வ்வ்வ்வ்வ்...)

வடிவேலு பில் கட்டாமல் ஓட பலர் அவரை துறத்திக் கொண்டு இருந்தார்கள்.

இது தான் நடந்தது.

(ப்ளாஷ் பேக் ஓவர்...)

Thursday, December 18, 2008

குண்டக்க மண்டக்க – 15

கம்ப்யூட்டர் வாங்க வந்த கருப்பன்

பார்த்திபன் கவிதை எழுதுவார் என்பது உலகம் அறிந்த விஷயம். ஆனால், இது வரை தனது கவிதையை காகிதங்களில் மட்டுமே எழுதினார். தனக்கென்று ஒரு ‘Blog’ உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தார். ‘Blog’ உருவாக்கும் முன்பு தனக்கு சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வேண்டும் என்பதை பார்த்திபனுக்கு தோன்றியது. புது கம்ப்யூட்டர் வாங்க பார்த்திபன் ஒரு கம்ப்யூட்டர் கடைக்குள் செல்கிறார். மிக குழப்பமான ஸர்கியூட்டில் செய்யப்பட்ட வடிவேலுவின் தலையெழுத்து அங்கு வேலை செய்தது. அந்த கம்ப்யூட்டர் கடையின் முதலாளி நம்ம 'வடிவேலு' தான். அதுவரை கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்று இருந்த பார்த்திபன் வடிவேலுவை பார்த்ததும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.

பார்த்திபன் : என்ன வடிவேலு ? எப்படி இருக்க ?
வடிவேலு : அடபாவி.. இங்கையும் வந்திட்டியா..! போன ஜென்மத்துல நாயா பொறந்தியா.. என்ன மோப்பம் புடிச்சு தொரத்துர...

பார்த்திபன் : போன ஜென்மத்துல நாயா பொறந்தா... இப்ப எப்படி மோப்பம் புடிக்க முடியும்.
வடிவேலு : வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா...!!

பார்த்திபன் : சரி... கொஞ்சம் நேரம் களிச்சு ஆரம்பிக்கட்டா
வடிவேலு : ஐய்யோ...ஐய்யோ... உனக்கு பயந்து எத்தன ஊருக்கு தான் மாறது.. என்ன ஏன் கொல்லுர...

பார்த்திபன் : இது வரைக்கு கொல பண்ணணும் எண்ணம் இல்லம்.. உன்ன கொல பண்ணணும்னா சொல்லு... பண்ணுறேன்
வடிவேலு : அது தான் பாக்கி... அதையும் செஞ்சிடு.. நிம்மதியா போய் சேர்ந்திடுறேன்.

பார்த்திபன் : ஏன் விரக்தியா பேசுற ?
வடிவேலு : இது வரைக்கும் சந்தோஷமா தான் இருந்தேன். நீ வந்ததுக்கு அப்புறம் தான் இப்படி ஆயிட்டேன்.

பார்த்திபன் : முதல் முதல்ல கம்ப்யூட்டர் வாங்கனும்னு வந்த என்ன... இப்படி பேசி கஷ்டப்படுத்துறீயே...
வடிவேலு : கம்ப்யூட்டர் வாங்க வந்தியா.. ஸாரிப்பா. உனக்கு புடிச்ச கம்ப்யூட்டரை எடுத்துக்கோ..

பார்த்திபன் : ப்ரியாவா....?
வடிவேலு : ( முறைத்தவாரு..) என்ன நக்கலா..!

பார்த்திபன் : சரி... டென்ஷன் ஆகாத...நான் பணம் கொடுத்து வாங்குறேன். எந்த கம்பேனி கம்ப்யூட்டர் வச்சிருக்க...
வடிவேலு : HCL, Compaq, Intel... எல்லா பிராண்ட் கம்ப்யூட்டர் நமக்கிட்ட இருக்கு...

பார்த்திபன் : எல்லா பிராண்டும் இருக்கா...?
வடிவேலு : உலகத்துல இருக்குற எல்லா பிராண்டு என் கிட்ட இருக்கு...

பார்த்திபன் : அப்படியா... Ranbaxy பிராண்டு இருக்கா..
வடிவேலு : யோவ்... அது மருந்து கம்பேனி பிராண்ட்யா...

பார்த்திபன் : நீ தான்... எல்லா பிராண்ட் கம்ப்யூட்டரும் இருக்குனு சொன்ன...
வடிவேலு : ஒரு முடிவோட தான் வந்திருக்க...

பார்த்திபன் : சரி.. கம்ப்யூட்டர் வாங்குனா என்ன யூஸ்னு சொல்லு..
வடிவேலு : நம்ப வேலையில பாதி குறையும்.

பார்த்திபன் : அப்படியா... எனக்கு இரண்டு கம்ப்யூட்டர் கொடு. என்னோட எல்லா வேலையும் அது பாத்திருக்கும்ல..
வடிவேலு : ச்ச்ச்ச்சு.....

பார்த்திபன் : என்ன கேஸ் ப்ராப்ளமா...?
வடிவேலு : ஏய்.. கம்ப்யூட்டர நீ ஆப்ரேட் பண்ண தான் உன் பாதி வேல குறையும்... இரண்டு கம்ப்யூட்டர் உன் வேலைய பாக்காது....

பார்த்திபன் : அப்போ... கம்ப்யூட்டரே வாங்கலன்னா.. அந்த பாதி வேலைக் கூட செய்ய வேண்டியது இல்ல...
வடிவேலு : கம்ப்யூட்டர் வேண்டாம்னா வெளியே போடா... மனுஷன பேசியே சாகடிக்காத.

பார்த்திபன் : ஏன் இவ்வளவு கோபப்படுற... எனக்கு எந்த பிராண்ட் கம்ப்யூட்டரா இருந்தாலும் பாரவாயில்ல... வீட்டுல வந்து கம்ப்யூட்டர் கொடுத்திரு
வடிவேலு : முதல்ல பணத்த எடு... உன்ன நம்ப முடியாது

பார்த்திபன் : சரி... தரேன்

தன் கையில் இருந்த பணத்தை எடுத்து, அதற்கு Iodex தடவினார்.

வடிவேலு : அதுக்குப்பா... பணத்துக்கு Iodex தடவுற..
பார்த்திபன் : வீட்டுல ரொம்ப வீக்கம்... அதான் Iodex தடவி வீக்கத்த குறைக்குறேன்.

தன் இரண்டு கையை தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். என்ன செய்து பார்த்திபனை கடையை விட்டு துரத்துவது என்று வடிவேலுவுக்கு புரியவில்லை.

வடிவேலு : இந்த நூறு ரூபா... தயவு செஞ்சு இந்த இடத்த விட்ட காலிப்பண்ணு..

பார்த்திபன் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அந்த பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால், அதன்பின்னும் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை.

வடிவேலு : பணம் வாங்கிட்டல்ல... வெளியே போ..
பார்த்திபன் : முடியாது...

வடிவேலு : அப்போ நான் கொடுத்த பணத்த திருப்பி கொடு...

பார்த்திபன் தன் பையில் இருந்து ஒரு ரூபாய் எடுத்துக் கொடுக்கிறார்.

வடிவேலு : என்ன இது ? ரஜினி மாதிரி ஒரு ரூபா கொடுத்தா நூறு ரூபா கொடுத்த மாதிரி சொல்ல போறியா...
பார்த்திபன் : நான் எதுக்கு அடுத்தவன் டையலாக்க காபி அடிக்கனும்?

வடிவேலு : அப்போ எதுக்கு ஒரு ரூபா கொடுத்த...?
பார்த்திபன் : நீ தான் கொடுத்த பணத்த திருப்பி கொடு சொன்ன...

வடிவேலு புரியாமல் விழித்தார்.

பார்த்திபன் : நூறு திருப்பி போடுடா வெண்ண...

ஐந்து நிமிடங்கள் வடிவேலு மௌனமாக இருந்தார். பார்த்திபனை மேலிருந்து கீழ் பார்த்தார்.

வடிவேலு : நீ இப்போ எதுக்கு இங்க வந்திருக்கனு புரிஞ்சு போச்சு.

வடிவேலு கோபமாக தன் கடையை விட்டு வெளியே வந்தார். வடிவேலுவை வெருப்பேற்றிய சந்தோஷத்தில் பார்த்திபனும் கடையை விட்டு வெளியே வந்தார். பார்த்திபனை கோபமாக பார்த்து விட்டு, தன் கடையின் ஷட்டரை போட்டு முடிவிட்டார்.

வடிவேலு : என் கடைய வித்திட்டு ஊர விட்டு போறேன். இப்போ உனக்கு சந்தோஷம்மா...

பார்த்திபன் வடிவேலுவை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்.

வடிவேலு : வந்த வேல முடிஞ்சிடுச்சா... என் கண் முன்ன நிக்காத

பார்த்திபன் : அப்போ உக்காந்து பேசலாம்மா...
வடிவேலு : நானே இந்த இடத்த விட்டு போரேன்...

வடிவேலு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

வடிவேலு : (மனதுக்குள்) எப்படி எல்லாம் டெக்னிக் யூஸ் பண்ணி கடைய காலி பண்ண வைக்கிறானே...

சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்

பிரபல கார்ப்ரேட் நிறுவனம் ஒரு நடிகனுக்கு பத்து கோடி சம்பளம் கொடுத்து பெரிய அளவில் படம் தயாரிக்கிறார்கள். அந்த படமும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு அந்த நடிகனின் சம்பளம் பத்து கோடியாக மாறிவிடுகிறது. சிறு தயாரிப்பாளர்கள் அந்த நடிகனிடம் நெருங்க கூட முடியாது. இப்படி ஒவ்வொரு நடிகனின் சம்பளம் கார்ப்பேரட் நிறுவனத்தின் உதவியால் சம்பளம் உயர்வதை பார்த்த சிறு தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலை வருகிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் போட்டி போடாமல் ஒதுங்கி விடுகிறார்கள். சில வருடங்கள் பிறகு அந்த நடிகனை வைத்து தயாரித்த கார்ப்ரேட் நிறுவனத்தின் படங்கள் தோல்வி அடைகின்றன. அந்த கார்ப்ரேட் நிறுவனம் தயாரிப்பு செலவை குறைக்க நடிகனின் சம்பளத்தை குறைக்கிறார்கள். அந்த நடிகன் தன் சம்பளத்தை பத்து கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க மனமில்லை. அதனால், அந்த கார்ப்ரேட் நிறுவனம் புதுமுகங்களையும், குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர்களும் அந்த நடிகனின் சம்பளத்தை பார்த்து அவரை நெருங்குவதில்லை. இனி திரையுலகில் அவர் நீடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகன் தன் சம்பளத்தை குறைத்தாக வேண்டும். அது தான் அவனுக்கு இருக்கும் ஒரே வழி. இப்போது இருக்கும் மென்பொருள் பொறியியலாளர்களின் நிலைமையும் அதுவே !

மேலே குறிப்பிட்டுள்ள நடிகனின் சம்பளம் ஏற்றமும், இறக்கமும் காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் இப்படி ஒரு வீழ்ச்சியை சந்திப்பது இரண்டாவது முறை. (ஒரு சில இளைய பொறியியலாளர்களுக்கு 2000,2001 ஆண்டில் இப்படி ஒரு வீழ்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை). பல கார்ப்ரேட் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இளசுகளுக்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்தனர். அதிக பணம் வருவதால் கார், வீடு, மனை என்று வங்கி கடன் மூலம் வாங்கிவிட்டனர். இப்பொது இருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் எந்த நிறுவனத்தாலும் அதிக சம்பளம் கொடுக்க முடியவில்லை. கொடுக்கும் சம்பளத்தில் வங்கி கடன், செல்வுகளுக்கு போதவில்லை. விளைவு... தற்கொலை.

ஐந்து எண்களில் சம்பளத்தை வாங்கியவர் மீண்டும் நிலைமை சீராகும் வரை நான்கு எண்கள் சம்பளத்தை வாங்க தோன்றுவதில்லை. மனம் சிறு குழந்தையை போல் ஐந்து எண்கள் நாடுவதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் உழியர்களை அனுப்பிவிட்டு குறைவான சம்பளத்தில் குறைந்த தகுதியுள்ளவனை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கிறார்கள். அனுபவமுள்ள ஒருவனுக்கு கொடுக்க படும் சம்பளத்தை ஆறு புதியவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். இது போன்ற சம்பளங்கள் ஒர் இரு நடிகர்களுக்கு நடக்கும் போது பெரிதாக தெரிவதில்லை. ஆனால், ஒட்டு மொத்த மென்பொருள் துறைக்கே இப்படி ஒரு பாதிப்பு வந்ததால் எல்லோருடைய பார்வையும் இதன் மேல் இருக்கிறது.

இந்திய பொருளாதாரமே சரிவை சந்திக்கும் போது மென்பொருள் பொறியியலாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்கப்படும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்கள் வேலை செய்யும் நிறுவங்கள் இயங்க முடியும். இன்னும் பழைய சம்பளத்தை எதிர்பார்த்தால் ஜெட் ஏர்வே, சதியம், டி.சி.எஸ் என்று உழியர்களை வெளியே அனுப்பும் நிறுவனத்தின் பட்டியலிட வேண்டியது தான்.

சரி ! இன்னும் எனக்கு ஐந்து எண் சம்பளம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்பு, சிற்றுண்டி போன்ற கடைகள் வைக்கலாம். கிண்டலாக சொல்லவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மிட்டாய், அடையார் ஆனந்த பவன் ஆரம்பமே சின்ன இனிப்பு கடைதான். சரவண பவன், அஞ்சப்பர் ஆரம்பம் சிற்றுண்டி தான். இவர்கள் வளர்ச்சி அண்ணா எழுதிய 'ஒர் இரவு' போல் வந்து விடவில்லை. இந்த நிலையை தொட அவர்களுக்கு ஒரு தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. இன்று அந்த ஸ்தாபனத்தின் இரண்டவாது, மூன்றாவது தலைமுறையை பார்க்கிறோம்.

அவர்களை போல் களத்தில் இறங்கி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் பலனை அடுத்த தலைமுறை அனுபவிக்கட்டும். இந்த தலைமுறையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள தான் வேண்டும். அதுவும் இல்லை என்றால் மென்பொருள் துறையை விட்டு வெளியே வந்து வேறு துறையில் கொடுக்கும் நியாயமான சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டியது தான். இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நானும் ஐந்து எண்கள் சம்பளம் வாங்கும் (வாங்கிய) மென்பொருள் பொறியியலாளர் தான்.

Wednesday, December 17, 2008

குண்டக்க மண்டக்க – 14

இங்கிலீஷ வருத்து எடுத்தவன்

எவ்வளவு நாளு தான் பார்த்திபன் வடிவேலுவ வருத்து எடுப்பாரு... ஒரு வாட்டி வடிவேலு பார்த்திபன வெலுத்து வாங்குனா எப்படி இருக்கும் ? ம்ம்ம்.... ச்ச்ச யோசிச்சு கூட பார்க்க முடியலைங்க... பார்த்திபன் வடிவேலுவ வருத்து எடுத்தா தான் காமேடி... வடிவேலு பார்த்திபன வருக்கனும்னு நினைச்சு கூட பார்க்க முடியல...? நமக்கு தெரிஞ்ச அளவுக்கு வடிவேலுக்கு தெரியலைங்க....!! என்ன பண்ணுறது சும்மா இருந்த பார்த்திபன வருக்க நினைச்சு, வடிவேலு எப்படி வெந்து போறாருனு பார்ப்போம்.

வடிவேலு - ஆபிஸ் மேனேஜர், பார்த்திபன் - அவருக்கு கீழே வேலை செய்யும் பணியாள்.. அதாங்க ஸ்டாப்.

வடிவேலு : ஹலோ !... என்ன டாக்குமென்ட் டைப் பண்ணியிருக்க...இவ்வளவு மிஸ்டேக்..
பார்த்திபன் : ஸாரி சார்..!

வடிவேலு : நோ..நோ... எனக்கு எந்த விளக்கமும் தேவையில்ல.. ஒழுங்கா இங்கிலீஷ் டைப் பண்ண தெரியுதா...
பார்த்திபன் : ( ஆமா... நீயே... தமிழும், இங்கிலீஷ்யும் சேர்த்து தான் பேசுற..) ஸாரி சார்... இனிமே அப்படி நடக்காது...

வடிவேலு : ஐ டொன்ட் லைக் திஸ்... இந்த டாக்குமென்ட் ஒரே வெஜீவுவா இருக்கு..
பார்த்திபன் : சார்... நீங்க சொல்லுறது..புரியல..

வடிவேலு : வெஜீவுவா இருக்கு...
பார்த்திபன் : புரியல... ஸ்பெல்லிங் சொல்லுங்க...!

வடிவேலு : இங்கிலீஷ் சுத்தமா தெரியாதா... 'VAGUE' வெஜீவு
பார்த்திபன் : சார்... வெஜீவு... இல்ல.. வேக்.. 'UE' சைலன்ட் சார்..

வடிவேலு : (ஒ... தப்பா பேசிட்டோமோ..) ஐ.. நோ ! டொன்ட் புல் வொட்ஸ் பிரம் மை டங்யூ
பார்த்திபன் : சா... டங்யூ...இல்ல.. டங்...' UE' சைலன்ட் சார்..

வடிவேலு : சரி...சரி... ரொம்ப பிரில்லியன்ட் மாதிரி என்கிட்ட 'ஆர்க்' பண்ணாத...
பார்த்திபன் : சார்...

வடிவேலு : ' ARGUE '... ஆர்க்... 'UE' சைலன்ட்..
பார்த்திபன் : போடா... வெண்ணேய்.. உன்கிட்ட வேளை செய்றதுக்கு நான் ஹோட்டல் சர்வரா இருக்கலாம்.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தனக்கு தெரியாத இங்கிலீஷ் வார்த்தைகளை பேசி தன் மற்ற பணியாளர் முன்பு அசடு வழிய வேண்டியதாக இருந்தது. பார்த்திபனும் அந்த அலுவலகத்தை விட்டு சொன்னப்படி ஒரு ஹோட்டலில் சர்வராக இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு...... பஸ் நிலையத்தில்....

வடிவேலு : இந்த ஊர்ல சாப்பாடு எங்க விக்கும்
பார்த்திபன்: எல்லா ஊர்லையும் சாப்பாடு தொண்டைல தான் விக்கும்
வடிவேலு : அடபாவி... நீயா...?
பார்த்திபன் : நானே தான்...

வடிவேலு : இங்க என்ன பண்ணுற...?
பார்த்திபன் :ட்ரெயின்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...

வடிவேலு : யோவ்... இந்த பஸ் ஸ்டான்ட் ஹோட்டல என்ன பண்ணுற...?
பார்த்திபன் : நின்னுகிட்டு இருக்கேன்...

வடிவேலு : ஐய்யோ...ஐய்யோ... வேலையில இருக்கும் போது தொல்ல பண்ண... இப்போவும் தொல்ல பண்ணுறானே...
அங்கு ஒருவர் : யாருப்பா.... இட்லி கொண்டு வாப்பா....

பார்த்திபன் சென்று அந்த நபருக்கு இட்லியை வைக்கிறான்.

வடிவேலு : (சர்வரா... நீ.. இரு உன்ன ஒரு வழி பண்ணுறேன்) எனக்கும் இரண்டு வை...
பார்த்திபன் தன் இரண்டு கையை வடிவேலு முகத்தில் வைத்தார்.

வடிவேலு : ஏய்.. எனக்கு இரண்டு இட்லி வை சொன்னேன்.
பார்த்திபன் : இந்தா இட்லி...

வடிவேலு : என்னப்ப இட்லி ஜில்லுனு இருக்கு
பார்த்திபன்: போர்டுல என்ன எழுதியிருக்கு..

வடிவேலு : ஆரிய பவன்
பார்த்திபன்: அப்புறம் என்ன சூடவா இருக்கும்..

வடிவேலு : ஆரிப்போனத நான் சாப்பிட மாட்டேன்... கூப்பிடு உன் முதலாளிய
பார்த்திபன்: அவரும் ஆரிப்போனத சாப்பிட மாட்டர்

வடிவேலு : ராங்கா பேசுர... பின்னாடி ரொம்ப கஷ்டபடுவ...
பார்த்திபன் : பரவாயில்ல... மொதல்ல.. சாப்பிடுங்க...

வடிவேலு : முடியாது... உன் முதலாளிய கூப்பிடு.. உன்ன வேலைய விட்டு தூக்க சொல்லுறேன்.
பார்த்திபன் : அது உங்களால முடியாதுங்க...

வடிவேலு : ஏன் ???

பார்த்திபன் : நான் தான் இந்த ஹோட்டல் முதலாளி...

வடிவேலு : ( மனதுக்குள்) இந்த தைரியத்துல தான் இப்படி பேசுறீயா... இரு உன்ன வேற மாதிரி படுத்துறேன் (பார்த்திபனிடம்) எனக்கு சூடா இட்லி வேணும்...
பார்த்திபன் : அவ்வளவு தானே, கொடுங்க அந்த இட்லிய கடாய்ல வெகவச்சி கொண்டு வரேன்.

வடிவேலு : எனக்கு இட்லியே வேண்டாம். பொங்கல் கொண்டு வா...
பார்த்திபன் : பொங்கல் ஜனவரி மாசம் தான் வரும். வேற ஏதாவது கொண்டு வரவா...

வடிவேலு : முடியல்ல... (மனதுக்குள்... எத்தன பந்து போட்டாலும் சிக்ஸரா அடிக்குறானே..)

வடிவேலு : ஒரு எலுமிச்சை பழம் ஜூஸ் கொண்டு வா...
பார்த்திபன் : சரி... கொண்டு வரேன்.

கொஞ்ச நேரத்தில் பார்த்திபன் வடிவேலுவுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கிறார்.

வடிவேலு : ஆஹா... பிரமாதம்... பரவாயில்ல நல்லாவே ஜூஸ் போட்டியிருக்க..
பார்த்திபன் : மன்னிச்சிடுங்க...

வடிவேலு : எதுக்கு ?
பார்த்திபன் : எலுமிச்ச பழமில்ல... அதுக்கு பதிலா பாத்ரூம் கழுவ வெச்சிருந்த சிட்ரிக் ஆஸிட் போட்டு கொடுத்திட்டேன்.
வடிவேலு : ஐயோ.... அடபாவி... பின்னாடி நீ வருத்த படுவேன்னு சொன்னத மனசுல வச்சிக்கிட்டு... என்ன பின்னாடி வருத்தப்பட வச்சிட்டியே...

வடிவேலு : எங்க பாத்ரூமு....
பார்த்திபன் : அதோ அங்க இருக்கு...

வடிவேலு பாத்ரூமை நோக்கி ஓடினார்.

பார்த்திபன் : பாத்ரூம் கழுவ வெச்சிருந்த சிட்ரிக் ஆஸிட் வேஸ்ட்டா போச்சே நினைச்சேன். நல்ல வேள பாத்ரூம்க்கு தான் யூஸ் ஆகுது

Monday, December 15, 2008

தமிழ் சினிமா 2008 - ஒரு பார்வை

இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009 ஆம் ஆண்டு நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் கால சக்கரம் அதி வேகமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம் உலக தரத்தை நோக்கி செல்லும் முயற்சியில் ஈடுப்பட தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்று படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்ரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வர தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படம் ஒரே ஆண்டில் வெளிவந்துள்ளது. நடிப்பில் மட்டுமே ரஜினியை ஒவர்டேக் செய்த கமல், இந்த ஆண்டு வசூலிலும் முந்திவிட்டார். கமலின் 'தசாவதாரம்' இந்த ஆண்டு மிக பெரிய வசூல் குவித்த படம் என்று சொல்ல வேண்டும். பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிச்சானை வரவழைத்து உலகின் முழு பார்வையை தமிழ் சினிமா மீது பட வைத்திருக்கிறார். (பாவம் ரவிசந்திரன் ! 'Oscar' என்ற தன் நிறுவனத்தின் பெயரை 'Ascar' என்று மாற்ற வேண்டிய நிலைவந்தது.)

பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய ரஜினியின் 'குசேலன்' படம் பெரிய தோல்வியை தழுவியது. 'பாபா' படத்திற்கு பிறகு ரஜினிக்கு தோல்வி அடைந்த படம். சில அரசியல் காரணங்களாலும், ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலும் 'குசேலன்' தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம். ( படத்தை வாங்கியவர்கள் நிஜமாகவே குசேலனாக மாறிவிட்டதாக கேள்வி)

இந்த வருடம் ரஜினி படமே தோல்வி அடைந்து விட்டதால் பலர் களத்தில் குதிக்காமல் இருந்துவிட்டனர். பிரஷாந்த், விக்ரம், ஆர்யா ( பீமா மற்றும் ஓரம் போ நீண்ட நாள் கிடப்பில் இருந்து வெளிவந்த படம்) போன்றவர்கள் இந்த வருடம் போட்டியில் இறங்கவில்லை. விஜய் (குருவி), அஜீத் (ஏகன்), விஜய்காந்த் ( அரசாங்கம்), மாதவன் (வாழ்த்துக்கள்), விஷால் ( சத்யம்) போன்ற நடிகர்கள் அட்டடென்ஸ் கொடுப்பது போல் இந்த வருடம் ஒரு படம் மட்டும் நடித்திருக்கிறார்கள். பெரிதாக சொல்லுவதற்கில்லை.

ஜீவாவின் 'தெனாவட்டு', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' சமிபத்தில் தான் வெளிவந்திருப்பதால் அதன் வெற்றியை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த படத்தை வெளியிட்டவர்களின் தொலைக்காட்சியில் இதற்கு முதல் இடம் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை.

எப்போதும் இல்லாமல் இந்த வருடம் புதியவர்கள் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். 'சுப்பிரமணியபுரம்' மற்றும் 'சரோஜா' பெரிய நடிகர்கள் இல்லாமல் கதை, திரைக்கதையால் வெற்றி பெற்ற படங்கள். 'காதலில் விழுந்தேன்' முதல் இரண்டு வாரம் நல்ல வசூலை குவித்துள்ளது. 'பொய் சொல்ல போறோம்', 'ராமன் தேடிய சீதை' இந்த வருடத்தின் சிறந்த குடும்ப படங்கள் என்று சொல்லலாம். கதைக்கு முன்னுரை கொடுத்தால், கதாநாயகர்கள் யாராக இருந்தாலும் படம் வெற்றி பெறும் என்பதற்கு இந்த படங்களே உதாரணம்.

தனுஷ்யின் 'யாரடி நீ மோகினி' , 'ஜெயம்' ரவியின் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் நல்ல குடும்ப படமாகவும் இருந்தன. ஒரு சில இடங்களில் பெண்களை முகம் சுழிக்க வைத்தாலும் 'அஞ்சாதே' நட்பு, கடமை என்று இரண்டும் கலந்த வெற்றிப் படம்.
நடிகைகளில் பிரியாமணிக்கு பருத்தி வீரனில் நடித்ததிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. நடிகைக்கு தமிழ் படத்திற்கு என்று கிடைத்திருப்பது நான்காவது முறை. நயந்தாரா கவர்ச்சியில் என்ன புதுமை செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். மற்றப்படி தமிழ் சினிமா நல்ல நடிகையை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.

எழுத்தாளர் சுஜாதா, நடிகர் எம்.என். நம்பியார், நடிகை பத்மினி அவர்களின் மரணம் தமிழ் சினிமாவின் துயர பக்கங்களாக இந்த வருடம் இருக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

பழைய வெற்றிய படங்களின் தலைப்பை வைத்து புது படங்கள் வருவதால் அந்த தலைப்பை மட்டுமல்ல பழைய படத்தின் வெற்றியையும் கெடுத்துவிடுகிறது. அடுத்த வருடமாவது சொந்தமாக தலைப்பை யோசித்து படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை எப்படி இருக்கபோகிறது அடுத்த வருடம் பார்ப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

( நன்றி : தமிழ்.சிஃபி.காம்
http://tamil.sify.com/columns/fullstory.php?id=14815216 )

Tuesday, December 9, 2008

நல்ல அனுகுமுறை வெற்றிக்கு அச்சானி

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். பலர் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கிறார்கள். வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். தங்கள் தாங்களே கட்டாயப்படுத்தி தங்கள் கடமையை செய்கிறார்கள். இன்னும் ஒரு சில பேர் தங்கள் கடமைகளை மற்றவர் மூலம் நிரைவேற்ற நினைக்கிறார்கள். தங்கள் எண்ணங்களை வரும் தலைமுறைக்கு திணிக்கப்படுவதுமாக இருக்கிறார்கள். யாரிடம் எப்படி அனுகுவது என்றே தெரிவதில்லை.

சிறந்த கருத்துள்ள நூலை எழுதினாலும், நூலகத்தில் மற்றவர்கள் எடுத்து படிக்கும் அளவிற்கு நூலின் அட்டை வடிவம் இருக்க வேண்டும். தமிழை உயிர் என்று மதித்தாலும், வியாபாரத்திற்காக வெளிநாட்டாவர்களிடம் பேசும் போது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் விழாவிற்கு நேரில் சென்று அழைப்பித்ழ் வைத்தே அழைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு காரியங்களிலும் அனுகுமுறை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. எவ்வளவு செயல் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல அனுகுமுறை மிகவும் முக்கியம்.

மீனை பிடிக்க வேண்டும் என்றால் தூண்டிலில் அதற்கு பிடித்த பூளுவைத்தான் வைக்க வேண்டும். நமக்கு பிடிக்கும் என்று கோழி கறியை வைத்து மீன் பிடிக்க நினைத்தால் எந்த மீனும் மாட்டாது. ஒரு பெண்ணை கவர்வது என்றால் அவர்களுக்கு பிடித்தை செய்ய வேண்டும். நமக்கு பிடித்தை மற்றவர்களுக்கு செய்தால் யாருக்குமே நம்மை பிடிக்காமல் போகும்.
உலகப்புகழ் பெற்ற துணித்துவைக்கும் சோப்பு இருந்தது. அதன் விளம்பரம் உலகம் முழுக்க பிரபலம். ஆனால், அந்த சோப்பை அரபியநாடுகளில் யாரும் வாங்கவில்லை. அந்த விளம்பரப்படங்களில் முதல் படத்தில் அழுக்கு துணியையும், இரண்டாவது படத்தில் சோப்பால் துணி துவைப்பதும், முன்றாவது படத்தில் வெண்மையாக இருக்கும் துணியும் இருந்தது. எல்லா நாடுகளில் இந்த சோப்பு நன்றாக விற்கப்பட்டாலும், அரபிய நாடுகளில் விற்கப்படாதா காரணம், அவர்கள் வலது புறத்திலிருந்து இடதுப்புறமாக படிப்பது தான். உலகப்புகழ் பெற்ற சோப்பாக இருந்தாலும் அந்த நாட்டில் சோப்பை விற்க எப்படி அனுகுவது என்று தெரியவில்லை.

அரசியல், மருத்துவம், சட்ட அலோசனை, பக்தி இப்படி எல்லாவற்றிக்கும் விளம்பரங்கள் தேவை என்றாகிவிட்டது. சேவை என்று கருதப்பட்ட தொழிலெல்லாம் பணத்தேவையை நிபர்த்தி செய்யும் வேலையாக மாறிவிட்டது. சேவைத் தொழிலுக்கு எப்பொது விளம்பர அனுகு முறை தேவைப்பட்டதோ மக்களும் அந்த தொழிலையெல்லாம் வியாபாரம் என்று நினைக்க தொடங்கிவிட்டார்கள்.

சேவை அனுகுமுறை இருந்த வரையில் மருத்துவம், பக்தி, வழக்கறிஞர் தொழில்களெல்லாம் மதிக்கப்பட்டது. வியாபார ரிதியாக அனுகுமுறை தேவைப்பட்டதோ எல்லா தொழில்களும் பணம் சம்பாதிப்பதே குறிக்கொள்ளாக ஆகிவிட்டது.

இன்று நல்ல அனுகுமுறையே தொழிலாக தொண்டுள்ளார்கள். ஆங்கிலம் தெரியாமல் வேலையில் கடினமா ? கவலை வேண்டாம். ஒரு மாதத்தில் ஆங்கிலம் கற்கலாம். எங்களிடம் வாருங்கள். நாங்கள் கற்று தருகிறோம்.

நடிக்க ஆசையா ? எங்களிடம் வாருங்கள். நடிப்பு பயிற்சி அளித்து சின்னத்திரையில் நடிக்க உதவிச் செய்கிறோம்.

எங்களிடம் கணிப்பொறி கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி முடித்ததும் வேலை கிடைப்பதற்கு நாங்கள் உத்தரவாதம்.

யாரிடம் எப்படி அனுகுவது என்று தெரியாதவர்களை வியாபார ரிதியாக அனுகுவது இன்றைய தொழிலாகிவிட்டது. பணம் இருந்தால் போதும் நம்மை தேடி வந்து அனுகுகிறார்கள்.

முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்குவது குதிரை கொம்பாக இருக்கும். ஆனால், மாத சம்பளம் ரூ.5000 வாங்குபவர்களை கூட தேடி கண்டு பிடித்து கடன் தருவதாக அனுகுகிறார்கள். கடன் வாங்க நல்ல அனுகுமுறை சென்று, கடன் கொடுக்க நல்ல அனுகுமுறை தேவைப்படுகிறது.

பேச்சு, உடை, திறமை இவை எல்லாவற்றிற்கும் நல்ல அனுகுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல அனுகுமுறையால் மற்றவரை கவர்ந்துவிட்டால், அதன் பிறகு வரும் தவறுகள் கூட பெரிதாக தெரிவதில்லை.

இன்றைய இந்தியனுக்கு யாரை எப்படி அனுகுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை தேடும் போது தேர்வுக்கு நன்றாக படித்து தன் திறமையை முதன்மையாக வைத்து தேடுகிறான். அரசாங்கத்தில் வேலை தேடும் போது சிபாரிசுகளும், பணத்தையும் மூலதனமாக கொண்டு வேலையை தேடுகிறான்.

உலக வங்கி கூட இந்தியாவிற்கு கடன் தருவது மனிதர்களை மதிக்கும் நல்ல அனுகுமுறையே காரணம்.

(நன்றி : சிஃபி.காம்
http://tamil.sify.com/fullstory.php?id=14585769 )

Monday, December 8, 2008

என் பதிவை பார்த்து ‘பெட்ரோல்’ விலை குறைந்தது.

டிசம்பர் 4. அன்று 'விலைக்குறையாத பெட்ரோல்' என்ற பதிவை எழுதினேன். ஏன் பெட்ரோல் விலைக்குறைக்காமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன். அடுத்த நாளே பாருங்கள், பெட்ரோல் விலை ஐந்து ரூபாய்யும், டீசல் விலை மூன்று ரூபாய்யும் குறைந்து விட்டது.

எப்படி என் பதிவு அரசாங்க பார்வைக்கு போச்சுனு தெரியல்ல... நல்ல முடிவு எடுத்திருக்காங்க.

எதோ என்னால முடிஞ்ச நல்ல காரியம் செஞ்ச திருப்தி.

காக்கை வர பணை மரம் விழுந்த கதை இல்ல... பண்ணை விழுந்த கதை :)

Thursday, December 4, 2008

விலைக்குறையாத பெட்ரோல்

சமிபத்தில் என் நண்பர் ஒருவர் கைபேசியில் எனக்கு அனுப்பிய செய்தி (எஸ்.எம்.எஸ்)...

“கடவுள் உன் மகிழ்ச்சியை
பெட்ரோல் விலைப் போல் உயர்த்தட்டும்
உன் சோகத்தை
நடிகையன் ஆடைப்போல் குறைக்கட்டும்”

நடிகையின் ஆடையால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த ஒரு நஷ்டமுமில்லை. ஆனால் பெட்ரோல் உயர்வால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்க படுகிறார்கள். அதனால் மிகப் பெரிய விவாதிக்க குரிய விஷயம் பெட்ரோல் உயர்வு தான்.

காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களின் விலையும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில் இதை ஏற்றி செல்லும் போக்குவரத்துக்கு பெட்ரோல், டிசல் இன்றியமையாத தேவையாகிவிட்டது. அதே போல் நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையான பேரூந்து, ஆட்டோ, இரு சக்கிர வண்டி என அனைத்து தேவைகளும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது.

சரியாக கணக்கு போட்டு பார்த்தால் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவில் விலை ரூ. 21 முதல் ரூ. 27 வரை விற்கலாம்.

கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நூகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

நவம்பர் 15 ஆம் தேதி, பாக்கிஸ்தானில் பெட்ரோல் விலை பத்து ரூபாயும், டிசல் விலை மூன்று ரூபாயும் இறங்கி உள்ளது.

பாகிஸ்தானில் மட்டும் குறைவான விலை... நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு உயர்வான விலை ? ஏனென்றால், மற்ற நாடுகளில் மானியங்கள் கிடையாது. அங்கெல்லாம் எண்ணை நிறுவனத்தை அரசு நடத்தவில்லை. தனியார் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் குறைவாக விற்க முடியும் என்றால் நம்மாலும் விற்க முடியும்.

இதில் நமக்கு மானியம் வழங்குகிறது என்று சொல்வது நம்மிடம் பிடுங்கி நமக்கே பிச்சையிடுவது போல் இருக்கிகறது.

பீளு கிராஸ் மட்டும் தடை விதிக்காமல் இருந்தால் காருக்கு பதிலாக ஒரு குதிரையில் வாங்கி அதில் பேர் சவாரி செய்திருக்கலாம்.

இன்று, ஒரு பேரல் கச்சா எண்ணை $45 கீழ் இறங்கியுள்ளது. ஆனால், $140 இருக்கும் போது ஏறிய பெட்ரோல் விலை, நம் நாட்டில் இன்னும் குறையாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் பெட்ரோல் விலையை குறைப்பார்களோ !!!

Monday, December 1, 2008

குண்டக்க மண்டக்க – 13

இம்சையரசனை இம்சை பண்ணிய இம்சைக்காரன்

வடிவேலு எங்கு சென்றாலும் பார்த்திபனிடம் மாட்டி கொண்டு முழிக்க வேண்டிய தாக இருக்கிறது. முழிப்பது கூட பரவாயில்லை, பார்த்திப்பன் வரும் போது அவன் பின் ஒரு பிரச்சனையும் சேர்ந்து வேற வருகிறது. அதை தான் வடிவேலுவால் சமாளிக்க முடியவில்லை. வெளியே சென்றால் தான் இந்த பிரச்சனை என்று வீட்டுக்குள்ளே இருந்து விடலாம் முடிவெடுக்கிறார். இப்படி தான் ஒரு முறை பார்த்திபன் வீட்டை வாடகைக்கு விட்டு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு மனைவியிடம் தர்ம அடி வாங்கினார். அதனால், தன் வீட்டை யாருக்கும் வாடகை விடாமலே இருக்கிறார். பார்த்திபனிடம் இருந்து தப்பிபதற்கு சகுனி மாதிரி திட்டம் போட்டாலும் அதை முறியடிக்கும் கிருஷ்ணனாக பார்த்திபன் வடிவேலு முன் தோன்றுகிறார்.

இந்த முறை பார்த்திபன் வடிவேலு வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரை பார்க்க பிச்சைக்காரன் கெட்டப்பில் போகிறார். வந்தது பார்த்திபன் என்று தெரியாமல் வடிவேலு ருத்திர தாண்டவமாடி னார்.

( பிச்சைக்கார கெட்டப்பில் ) பார்த்திபன் வடிவேலு வீட்டு கதவை தட்டினார். வடிவேலு வீட்டிக்கு யாரோ விருந்தினர்கள் தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு ஆர்வமாய் திறக்க மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வடிவேலு கதவை திறந்ததும்

பார்த்திபன் : ஐயா...சாமி. பிச்ச போடுங்க
- என்று அசல் பிச்சைக்காரன் போல் பிச்சை கேட்டார். பிச்சைக்காரனுக்காகவா மாடியில் இருந்து இறங்கி வந்தோம் என்று தன்னை தானே நொந்துக் கொண்டார். கடுப்பான வடிவேலு பார்த்திபனை மாடிக்கு வர சொன்னார். இதை தான், ஓனாய் தூக்கி வேட்டிக்குள் போடுவது என்பார்களோ...! என்று பார்த்திபன் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். பார்த்திபன் வடிவேலுவுடன் மாடிக்கு சென்றார்.

மாடிக்கு வந்தவுடன்

வடிவேலு : எதுவுமில்ல... வேற வீட்ட பாரு
பார்த்திபன் : இத கீழையே சொல்ல வேண்டியது தானே

வடிவேலு : நீ மட்டும் என்ன கீழ வர வெச்சில்ல... அது தான் பழிக்கு பழி..

ஒரு அசுர சிரிப்பு சிரித்தார். எத்தனை நாள் மற்றவர் தன்னை கேலி செய்வது. இன்று ஒரு பிச்சைக்காரனை வெறுப்பேற்றிவிட்ட சந்தோஷத்தில் வடிவேலு இருந்தார்.

பார்த்திபன் : நீ கீழையே இல்ல சொல்லியிருந்தா... நான் போயிருப்பேன். இப்ப எதாவது போட்டா தான் போவேன்.

வடிவேலு : யோவ்... யாருய்யா நீ... பிச்சக்கார பய. என்ன மிரட்டுறியா.. வெளியே போ...
பார்த்திபன் : முடியாது...
என்று கூறி தன் மாறு வேடத்தை அகற்றினார். வந்தது பார்த்திபன் என்று தெரிந்தவுடன் இஞ்சி தின்ற குரங்கை விட முகம் கேவலமாக இருந்தது.

வடிவேலு : அடபாவி...நீயா ! உனக்கு பயந்து தான் வீட்டை விட்டு வெளியே போகவே இல்ல. இப்போ வீட்டுக்கு வந்து தொல்ல கொடுக்க ஆரம்பிச்சிட்டியே...
பார்த்திபன் : உன் வீட்டுக்கு பிச்சக்காரனா வரத்துக்கு நிஜம் பிச்சக்காரன் கிட்ட ட்ரெயினிங் எடுத்திட்டு வரேன்.

வடிவேலு : உனக்கே கொஞ்சம் ஒவரா தெரியல்ல... பிச்ச எடுக்குறதுக்கு எதுக்கு ட்ரெயினிங்.
பார்த்திபன் : அப்படியா... இந்தா புடி பாத்திரத்த... நாலு வீட்டுல பிச்சை எடுத்திட்டு வா பாப்போம்.

வடிவேலு : நான் எதுக்கு எடுக்கனும்
பார்த்திபன் : நீ தான் ட்ரெயினிங் வேண்டாம்னு சொன்னியே...

வடிவேலு : ஐயோ... முடியல்ல... இப்போ உனக்கு என்ன தான் வேணும் ?
பார்த்திபன் : மூணு நாளா பட்டினி... சாப்பாடு போடு..

வடிவேலு : டேய் பொய் சொல்லாதே... உன்ன பார்த்தா மூணு நாளா பட்டினி கிடந்தவன் மாதிரி தெரியல்ல..
பார்த்திபன் : உன் கண்ணு கோளாறா இருக்கும், அதுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியாது. எனக்கு கொடுத்த ட்ரெயினிங்ல இப்படி தான் சொல்லி கொடுத்தாங்க...

வடிவேலு : ஆண்டவா... இவன என் கிட்ட அனுப்பி என்ன ஏன் இப்படி இம்ச பண்ணுற
பார்த்திபன் : நானா தான் வந்தேன். எதுக்கு ஆண்டவன இங்க கூப்பிடுற. சாப்பாடு அதிகமா இருக்கா..

வடிவேலு : எதுவும் கிடையாது... வீட்டை விட்டு வெளியே போ.
பார்த்திபன் : இவ்வளவு நேரம் பேசி எனக்கு ஒண்ணும் கொடுக்காம அனுப்ச்சா... எங்க சங்கத்துல சொல்லி உன் வீட்டுல உண்ணாவிரதம் இருப்போம்.

வடிவேலு : அடபாவிங்களா ! பிச்சக்காரங்க பாதி நாளுக்கு மேல் சாப்பிட மாட்டிங்க... அதுக்கு ஏன்டா என் வீட்டு முன்னாடி விரதம் இருக்கீங்க...
பார்த்திபன் : அப்போ தான்.. அரசாங்கம் இந்த பிரச்சனை திரும்பி பார்ப்பாங்க...

வடிவேலு : எனது அரசாங்காம்மா ? எற்கனவே எனக்கும் அரசாங்கத்துக்கும் (கேப்டனுக்கும்) ஒத்துவராது... இப்போ இது வேறையா... இரு. வீட்டுல இருக்குற சாப்பட்ட கொண்டு வரேன்.
பார்த்திபன் : அப்படி வா வழிக்கு...

வடிவேலு : (மனதுக்குள்) தெரியாதனமா... இவன மேல வர சொல்லி என் டிக்கில நானே வெடிகுண்ட வெச்சிட்டேனே...
பார்த்திபன் : என்ன புலம்புறியா....

வடிவேலு : ஒண்ணும் இல்லப்பா..

பயந்துக் கொண்டு தனக்கு வைத்த சாப்பாட்டை எடுத்து வந்து பார்த்திபனுக்கு கொடுக்கிறார்.

பார்த்திபன் : என்னது இது...?
வடிவேலு : சாப்பாடு கேட்டியே...

பார்த்திபன்: மனுஷன் சாப்பிடுவானா இத...
வடிவேலு : இது ரொம்ப ஒவரு... என் பொண்ணாட்டி எனக்கு வச்ச சாப்பாட்ட கொண்டு வந்திருக்கேன். எடுத்துக்கோ...

பார்த்திபன்: இத நிஜம் பிச்சக்காரன் கிட்ட வச்சிக்கோ... நான் படிச்ச, ரொம்ப காஸ்ட்லியான பிச்சக்காரன். நல்ல சாப்பாட எடுத்திட்டு வா...
வடிவேலு : உன் இம்சைக்கு அளவே இல்லாம போச்சு... வீட்டுல இது தான் இருக்கு வாங்கிறீயா இல்லையா...

பார்த்திபன்: டேய் நல்லா பாரு... சாப்பாடு கெட்டு போச்சிடா...
வடிவேலு : பரவாயில்ல... இப்படி தான் என் பொண்ணாட்டி எனக்கு வைக்கிறா... நான் சாப்பிடல. இன்னைக்கு ஒரு நாளைக்கு பொருத்திட்டு திண்ணு

பார்த்திபன்: கெட்டுப்போன சாப்பாட கொடுத்த நடக்குறதே வேற...
வடிவேலு : என்ன பண்ணுவ...?

பார்த்திபன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போய் உனக்கு நோட்டீஸ் விடுவேன்...
வடிவேலு : என்னது... கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கா...! என்ன இம்ச பண்ணுறதுக்கு உக்காந்து யோசிப்பியோ...

பார்த்திபன் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...
வடிவேலு :பிச்சக்காரன் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போனா யாரும் பிச்ச போடவே மாட்டாங்க... புரிஞ்சிக்கோ !

பார்த்திபன் : சரி... நீ இவ்வளவு சொல்லுறதால்ல... ஒண்ணு பண்ணலாம்..
வடிவேலு : என்னனு சொல்லு...?

பார்த்திபன் : என்னால இந்த சாப்பாட சாப்பிட முடியாது. எனக்கு நல்ல சாப்பாடு வேணும்... அதனால...
வடிவேலு : அதனால...???

பார்த்திபன் : நீயும் என் கூட வந்து பிச்ச எடு. எனக்கு நல்ல சாப்பாடு வாங்கி கொடு...
வடிவேலு : என்னது ? நான் பிச்ச எடுக்குறதா...! முடியவே முடியாது. உன்னால ஆனத பார்த்துக்கோ...

பார்த்திபன் : அப்படியா... சரி. நாளைக்கு எங்க சங்கத்துல இருந்து உன் வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த நாள் கன்ஸ்யூமர் கோர்ட்டுல இருந்து நோட்டிஸ் வரும் பார்த்துக்கோ..
வடிவேலு : ஐயோ..ஐயோ... பேசியே பீதிய கலப்புறானே... முடிவா என்ன தான் சொல்ல வர...

பார்த்திபன் : என் கூட வந்து பிச்ச எடு. நாம ரெண்டு பேரும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்..
வடிவேலு : சரி.. வந்து தொலையுறேன்... எவ்வளோ பண்ணிட்டேன்... உன்ன அனுப்ப இத பண்ணமாட்டேனா...

பார்த்திபன் : இரு அவசரப்படாத... அதுக்குனு தனி கெட்டப் இருக்கு.

என்று சொல்லி தன் பையில் இருந்து மெக்-அப் செட்டை எடுத்து வடிவேலுவுக்கு பிச்சைக்காரன் வேஷம் போடுகிறார். இருவரும் சேர்ந்து பிச்சை எடுக்க சென்றனர். இருவம் ஒரு வீட்டின் முன் நின்று பிச்சை கேக்க...

வீட்டுக்காரர் : ஏய்... கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்கு. உழச்சு சாப்பிடு...
வடிவேலு : உன் வீட்ல வேலை கொடு... நான் உழைச்சு சாப்பிடுறேன்...

வீட்டுக்காரர் : பிச்ச எடுக்குற உனக்கே இவ்வளவு திமிருனா... எனக்கு எவ்வளவு இருக்கும்.
அந்த வீட்டுக்காரர் தன் வீட்டில் இருந்த நாயை கலட்டி விட்டார்.

வடிவேலு : எங்க மேல நாய் எவினா நாங்க பயந்திடுவோமா... எங்க சங்கம் சும்மா விடுமா... என்னப்பா நான் சொல்லுறது..
பார்த்திபன் : சங்கத்த பத்தி நீ பேசாத... நீ இன்னும் அதுல மெம்பர் ஆகல..
வடிவேலு : ஓ... மெம்பர் ஆன அப்புறம் தான் பிச்ச எடுக்கனுமா...?

வீட்டுக்காரரின் நாய் வடிவேலுவை நோக்கி வர...

வடிவேலு : ஏப்பா... அவ நிஜமாவே நாய விட்டான்... வாப்பா போய்யிடுவோம்..

வடிவேலு திரும்பி பார்க்க பார்த்திபன் அங்கு இல்லை.

வடிவேலு : போச்சிடா... மறுபடியும் பிரச்சனையில மாட்டிவிட்டுடானே....

நாய் வடிவேலுவை துறத்த... வடிவேலு நாய்யிடம் இருந்து தப்பிக்க ஒடினார்.

LinkWithin

Related Posts with Thumbnails